FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 8, 2015

லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி, 08 October 2015
திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும்.

எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவச் சான்றுகளை வழங்குவர்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்று, தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

எனவே, இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, குடும்ப அட்டை அசல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டாரத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், அடையாள அட்டை அசல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாதாந்திர உதவித் தொகை மற்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment