FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, November 21, 2015

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகை: ரூ.3,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்

20.11.2015, சேலம்: 
''சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நேரு கலையரங்கில், 62வது அனைத்திந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழா நாளை(இன்று) நடக்கிறது. மாநில அளவிலான விழா, முதன்முறையாக சேலத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், பால்பண்ணை கடன், ஆடு, கோழி பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு கடன், விவசாய கருவிகள் கடன் என, 1,419 பயனாளிகளுக்கு, 5.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், 60 கிளைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை, 2,956 கோடி ரூபாய். கடந்த ஆண்டை காட்டிலும், 120 கோடி ரூபாய் வைப்புத்தொகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், 3,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதை எட்டிப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியதற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment