FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, November 3, 2015

நவ. 13-இல் இலவச மனைப்பட்டா கோரி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்


நாமக்கல், 03 November 2015
இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நவம்பர் 13-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எ,பழனிவேல் கூறியது:
குமாரபாளையம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை. இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செப்டம்பர் மாதம் மனு அளிக்கப்பட்டது. இம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இருப்பினும், அங்கு புறம்போக்கு நிலம் இல்லை என வருவாய் ஆய்வாளர் பதில் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் வரும் 13-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment