FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, January 9, 2015

மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் துவங்கிட கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கடனுதவி

08.01.2014, விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம், மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிதி ஒதுக்கீட்டுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயது வரை உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மிக குறைந்த அளவிலான 4 விழுக்காடு வட்டியில் சுய தொழில் வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. வங்கி கடன் பெற்ற மாற்றுத் திறனாளிகள், தொகையினை முறையாக செலுத்தும்பட்சத்தில், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியினை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டிதொகை இல்லாமல், சுய தொழில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கி கடனுதவி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கும், வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கடனுதவியை பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment