FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 17, 2018

வாய் பேச முடியாத & காது கேளாத மாற்றுத் திறனாளியிடம் கொள்ளை: சைகையில் கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொள்ளையர்கள்!

17.07.2018
சென்னை வளசரவாக்கத்தில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி இளைஞரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் ரங்கேஷ். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், போரூரில் உள்ள உணவகத்தில் பார்சல் கட்டித் தரும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.

வழக்கமாக உணவகத்தில் பணிமுடிந்து நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில்தான் ரங்கேஷ் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் ரங்கேஷின் கழுத்தில் மின் வயரால் இறுக்கி தாக்கியுள்ளனர். இதனால் அச்சத்தில் ரங்கேஷ் வாகனத்தை நிறுத்தியபோது 4 பேரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வாய் பேச முடியாத ரங்கேஷ், சைகை மூலம் அவர்களிடம் அழுது புலம்பியபோதும், துளியும் இரக்கமின்றி கொள்ளையர்கள் அவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 4 பேரும் முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ரங்கேஷ் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment