FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 17, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்: காதுகேளாதோர் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் மனு

16.07.2018, சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரே‌ஷன் கார்டு கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், காவல் துறை மனுக்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் தொடர்பான மனுக்கள் என 308 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மானாமதுரையில் ஓடும் ரெயிலில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணை கற்பழித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதேபோன்று திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களால் மாற்றுத்திறனாளிகள் தங்களை காப்பாற்றி கொள்வது என்பது கடினமாகிவிட்டது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்வம் கொடுத்த மனுவில், நாட்டரசன்கோட்டையில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றிலும் 15 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நடைபெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளுக்கு சிவகங்கையில் இருந்து தான் போலீசார் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நாட்டரசன்கோட்டையில் புதிதாக ஒரு போலீஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment