FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, January 2, 2015

DEAF மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: நீண்ட போராட்டத்துக்கு பின் போலீஸ் வழக்குப்பதிவு

31.12.2014, ஓசூர்:
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை, நான்கு வாலிபர்கள், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்ய போலீசார் முதலில் மறுத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வழக்கு பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த, 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு, வீரபத்திரப்பா காவல் இருந்தார். அவருக்கு உணவு வழங்கி விட்டு, அவரது மகள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த கீழ்கொச்சாவூரை சேர்ந்த, வீரபத்திரன் மகன் முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த பசப்பா மகன் மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த மாதப்பா மகன் ருத்ரப்பா, 22, பசப்பா மகன் சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேரும், சிறுமியின் கையை பிடித்து இழுத்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில், வாலிபர்கள் கட்டையால் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை, நான்கு பேரும், அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்து விடுதாக மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த சிறுமி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. கடந்த, 26ம் தேதி காலை, சிறுமியின் உடையில் அதிகளவு ரத்தம் இருந்ததை கவனித்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். ஆனால், சிறுமி சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் சியாமளா, சிறுமியிடம் பேசி நடந்ததை அறிந்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யுமாறு கூறி, அஞ்செட்டி போலீசார், அவரை திருப்பி அனுப்பி விட்டனர். தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸில் புகார் செய்தபோது, அவர்கள் முதலில் புகாரை ஏற்க மறுத்தனர். ஆனால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையிட்டதால், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். நான்கு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றத்திறனாளி சிறுமிக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment