FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 3, 2018

காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதாவுக்கு நடந்த சுயம்வரம்; 2 மாப்பிள்ளைகள் தேர்வு

02.07.2018
இந்துார் : பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண் கீதாவுக்கு திருமணம் செய்ய நடந்த சுயம்வரத்தில், இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோரை பிரிந்து, 9வது வயதில், ரயில் ஏறி, பாகிஸ்தான் நாட்டின் லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, அங்குள்ள தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்தார். அந்த சிறுமிக்கு, கீதா என, பெயரிட்டார்.

மத்திய அரசின் நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பிய கீதா, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், தன் பெற்றோரை தேடி வருகிறார். தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.

பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார். இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கீதாவை திருமணம் செய்ய, விருப்பம் தெரிவித்தவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது. இந்த, 25 பேரும், கீதாவை சந்திக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த, தலா ஒருவரை, கீதா தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், கீதா மனநிலை மற்றும் உளவியல் ரீதியாக சரியான பின், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என, அவரது பாதுகாவலரான ஞானேந்திர புரோஹித் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு பேரில், யாரையாவது ஒருவரை, கீதா, தேர்வு செய்வதற்காக, மீண்டும் சுயம்வரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment