FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, January 13, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

111
 
திருப்பூர் 06.01.2014,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை மற்றும் நல உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழக மேற்கு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்ஆகியோர் பேசினர்.விழாவில் உடுமலை, அவினாசி, காங்கயம், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வீடு இல்லாத 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்படும் வங்கிக்கடன் தொகைக்கு ஜாமீன் கேட்கும் விதியை தளர்த்த வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் உள்ள கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரே பஸ்சில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பொது கழிப்பிடங்கள் நடத்தும் உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வீடு இல்லாத 1,500 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment