FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, October 9, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு

09.10.2015
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 விருதுகள் மற்றும் சான்றிதழ்களுக்கு வரும் 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள், 3.12.2015, மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.விருதுகள் விவரம் விருதுகள்1) சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்(கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர், செவித் திறன்பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சிகுன்றியோர் மற்றும் தொழுநோயால்குணமடைந்தோர்)5 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்2 சிறந்த ஆசிரியர் -(பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்குகற்பித்தல், செவித் திறன்பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும்மன வளர்ச்சி குன்றியோருக்குகற்பித்தல்)3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்3 சிறந்த சமூகப் பணியாளர் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்4 மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தசிறந்த தொண்டு நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்5 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில்பணியமர்த்திய சிறந்த நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில்பணியாற்றும் சிறந்த ஆசிரியர்(செவித் திறன் குறைந்தோருக்குகற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும்சிறந்த ஆசிரியர்)2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்7 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகபணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்மொத்தம் 15 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேருஉள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை - 78 அல்லது www. scd.tn. gov. in என்ற இணையதளமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 26.10.2015க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment