FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, May 26, 2016

சைக்கிள் கடையில் வேலைபார்த்து கொண்டே படித்த காதுகேளாத மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்

26.05.2016
தனது மாமாவின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்துத் தேர்வெழுதிய காது கேளாத தருமபுரி மாணவர் மாரியப்பன், காது கேளாத - வாய்ப் பேச இயலாத மாணவர்களில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
தருமபுரியை அடுத்த பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துத் தேர்வெழுதிய இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 90, கணிதம்- 100, அறிவியல்- 90, சமூக அறிவியல்- 95. மொத்தம் 375.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கே.கலா கூறியதாவது: காது கேளாத மாரியப்பனுக்கு எங்கள் ஆசிரியர்கள் சைகையிலேயே பாடம் நடத்திக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சைகை மொழி சுலபமானது. மாரியப்பனின் தந்தை இறந்து விட்டார். அவரது மாமா நாராயணனின் சைக்கிள் கடையில் வேலை பார்த்துக் கொண்டுதான் படித்தார்.
பாடம் சொல்லித் தரும்போது சில நேரங்களில் தன்னுடைய இயலாமையை எண்ணிக் கண் கலங்கியிருக்கிறார் என்றார் கலா.
தமிழாசிரியை உதவியுடன் மாணவர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகிழ்ச்சியாக இருக்கிறது; டாக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்.

No comments:

Post a Comment