FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, October 3, 2015

அரசு ஐடிஐ-களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம்: நேரடி நியமன நெறிமுறைகள் வெளியீடு

03.10.2015
தமிழகத்தில் உள்ள ஐடிஐ-களில் இளநிலை பயிற்சி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தகுதி மற்றும் தேர்வு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஐடிஐகளின் பயிற்சியாளர் பிரிவில் 350க்கும் மேற்பட்ட இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்புவதற் கான புதிய வழிமுறைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் இன சுழற்சி அடிப்படையில் பெறப்பட வேண்டும்.

நேரடி நியமனம் குறித்த விளம்பரம் வெளியிட்டு அதன் மூலமும் விண்ணப்பங்கள் பெற வேண்டும். தேர்வுக்கு ரூ.100-ம், விண்ணப்பம் மற்றும் நடைமுறை கட்டணமாக ரூ.50-ம் வசூலிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எஸ்சி அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கல்வி கட்டணம் இல்லை.

விண்ணப்பங்களை பரிசீலித்து மாநில அளவில் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின் செயல்திறன் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் இளநிலை பயிற்சி அதிகாரியை தேர்வு செய்யலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான மதிப் பெண்கள், அனுபவம் மற்றும் தகுதிக்கான மதிப்பெண்களும் அரசாணையில் வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment