FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, July 12, 2018

சிவகங்கை அருகே வாய்பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பெயின்டர் கைது


11.07.2018
சிவகங்கை திருப்புத்தூர் அருகே வாய் பேச முடியாத சிறுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 27 வயதான பெயின்டர் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரை அடுத்த அச்சரம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. வாய் பேச முடியாதவர். இவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள் ஆவர். 

நேற்று முன்தினம் இவரது தந்தையும், தாயும் வெளியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்தார்.

மேலாடையின்றி கிடந்த சிறுமி 
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் நேற்று முன்தினம் மதியம் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். அப்போது சிறுமி, ரத்த காயங்களுடன் மேலாடை இல்லாமல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீசாருக்கு தகவல் 
இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு வந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

3 தனிப்படைகள் 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

பெயின்டர் மாணிக்கம் 
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் மாணிக்கம் என்ற 27 வயதான நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஒப்புக்கொண்ட பெயின்டர் 
போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

பலாத்காரம் செய்ய முயற்சி 
இதுகுறித்து மாணிக்கம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த அந்த வாய் பேசமுடியாத சிறுமியை மாணிக்கம் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

தோட்டத்தில் வைத்து பலாத்காரம் 
இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து விடுவார்களோ என்று அச்சமடைந்த மாணிக்கம் ஆசைக்கு இணங்காத சிறுமியை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த தலையில் தாக்கியுள்ளார். பின் அவரை தோட்ட பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment