FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, May 25, 2016

மாற்றுத் திறனாளிகள் துறையின் பெயர் அதீத திறனுடையோர் துறை என மாற்றம்

25.05.2016. 
மத்திய அரசின் "மாற்றுத் திறனாளிகள்' அதிகாரமளித்தல் துறையின் பெயரை, "அதீத திறமை கொண்டவர்கள்' துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஹிந்தியில் "விக்லாங்ஜன்' (மாற்றுத் திறனாளிகள்) என்பதற்குப் பதிலாக, இனிமேல் "திவ்யாங்' (அதீத திறனுடையோர்) என்று மாற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில், "மாற்றுத் திறனாளிகள் அதீத திறமை கொண்டவர்கள்; அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என அழைப்பதற்குப் பதிலாக, "அதீத திறமை கொண்டவர்கள்' எனக் குறிப்பிட வேண்டும்' என்றார்.
அதையடுத்து பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பெயர் மாற்றம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.

No comments:

Post a Comment