FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, April 6, 2020

கொரோனா அச்சுறுத்தல்: அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு..!

வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.

தமிழகத்தில் அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல தங்களை முழுமையாக தனிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் அன்றாட சுய பாதுகாப்பு பணிகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து வழக்கமான உதவி தேவைப்படுகிறது.

மேலும், மளிகைப் பொருள்களை வைப்பது சில ஊனமுற்றோருக்குச் செய்வது கடினம். மேலும் அவர்கள் போக்குவரத்துக்கு மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கக்கூடிய நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்றுநோய் பரவுதலில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இது இயல்பான மனிதர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும்? கைகளை எங்கும் தொடாதீர்கள், பிறருக்கு கை கொடுக்காதீர்கள் என கூறும் நிலையில் அவர்களுக்கு கைகள் தான் கண்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன.

இதற்காக சென்னை கே கே நகரில் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்ணுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாய் பேச முடியாத காது கேளாதோர் அந்த கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல sign language interpretor இருக்கின்றனர்.மேலும் வீடியோ கால் மூலமாக அழைப்பவர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் என்னென்ன அரசு அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வு செய்தி போன்றவை sign language interpretor ரூத் எபினேசன் பதில் அளிக்கிறார். இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் பயன்பாட்டில் உள்ளது.

வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.

தினமும் 1000-1500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் 50-70 அழைப்புகள் வாய் பேச முடியாத காது கேளாதோர்களாக இருக்கின்றனர். மேலும் கண் தெரியாதவர்களுக்கு அவர்களுக்கு உதவி புரிபவர்களாக இருப்பவர்கள் வீடியோகால் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் கேட்டு அறிந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானிடாம் அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அதை தங்களது உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

05.04.2020
புதுச்சேரி; மாற்றுத்திறனாளிகள் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக நலத்துறை இயக்குநர் அசோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவிட் -19 சூழ்நிலை காரணமாக மாற்றுத்திறனாளிகளின் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர கால உதவி தேவைப்பட்டால், 94430 80954, 97916 31555, 94434 88322 மற்றும் 94422 79550 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இதர மாற்றுத்திறனாளிகள் தங்களின் அவசர கால உதவிக்கு 96002 19478 மற்றும் 94439 59800 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் தனிநபர்களுக்கு உள்ளூர் இயக்கத்திற்கான அனுமதி சீட்டு பெற http://forms.gle/kk4b8MQCgbZAUKbc8 என்ற இணைப்பிணை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 75983 89108, 82484 53481 ஆகிய மொபைல் எணகளில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.