FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 8, 2014

மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை

07.01.2014, சென்னை:
மாற்று திறனாளிகள் சங்க மாநில துணை தலைவர் தீபக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2010ல் சுதாகவுர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலனை பேணிக் காப்பதற்கும், அதற்கான சட்டம் அமைக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. 2011ல் குழு விரிவான அறிக்கை தயாரித்து 2012ல் மத்திய சமூக நலத்துறை, சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மாநில அரசுகள் ஆகியவற்றின் கருத்துக்களை கேட்க அனுப்பியது. எந்த ஒரு சட்டத்தையும் விவாதத்துக்கு பிறகே அமல்படுத்த வேண்டும். தற்போதைய மத்திய அரசின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை விவாதமின்றி நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதுநாள் வரை இந்த சட்டம் குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு அளிக்கவில்லை. இந்த சட்டத்தை விவாதத்துக்கு பிறகே நிறைவேற்ற வேண்டும் என்றார். பேட்டியின்போது சந்திரகுமார், மீனாட்சி, ராஜீவ்ராஜன், அம்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

Thanks to

No comments:

Post a Comment