FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 16, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா நிறைவேற்றப்படும்

புது தில்லி, 16 January 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மசோதா பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் "சமர்த் 2014' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சோனியா காந்தி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுத் துறை நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதமாகவும், ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 1995-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் இந்த திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை சமூக நீரோட்டத்துடன் அரசு இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.

அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியமாகும்.

அவர்களது சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய நாம் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் பிரச்னைகளை நாம் மருத்துவ ரீதியில் மட்டுமே அணுகுகிறோம். இதை நாம் மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.

Thanks to

No comments:

Post a Comment