FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, November 30, 2018

குறும்படத்திற்கு சர்வதேச விருது

29.11.2018, சென்னை: தனியார் நிறுவனம் தயாரித்த குறும்படத்திற்கு, சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், 'வித்தியாசமான மொழி' என்ற தலைப்பில், குறும்படம் ஒன்றை தயாரித்தது.இந்த படத்தின், கதை கருவை, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இயக்குனர், லதா கிருஷ்ணா, எழுதி இயக்கினார்.இப்படம், எம்.ஜி.ஆர்., இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், தங்கள் வாழ்வில் முன்னேறுவதை பற்றி, விரிவாக எடுத்துரைக்கிறது.இது, 'கேன்ஸ் கார்ப்பரேட்' ஊடக விருதுகள் போட்டியில் இடம் பெற்றது. இதில், சர்வதேச அளவில், 2,000 குறும்படங்கள் இடம் பெற்றன.அதில், இரண்டாவது விருதான, 'சில்வர் டால்பின்' விருதை, இக்குறும்படம் தட்டிச் சென்றது. லண்டனைச் சேர்ந்த தாமஸ் பால் மார்ட்டின் என்பவர் இயக்கிய, 'எஸ்கேப் ரோபோ' எனும் திரைப்படத்திற்கு, 'கோல்டு டால்பின்' விருது வழங்கப்பட்டது.லதா கிருஷ்ணா, பிரபல தொலைக்காட்சி இயக்குனர் மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தான் இயக்கிய, 'இறைவன் ஆடும்போது' எனும், 'டிவி' தொடருக்கும், 'சாவித்திரி' எனும் குறும்படத்திற்கும், சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment