FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, October 6, 2015

நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

கடலூர், 06 October 2015
நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்க வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த உதவித்தொகை சில வட்டங்களில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவோரை உதவித்தொகை தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் அணுகும் போது வங்கிகளுக்கும், தபால் நிலையத்துக்கும் அலைய விடுகின்றனர். இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், உதவித்தொகை மாதந்தோறும் அதிகபட்சம் 10-ஆம் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனுவை சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், செயலர் பொன்.சண்முகம், பொருளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

No comments:

Post a Comment