FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, November 19, 2015

நாளை மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

நாகர்கோவில், 19 November 2015
கன்னியாகுமரி மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை அவசியம். தடகளம், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீட்டர் நீளம் தாண்டுதல், சக்கர நாற்காலி, குழு விளையாட்டு, இறகுப் பந்து, மேஜைப் பந்து, குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், வாலிபால் பந்து, கபடி உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment