FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 23, 2014

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை செல்பேசி நிறுவனங்கள் தளர்த்த கோரி மாற்று திறனாளிகளின் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

 
22.01.2014, புதுச்சேரி
காதுகேளாதோர் வாய்ப்பேசமுடியாதோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள குறுந்செய்தி அனுப்பும் வசதியை தடுக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 குறுந்செய்தி மட்டுமே அனுப்பமுடியும் என்ற பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்பேசி நிறுவனங்களின் கட்டுபாட்டை உடனடியாக தளர்த்த வேண்டும்.சலுகை கட்டணத்தில் குறுஞ்செய்தி அனுப்ப திட்டங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் இச்சலுகை மறுக்கப்பட்டு முழு கட்டணம் என்ற பெயரில் குறுஞ்செய்திக்கு கூடுதல்தொகை வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.ஒரு நிமிட தொலைப்போசி உரையாடலை காதுகேளாதவாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் குறுஞ்செய்தி மூலம் உரையாடினால்,குறைந்தபட்சம் 20குறுஞ்செய்திகள் அனுப்ப நேரிடுகிறது எனவே முழுகட்டணத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காதுகேளாதோர் கூட்டுறவு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.லட்சுமனன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசினார்.புதுச்சேரி தலைவர் ராஜாங்கம்,புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு செயலாளர் பாலமுருகன்,எல்ஐசி முகவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராம்ஜி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment