FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 26, 2015

திருப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் கலெக்டர் அறிவிப்பு

26.10.2015, திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் (கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் மட்டும்) காலிபணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த காலிபணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் டிப்ளமோ பட்டயப்படிப்புக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கல்வி தகுதியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பயிற்றுவிக்கும் ஜூனியர் மற்றும் சீனியர் டிப்ளமோ பட்டயப்படிப்பு சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தாள் 2–ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

மேற்கண்ட கல்வி தகுதியை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவு விவரங்களை இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்குள் நேரில் வந்து சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment