FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 5, 2015

அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர், 05 November 2015
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.

போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். குமார் தொடங்கிவைத்தார். போட்டிகள் 4 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது.

கை, கால் ஊனமுற்றோருக்கு 100, 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, இறகு பந்து மற்றும் மேசை பந்து ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50, 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50, 100 மீ. ஓட்டம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டும், காது கேளாதோருக்கு 100, 200, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 169 மாணவ, மாணவிகள் வயதுவரம்பின்றி பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கையுந்து பந்து பயிற்றுநர் ஆர். பொற்கொடி, பளுதூக்கும் பயிற்றுநர் ஆர். சதீஷ், கைப்பந்து பயிற்றுநர் எஸ். சிவரஞ்சன், அன்பகம் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் எம். ஜெரோம் எமிலியானா பவுலின், எஸ். ரஞ்சிதா, எம். எலிசபெத் ராணி, ஏ. ஆரோக்கியமேரி, திருசக்திவேலன், கபிலன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment