FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, November 1, 2015

கடின உழைப்புக்கு முன் உதாரணம் மெழுகுவர்த்தி தயாரிப்பில் அசத்தும் பார்வையற்றோர்

31.10.2015, புதுடெல்லி: தங்களால் உலகத்தை பார்க்க முடியாவிட்டாலும், தாங்கள் செய்யும் பொருட்களால் உலகமே வெளிச்சத்திற்கு வருவதற்காக உழைக்கின்றனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட லோதி சாலை அருகிலுள்ள லால் பகதுர் சாஸ்திரி சாலையில் உள்ளது பார்வையற்றோர் நிவாரண சங்கம். இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் உள்ளனர். இவர்கள் தங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக மெழுகுவர்த்தி செய்யும் தொழிலை செய்கின்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற நிவாரண சங்க திட்ட இயக்குனர் டேவிட் கூறியதாவது: இந்த மையம் பார்வையற்றோருக்கான மறுவாழ்வு மையமாகவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இங்கு பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 பேர் உள்ளனர். இதில் 210 பேர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், மற்ற 90 பேர் சுய தொழில் செய்பவர்கள். எங்களின் முக்கியமான தொழில் மெழுகுவர்த்தி செய்வது. ஆண்டு முழுவதும் மெழுகுவர்த்திகள் செய்யப்படும். மண் குவளை மெழுகுவர்த்தி உட்பட சுமார் 90 ரகங்களில் இங்கு மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. மூலப் பொருட்களை வாங்கி வருவது, பேப்பர்களை வெட்டித் தருவது போன்ற வேலைகள் மட்டுமே வெளி மார்க்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு வாங்கப்படுகிறது. மற்றபடி மெழுகுவர்த்தி முழுவதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

மெழுவர்த்தி செய்வதற்கு மாற்றுத்திறனாளிகளை கொண்டே, பார்வையற்றோருக்கு கற்றுத்தரப்படுகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. சுய வேலைகளில் ஈடுபடுபவர்கள் முழு நேரமாகவும், மாணவர்கள் பகுதி நேரத்திலும் மெழுகுவர்த்தி செய்யும் வேலையை விரும்பி செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் விற்பனை கண்காட்சி நடப்பதால், மெழுகுவர்த்தி செய்யும் வேலை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சிறியதாக தொடங்கிய மெழுவர்த்தி செய்யும் தொழில் தற்போது நல்ல நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. கண்காட்சியின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை நடத்த பலர் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பல மாநிலங்களில் இதுபோன்ற விற்பனை கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாட்டு பயணிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு வந்து மெழுகுவர்த்தி வாங்கிச் செல்கின்றனர். மாநில அரசு சார்பில் கண்காட்சிக்கு தேவையான சில உதவிகள் கிடைத்தாலும், ஏற்றுமதி செய்வதற்கும், மற்ற மாநிலங்களில் கண்காட்சி ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் மட்டுமே இங்குள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மெழுகுவர்த்தி தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment