FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, November 10, 2015

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

திருநெல்வேலி, 10 November 2015
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்தி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் வழியாக கடன் வழங்கும் "நீட்ஸ்' என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண், இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வியாபாரம், வாகனம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. வங்கியிலிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர் பயனாளிகளுக்கு, ஒரு மாத கால மேலாண்மைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பயனாளிகள் தமது பங்கு மூலதனமாக திட்ட முதலீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதம், பொதுப் பிரிவினர் 10 சதம் செலுத்தி வங்கியில் நிதியுதவி பெறலாம்.

அப்போது, மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத் தொகை வங்கிக்கு வழங்கப்படும். 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ25 லட்சம் வரை) தகுதியிருப்பின் மேலும், வரிச் சலுகை, மின் கட்டணத்தில் மானியம், மின்னாக்கி மானியம், வட்டி மானியமும் பெற வாய்ப்புள்ளது.

இவை தவிர, தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டண மானியம், வேலைவாய்ப்புப் பெருக்க மானியம், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான மானியம், சிறப்பு தொழில் நிறுவனங்கள், சிறப்பு இன தொழில்முனைவோருக்கான மானியம் போன்ற மானியங்களும் பெறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அலுவலகத்தில் 12ஆம் தேதி முற்பகல் 11 முதல் மாலைவரை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment