FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, May 18, 2016

பிளஸ்–2 தேர்வில் DEAF மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் முதலிடம்

17.05.2016, குன்னூர்,

பிளஸ்–2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

பிளஸ்–2 தேர்வு

காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கான பிளஸ்–2 தேர்வில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகராஜ் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:–

தமிழ்–110, கணினி அறிவியல்–118, பொருளாதாரம்–116, வணிகவியல்–108, கணக்குப்பதிவியல்–123. மொத்தம்–575.

மாணவர் நாகராஜின் தந்தை சுந்தரம். தாயார் தமிழ்செல்வி. இவர்கள் மஞ்சூர் அருகே உள்ள குட்டிமணி நகரில் வசித்து வருகிறார்கள். மாணவர் நாகராஜ் தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– பள்ளி ஆசிரியர்களின் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டராக விருப்பம்

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா மாவட்ட அளவில் 2–ம் இடம் பிடித்து உள்ளார். இவருடைய தந்தை ராஜன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. சிந்துஜாவுக்கு சுஜித் (15) என்ற தம்பி உள்ளார். இவரும் அதே பகுதியில் 9–வது படித்து வருகிறார். இவருக்கும் வாய் மற்றும் காது கேட்காது. சிந்துஜா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:– தமிழ்–98, இயற்பியல்–112, வேதியியல்–109, தாவரவியல்–98, உயிரியல்–80. மொத்தம்–497.

மாணவி சிந்துஜா தனது தந்தை உதவியுடன் சைகை மூலம் கூறியதாவது:– நான் மற்ற மாணவ–மாணவிகள் படித்து வரும் வகுப்பில் படித்து வருகிறேன். ஆசிரியர், ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்கள் வாய் அசைவில் அதனை புரிந்து கொள்வேன். வகுப்பை நன்கு கவனித்து விட்டு இரவு 7 மணி முதல் 10 மணி வரை பாடங்களை படிப்பேன். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஊராட்சி மூலம் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளேன். மாற்றுத்திறனாளி என்பதால் எனது மேல்படிப்புக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment