FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, October 5, 2015

என்று மாறும் இந்தநிலை? விசா கிடைக்காததால் சாலையில் படுத்துறங்கிய காதுகேளாதோர் தடகள வீரர்கள்


புது தில்லி, 05 October 2015
தாய்வான் நாட்டில் நடைபெறும் ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தில்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்கள் 40 பேர், விசா கிடைக்காததால் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டைத் தவிர, பல்வேறு விளையாட்டுத் துறைகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெற்று வரும் போது கொண்டாடும் மத்திய அரசு, அவர்களுக்கு போதிய ஆதரவு அளிப்பதில்லை என்பது பல காலமாக இருக்கும் குற்றச்சாட்டுகள்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், புது தில்லி விமான நிலையத்தில் தாய்வான் விசா கிடைக்காததால், மத்திய அரசு தங்கும் வசதி செய்து கொடுக்காத நிலையில், 40 மாற்றுத்திறனாளி இந்திய வீரர்கள், குருத்வாரா வழிபாட்டுத் தலம் அருசே சாலையோரம் படுத்து உறங்கியுள்ளனர்.

பிறகு, அவர்களுக்கு விசா கிடைத்து தாய்வான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment