FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 12, 2015

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

வங்கிகளின் வங்கி என்றழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. தற்போது மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 'கிரேடு-பி' அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 67 இடங்களும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 13 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1985 மற்றும் 1-10-1994 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எம்.பில் மற்றும் பி.எச்டி. படித்தவர்கள் 32 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். இதில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 23-10-2015.
இது பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.rbi.org.in என்ற இணையத்தை பார்க்கலாம்.

நபார்டு வங்கி

தேசிய வேளாண் மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சுருக்கமாக 'நபார்டு' வங்கி என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் 'டெவலப்மென்ட் அசிஸ்டன்ட்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள 24 மாநில கிளைகளில் மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு 7 பணியிடங்கள் உள்ளன. இடஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 56 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 10 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 31-7-15 தேதியில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றோர் ரூ.50-ம் மற்றவர்கள் ரூ.450-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். புகைப்படம் மற்றும் கையப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் முன்னதாக இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

30-10-15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment