FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 18, 2016

DEAF மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

18.05.2016
பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான நஷ்ரத் 1,000-க்கு, 878 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஹனீபா கோவை செல்வபுரம் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். தாயார் குர்ஷித் இல்லத்தரசியாக உள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கோவையில் காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களை சேர்க்க அதிக அளவில் கல்லூரிகள் இல்லை. மேலும், அவர்கள் பட்டயப் படிப்பு முடிக்கும்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் வேலை கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே, பேஷன் டிசைனிங் படிப்பதே நஷ்ரத்தின் லட்சியம் என்றனர்.

அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் : தமிழ்-163, பொருளாதாரம்-183, வணிகவியல்-179, கணக்குப்பதிவியல்-195, வணிகக்கணிதம்-158.

அதே பள்ளியைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத மாணவி ஷாஜிதா ஆயிஷா 872 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த இவரது தந்தை முகமது முஸ்தபா, சுயதொழில் செய்து வருகிறார். தாயார் நஸ்ரத் பானு இல்லத்தரசி ஆவார்.

இதுகுறித்து அவரது தந்தை முகமது முஸ்தபா கூறியதாவது:

பள்ளியில் சிறப்பான பயிற்சியும், தனிக் கவனம் செலுத்தி பாடத்தை கற்றுக் கொடுத்ததால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்:

தமிழ்-158, பொருளாதாரம்-187, வணிகவியல்-177, கணக்கு பதிவியல்-184, வணிக கணிதம்-166.

இதேபோல், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் பூபதி வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். பொள்ளாச்சி வக்கம்பாளையத்தை சேர்ந்த இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-106, ஆங்கிலம்-113, புள்ளியியல்-124, பொருளாதாரம்-124, வணிகவியல்-70, கணக்குபதிவியல்-172 என மொத்தம் 709 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment