FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 10, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச எஸ்எம்எஸ் வசதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்


சென்னை, ஜன.8-காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கைபேசிகளில் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து தரப்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம், சென்னை காதுகேளாதோர் சங்கம் சார்பில் சென்னையில் புதனன்று (ஜன.8) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி “செல்போன் வைத்திருக்கும் அனைவரும் குரல் வழியாகவும், குறுஞ்செய்தி வழியாக பேசி வருகிறார்கள். மாற்று திறனாளிகள் குறிப்பாக காது கேளாதோர் எந்த நபருக்கும் பேச இயலாது எனவே அவர்கள் குறுஞ்செய்தி வழியாக பேசி வருகிறார்கள், இந்த குறுஞ்செய்தி சேவைக் கட்டணத்தை பண்டிகை காலங்களில் மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தி விடுகிறார்கள், இதனால் காது கேளாதோர் மற்றவர்களுக்கு முக்கிய தகவல்களைக் கூட தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு மேலும், ஒரு நாளைக்கு 100, எஸ்எம்எஸ் தான் ஒரு சிம் கார்டிலிருந்து அனுப்ப முடியும் என்கிற கட்டுப்பாடும் இந்த தகவல் தொடர்பு சாதனத்தை மட்டுமே நம்பியுள்ள காதுகேளாத வாய்பேசாதோரை மிகக் கடுமையாக பாதிக்கின்றது. தனியார் நிறுவனங்கள்தான் லாப நோக்கோடு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றால், மாற்று திறனாளிகளுக்கு துணையாக இருக்க வேண்டிய பொதுத் துறை பிஎஸ்என்எல் நிறுவனமும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மாற்று திறனாளிகளுக்கு எதிராக உள்ளது.எனவே அரசு பண்டிகை காலங்களில் குறுஞ்செய்திகளுக்கு முழு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும், மாற்று திறனாளி ஒருவர் புதிய சிம்கார்டு வாங்கினால் மாற்று திறனாளி என்பதற்கான அடையாள அட்டையை இணைத்து குறுஞ்செய்தி இலவசமாக அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர் ஏ.கிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் முருகன், சென்னை காதுகேளாதோர் சங்கத்தின் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Thanks to

No comments:

Post a Comment