FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label சாதனைகள். Show all posts
Showing posts with label சாதனைகள். Show all posts

Saturday, December 13, 2025

சத்தமே வரல.. ஆனாலும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக.. அரங்கத்தை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்



12.12.2025
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கஷ்டப்பட்டுப் படித்து இப்போது தனது பெற்றோரைக் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அதைக் கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் கலங்கிய நிலையில், அடுத்து நடந்த சம்பவம் அரங்கத்தையே அதிர வைத்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அத்தோடு சேர்த்து வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் அந்தத் திட்டம் குறித்துப் பேசினார்.

மாற்றுத்திறனாளி பெண்
அப்போது காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சைகை மொழியில் பேசவே அதை அருகே இருந்த மற்றொரு பெண், மொழிபெயர்ப்பு செய்தார். அந்தப் பெண் பேசுகையில், "நான் அரியலூர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். எனது அப்பா மற்றும் தந்தை வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான். எனது குடும்பத்தில் மிகவும் கஷ்டமான ஒரு நிலை தான். அப்பா விவசாயம் செய்கிறார். அம்மா வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். ஒரு ஏழ்மையான நிலையில் தான் இருக்கிறோம். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்

எனது தந்தைக்கு வெளியுலகம் தெரியாது. இதனால் வேறு இடங்களுக்கும் வேலைக்குப் போக முடியவில்லை. அவருடன் பிறந்த எல்லாரும் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான்! இந்தக் கஷ்டத்தில் இருந்து உடைத்து வெளியே வர வேண்டும் என யோசித்தேன். அப்போது எனது உறவினர்களே பலரும் +2 வரை படித்தது போதும் விவசாயம் பாருங்கள் என்றே சொன்னார்கள்.

5 ஆண்டுகள் வேலை கிடைக்கல
அம்மா தான் தொடர்ந்து படிக்கச் சொன்னார். இதனால் சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பையும் கூட கஷ்டப்பட்டு தான் முடித்தேன். அப்போதும் கூட ஈஸியாக வேலை கிடைக்கவில்லை.. 5 ஆண்டுகள் வேலை தேடி அலைந்தேன். நீ மாற்றுத்திறனாளி உன்னால் சமாளிக்க முடியாது.. சென்னையில் வாழ முடியாது எனச் சொல்லி பலரும் கஷ்டப்படுத்தினார்கள். அப்போது முதல்வர் கொடுக்கும் உதவித்தொகை தான் பெரியளவில் கை கொடுத்தது. மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது.


அந்தச் சூழலை எப்படியாவது உடைக்க வேண்டும் என்றே நினைத்தேன். எல்லாராலும் முடியும்போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன். அப்பாவுக்கு இருக்கும் சூழல் நமக்கும் வந்துவிடக்கூடாது என நினைத்தேன். உன்னால் முடியாது என்றே பலரும் தொடர்ந்து சொன்னார்கள்.

கை கொடுத்த முதல்வரின் திட்டம்
அப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. நம்மிடம் திறமை இருக்கிறது.. எல்லாராலும் முடியும் போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன்.. கல்லூரி படித்த பிறகும் 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தது. அப்போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.. அம்மா தான் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார். தீவிர முயற்சிக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே மனதை விட்டுவிட்டேன்.. நம்மால் முடியாது தான் போல என யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கேயே எனக்குப் பயிற்சி கொடுத்தனர். நிரந்தரமாக வேலையும் கிடைத்தது.

அப்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. குடும்பச் சூழலை மாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா, அப்பாவை நானே எனது வருமானத்தில் பார்த்துக் கொண்டேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தபோது தான் இந்தத் திட்டம் எனக்குப் பெரியளவில் கை கொடுத்தது. ஈஸியாக வேலை கிடைத்தது. அத்தனை பேர் முடியாது என்ற போதிலும், என்னால் சாதிக்க முடிந்தது. இதற்காக நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அரங்கமே அதிர்ந்தது
அவரது இந்தப் பேச்சு பலரையும் கலங்க வைத்தது. இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் தங்கள் கைகளை உயர்த்தி, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கைகளை தட்டும் வகையில் சைகை செய்தனர். ஒரு துளி சத்தம் வரவில்லை என்றாலும் அரங்கமே அதிரும் வகையில் இந்தச் சம்பவம் இருந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.




Wednesday, August 13, 2025

தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை


காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்று ஐஏஎஸ், எம்பிபிஎஸ் எனும் உயா்நிலைக்கு முன்னேறிய இருவருடன் டாக்டா் மோகன் காமேஸ்வரன். உடன், பேச்சு, மொழித் திறன் மற்றும் கேட்பியல் பயிற்சி நிபுணா் பேராசிரியா் ரஞ்சித் ராஜேஸ்வரன். 

சென்னை: 12.08.2025
பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா்.

தடைகளை உடைத்து தன்னம்பிக்கையால் வென்ற அந்த இருவருக்கும், சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டா் மோகன் காமேஸ்வரன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொண்டு புது விடியலை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக டாக்டா் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: பிகாா் மாநிலம், பாட்னாவில் கடந்த 1999-இல் பிறந்தவா் யாஷ். வங்கி அதிகாரியின் மகனான அவருக்கு பிறவியிலேயே செவித்திறன் கிடையாது. பிறந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகே அதைக் கண்டறிந்து செவித் திறன் கருவி பொருத்தினா். ஆனால், அது பலனளிக்காததால், கடந்த 2002-இல் சென்னைக்கு வந்து எங்களிடம் சிகிச்சை பெற்றாா்.

பொதுவாக பிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும், செவித் திறன் கருவிகள் பொருத்தியும் பயனளிக்காதவா்களுக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் செவி மடு சுருள் கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிகிச்சை மருத்துவ உலகில் மிகவும் புதிது. இருந்தபோதிலும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவியை பொருத்தி யாஷுக்கு ஓராண்டு பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பயனாக மறுவாழ்வு பெற்ற அவா், ஐஐடி கான்பூரில் பி.டெக். கணினி அறிவியல் படித்தாா். பின்னா், இந்திய குடிமைப் பணிக்கு பயிற்சி பெற்ற அவா், தோ்வில் இரு முறை தோல்வியுற்றபோதும், விடாமுயற்சியுடன் மூன்றாவது முறை பங்கேற்று வெற்றி பெற்றாா்.

தற்போது ஐஏஎஸ் நிலைக்குத் தோ்வாகியிருக்கும் அவா், தேசிய அளவில் 990-ஆவது இடத்தையும், சிறப்புப் பிரிவில் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளாா். அடுத்த சில நாள்களில் உத்தரகண்ட் மாநிலம், முசோரிக்கு பயிற்சிக்கு செல்கிறாா். பிறவியிலேயே செவித் திறன் பாதிப்பு ஏற்பட்ட ஒருவா் ஐஏஎஸ் பதவிக்கு உயா்வது இதுவே முதல்முறை.

மருத்துவக் கனவு: அதேபோன்று, சென்னை, முகப்பேரைச் சோ்ந்த சுஜாதா - சீனிவாசன் தம்பதியின் மகளான அக்ஷயாவுக்கும் பிறவிலேயே காது கேளாமை பாதிப்பு இருந்தது. கடந்த 2009-இல் இந்தப் பிரச்னை இருப்பது தெரியவந்து, அவருக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தப்பட்டது.

குறைபாடுகளைப் பொருட்படுத்தாது மனம் தளராமல் உழைத்த அவா், ஜேஇஇ மற்றும் நீட் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றாா். நிகழாண்டு மருத்துவக் கலந்தாய்வில் அவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

ரத்த உறவு: தமிழகத்தைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 6 பேருக்கு பிறவி செவித் திறன் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும் என்றாா் அவா்.

குறைகள் தடைகளல்ல: இதுதொடா்பாக யாஷ் கூறியதாவது: குறைகளை மறைத்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை. நான் எப்போதும் என்னுடைய குறைபாடுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் வெட்கப்பட்டதில்லை. அதனால், என்னிடம் எவரும் பாகுபாடு காட்டியதில்லை. மாறாக அனைவருமே அன்பையும், கனிவையுமே அளித்தனா். டாக்டா் மோகன் காமேஸ்வரனுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

உத்தர பிரதேசத்தில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் தமிழகத்திலும் சேவை புரிய வேண்டும் என விழைகிறேன் என்றாா் அவா்.

இஎன்டி சேவை: எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு முதுநிலை மருத்துவப் படிப்பில் காது-மூக்கு-தொண்டை மருத்துவம் பயின்று சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாக அக்ஷயா தெரிவித்தாா்.

நீட் தோ்வுக்கு வெறும் 3 நாள்கள் மட்டுமே படித்ததாகவும், குறைகளைக் கண்டு அஞ்சாமல் மன உறுதியுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்றும் நம்பிக்கை மிளிரத் தெரிவித்தாா் அக்ஷயா.


Saturday, April 26, 2025

Seven tries, two kids, one dream: Nisa's IAS journey is peak perseverance


24.04.2025
Nisa clears UPSC in seventh attempt, joins IAS at 40 despite hearing disability

At an age when most aspirants have elther cleared the UPSC or hung up their boots, 40-year-old Nisa Unnirajan from Thiruvananthapuram scripted an extraordinary tale of grit. A mother of two young children, a full-time employee, and someone living with a hearing disability, Nisa cleared the civil services examination in her seventh attempt, securing a rank of 1,000 in the 2024 results.

Despite her rank, Nisa is eligible for the Indian Administrative Service (IAS) under the disabled category. Her story is not just one of success, but of silent strength, support from family, and steely determination.

The dream that bloomed late but bold

Nisa began her civil services journey only at the age of 35, far later than the usual -aspirants. As reported by TNN, she said, "I always had the ambition somewhere within me, but I only gave myself permission to pursue it seriously after I turned 35."

Balancing parenting duties with preparation wasn't easy. With daughters Nandana (11) and Thanvi (7) at home, the civil services syllabus wasn't her only responsibility. Supported by her husband Arun, a software engineer, and her parents-retired police clerk Unnirajan and Jayasree-she kept moving forward.

"I failed repeatedly, but I never saw those attempts as wasted," she was quoted by TNN. "Each one taught me something valuable. I kept refining my approach."

The training, the tribe, the tenacity

Nisa credited her training at a private coaching centre in Thiruvananthapuram as a pivotal part of her journey. She also drew tremendous motivation from Kottayam sub-collector Ranjith, who, like her, lives with a hearing impairment. As reported by TNN, she shared, "Knowing someone with a similar challenge had already walked this path made a huge difference."

To stay motivated, she turned to biographies, real-life success stories, and a dally dose of motivational videos. Her routine may have been unconventional, but it was deeply personal and effective. Her persistence paid off-not overnight, but over years of tireless effort.

Breaking barriers with grit and grace

Her achievement has inspired not just her family but a broader community of aspirants who may feel boxed in by age, disability, or circumstance. "It's never too late," she told TNN, her voice steady. "And no dream is ever too big."

Now poised to enter the IAS, Nisa stands as a living example of perseverance and purpose. As her story spreads, many others are likely to believe what she proved -that even the longest journeys begin with a single brave step, no matter when you take it.


Wednesday, July 8, 2020

Born Without Hands, Hearing-Impaired Man Makes Stunning Paintings With His Feet


“Paintings are universal, there are no prerequisites to understand them. All it takes is your creative imagination,” Gaukaran Patil expresses through his feet via sign language.

A gifted painter from Chhattisgarh’s Bhilai district, Gaukaran was born without hands. He also has a speech and hearing impairment. But those are not disabilities for him.

In fact, he sees them as blessings in disguise, for he has a rare talent of painting with his feet. He can effortlessly hold a brush between his toes and create a stunning picture.

The 35-year-old was raised by a single mother along with two siblings in Bhilai. He also completed a Masters in Fine Arts.

Gaukaran’s school teacher was first to notice his talent and the wonders he could do with his feet.

“Though people around me found it strange that I was writing with my toes, my mother never gave up on me, and encouraged me to complete my education just like every other child. My teachers saw I was a natural when it came to drawing. The appreciation made me feel welcome. Besides, I truly enjoyed it,” he says.

After completing his education, Gaukaran started painting for a living, and so far, he has sold over 500 of them. All his paintings are sold via social media and through word of mouth.

Two years ago, he also joined the Kopal Vani Shravan Badhit Aavasiya Vidyalaya in Raipur to mentor hearing-impaired students in computers and painting.
His zeal and sincerity towards his artistic abilities also garnered the attention of India’s former President Dr A P J Abdul Kalam, Home Minister Rajnath Singh, and Sonia Gandhi, who have purchased his paintings during their visits to the state.

Recently, a video featuring Gaukaran went viral. He was dipping his brush in the paint bottle with his toes and making a picture. It was uploaded on Twitter by IAS Priyanka Shukla.

“Gokaran Patil is a huge source of inspiration for those who give up after going through rough patches in life,” she wrote.

Here is a collection of Gaukaran’s stunning paintings:

Saturday, April 20, 2019

"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி!

20.04.2019
பிளஸ் டூ தேர்வில் 500-க்கு 428 மதிப்பெண் பெற்று, படித்த பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் திலகவதி. தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சி, ஆனந்தம், பூரிப்பு என அத்தனை உணர்வுகளையும் மௌனம் என்ற ஒற்றை மொழியில் வெளிப்படுத்துகிறார். பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்டு, அதனால் பேச்சுத்திறனையும் இழந்தவர் திலகவதி. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள செவித்திறனில்லாதோர் பள்ளியில் படித்து, பிளல் டூ-வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

பள்ளியின் முதல்வர், ஆசிரியர் என்று அனைவரும் திலகவதியைப் பாராட்டிக்கொண்டிருக்க அவரோ, தேர்வில் தோல்வியடைந்ததால் அழுதுகொண்டிருந்த சக மாணவியைப் பெரும்பாடுபட்டு தேற்றிக்கொண்டிருந்தார். மௌன மொழி பேசும் மடந்தையின் அம்மா கற்பகத்திடம் பேசினோம். "எங்களுக்கு சொந்த ஊரு சிவகங்கை. திலகவதிதான் எங்களுக்கு முதல் குழந்தை. அவளுக்கு இரண்டு வயசு இருக்கும்போது வீட்ல ஒருநாள் ஒரு டப்பா தவறி கீழ விழுந்துச்சு. எல்லாரும் என்ன சத்தம்னு பார்த்தாங்க. ஆனா திலகவதி மட்டும் திரும்பவே இல்ல.

அப்போதான் அவளுக்கு காது கேட்கலன்னு எங்களுக்குத் தெரிய வந்துச்சு. பல டாக்டர்களைப் பாத்தோம். 'அவளுக்கு மூளை செயல்திறன் நல்லா இருக்கு... காது கேட்கிறதுக்காக சிகிச்சை செய்தா, மூளைத்திறன்ல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால, காதுக்கு ட்ரீட்மென்ட் பாக்குறதவிட்டுட்டு குழந்தையைப் படிக்க வைங்க'ன்னு சொல்லிட்டாங்க. எங்க பகுதியில இதுபோல ஸ்கூல் இல்ல. அதுனால, என் பொண்ண படிக்கவைக்கணும்னு சென்னைக்கு வந்தோம்.

பத்தாவதுலயும் திலகவதிதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எப்பவும் துறுதுறுன்னு இருப்பா. எங்க சொந்தக்காரங்க எல்லாம் என் பொண்ணுக்கு காது கேட்கலையேன்னு வருத்தப்படுவாங்க. ஆனா, நாங்க ஒருநாளும் அப்படி நினைச்சதேயில்லை. அவகிட்ட இருக்கிற துறுதுறுப்பு அவ குறையை மறைச்சிரும்.

நான் என் அத்தை பையனைத்தான் கல்யாணம் செஞ்சிகிட்டேன். நெருங்கின சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டதாலதான் குழந்தைக்கு காது கேட்காமப் போயிருச்சு. என் வீட்டுக்காரரு டிரைவரா வேல பாக்குறாரு. அவர் பத்தாவது வரை படிச்சிருக்காரு. நான் வீட்டு வேலை செய்றேன். நாங்க ரெண்டு பேரும் படிக்காததால, என் பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சி இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்.

படிக்கிறதுல ரொம்ப ஆர்வம். சிறு வயசுலயே காலையில நாலு மணிக்கு எழுந்து ஹோம் வொர்க் செய்வா, அது இப்போ வரைக்கும் தொடருது. டி.வி. பாத்தாகூட கையில பாடப்புத்தகம் இருக்கும். படிப்புல உள்ள ஆர்வம்தான் அவளுக்கு இவ்ளோ மார்க் வாங்கிக் கொடுத்திருக்கு. முதல் மார்க் வாங்கி எங்களையும் பெருமைப்படுத்திட்டா.

ஜெயலலிதா இறந்த சமயத்துல ஒருநாள் என்கிட்ட வந்து, 'எனக்கு ஜெயலலிதா போல வரணும்னு ஆசை'ன்னு சொன்னா. 'நாம இருக்கிற நிலையில அதெல்லாம் சாத்தியம் இல்ல'ன்னு சொன்னேன். அது அவளுக்கும் தெரியும். அதனால, நான் எந்தத் துறைக்குப் போனாலும் ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்னு சொல்றா. வங்கி அதிகாரியா வரணும்னு இப்போ சொல்லிட்டு இருக்கா..."என்றார் கண்களில் சந்தோஷம் மின்ன.

Sunday, February 10, 2019

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

Tuesday, November 20, 2018

மாற்றுத்திறனாளி என்று ஒதுங்காது பதக்கங்களை வேட்டையாடும் பேட்மின்டன் ஜெர்லின் அனிகா!

இறகுப்பந்தில் உலகளவில் சிறகை விரிக்கும் ஜெர்லின் - சாதனையால் பேசுகிறார் !

ஆசிய பசிபிக் சர்வதேச பேட் மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 'வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன்' மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல தீவிர பயிற்சி எடுத்துவரும் இவர் அரசு உதவியை எதிர்பார்த்திருக்கிறார்.

"என் மகளை எதிர்த்து என்னால் ஜெயிக்க முடியாது. அதனால், நான் பேட்மின்டன் விளையாடுவதில்லை" என்று பேச ஆரம்பித்தார் மாணவி ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன். ”ஜெர்லினுக்குச் சின்ன வயதிலிருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. அவள் பிறந்து, சில வருடத்திற்குப் பிறகுதான், இது எங்களுக்குத் தெரிந்தது. ஆறாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில்தான் படித்தாள். அங்குதான் உதடு அசைவு, சைகைகள் பற்றி கற்றுக்கொண்டாள். 7-ம் வகுப்பில் சிறப்பு பள்ளியிலிருந்து மாற்றப்பட்டு வழக்கமான பள்ளியில் சேர்த்தோம். இப்போது 10-வது படித்துக்கிறாள். ஆறு வருசமாக பேட்மின்டன் பயிற்சி எடுத்துவருகிறாள். பேட்மின்டன் கற்றுக்கொள்ள ஆரம்பித்து 9 மாதம் ஆகியிருக்கும்போதே போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறாள். அவளது சின்னச் சின்னத் தோல்விகளுக்குப் பிறகு, பெரும் வெற்றிகள் அடைந்துவருகிறாள். மாநில அளவிலும் தேசிய அளவிலும் வெற்றிகளைப் பெற்ற ஜெர்லின், தற்போது சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கிவிட்டாள். 2017-ஆம் ஆண்டு, துருக்கியில் நடைபெற்ற வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரின், பேட்மின்டன் போட்டியில் ஜெர்லின் விளையாடினாள். அந்தத் தொடரில் உலகளவில் 5-ம் இடத்தைப் பிடித்தாள். அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில், இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது வரையும் ஜெர்லின் சிறப்புப் பிரிவில் முதல் இடத்தில் உள்ளார். காது கேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் மொத்தம் 3 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தால், கண்டிப்பாக என் மகள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பாள்" என்கிறார் நம்பிக்கையுடன்.

ஜெர்லின் அனிகாவின் பயிற்சியாளர் சரவணன், ஜெர்லினோட அப்பா, கிரிக்கெட் பிளேயர் அவர் பேட்மின்டன் விளையாடமாட்டாரு ஆனா, அவரோட ஃப்ரெண்ட்ஸைப் பார்க்க பேட்மின்டன் கோர்ட்டுக்கு வருவார். அப்போ, அவர் பொண்னு ஜெர்லினையும் கூட கூட்டிவருவார். ஜெர்லின் இங்க நடக்குற மேட்சைப் பாத்துட்டே இருப்பாங்க. ஒருநாள் அவளோட அப்பா, 'நீயும் விளையாடிறியா?''னு கேட்டதற்கு ஆர்வத்தோட தலையாட்டுனாங்க. அப்போதான் ஜெர்லினோட வெற்றிக்கு விதை விதைக்கப்பட்டது. கொஞ்ச கொஞ்சமா பேட்மின்டன் கத்துகிட்டாங்க ஜெர்லின். ஆரம்பத்திலேயே நல்லா விளையாட ஆரம்பித்தாங்க ஆனா, மேட்சோட பாய்ண்ட்ஸைக் கணிக்க முடியல. எப்போ, எப்படி விளையாடணும், தான் எத்தனை புள்ளி, தனக்கு எதிரா விளையாடுறவங்க எத்தனை புள்ளி எனத் தெரியாம விளையாடிட்டு இருந்தாங்க. அதனால, பல நேரங்கள்ல தோல்விதான் கிடைச்சுது. நல்லா விளையாட தெரிந்தும் ஜெர்லினால ஜெயிக்க முடியலையேனு ஒருநாள் முழுவதும் யோசிச்சேன் அப்போதான் ஒரு சின்ன ஐடியா பண்ணி, ஒரு சிறப்பு போர்டு உருவாக்கி அவங்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தேன். பாயிண்ட எப்படி கால்குலேட் செய்யணும், பந்தை எப்படி லாபகமா ஆடணும்னு எளிமையாச் சொல்லிக்கொடுத்தேன். அவங்களும் கவனமாக் கத்துகிட்டாங்க. .மாநில அளவில பதக்கங்களைத் தட்டிக்கொண்டு, இப்ப சர்வதேச அளவில் இறகு பந்து விளையாட்டில் உயர உயர பறக்கிறார். சிறப்புப் பிரிவில் இப்ப, இந்திய அளவில் நம்பர் 1 பேட்மின்டன் பிளேயரா வளர்ந்திருக்கிறார் ஜெர்லின். அடுத்தாண்டு, ஜூன் மாதத்தில் வேல்ட் ஜூனியர் சாம்பியன் போட்டியிலும், ஹாங்காங்கில் ஏசியா பசிபிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். ஜெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் எனத் தீவிர முயற்சி எடுத்துவருகிறார். தமிழக அரசு, ஜெர்லினுக்கு உதவி அளித்து, அவரின் திறமையை ஊக்கப்படுத்த வேண்டும்" என்கிறார்.

Tuesday, August 1, 2017

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom

‘'எங்களுக்குத் திருமணமாகி மூணு வருஷம் கழிச்சுதான் மனீஷ் பிறந்தான். வளர வளர செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். பேச்சும் வரலை. எல்லோரும் ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டால், பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில் அவனோடு நானும் இருந்தால், இன்னும் சிறப்பா செயல்படுவான் என நினைச்சேன்'' என மெல்லியக் குரலில் ஆரம்பிக்கிறார் விஜயலட்சுமி. சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். 
''என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருக்கேன். ஒவ்வொரு குழந்தையையும் என் குழந்தையாக நினைச்சுதான் பார்ப்பேன். என் குழந்தைக்கே ஒரு குறை வந்தபோது, ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியாமல் தவிச்சோம். அப்புறம், எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக்கிட்டு, கடவுள் கொடுத்த குழந்தையாக வளர்க்க ஆரம்பிச்சோம். அவனுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க நினைச்சேன். அதுக்காக, நான் நேசிச்ச எனக்குப் பிடிச்ச டாக்டர் தொழிலைக் கைவிட்டேன். என் குழந்தையை என்னால் மட்டும்தன் அதிகம் புரிஞ்சு பார்த்துக்க முடியும்னு நம்பினேன். அப்போ நாங்க கேரளாவில் இருந்தோம். என் கணவர் கணேஷிடம் இந்த முடிவைச் சொன்னதும் அவரும் ஏத்துக்கிட்டார். வங்கி ஊழியராக இருந்த அவர் மாற்றல் வாங்கினார். நாங்க சென்னைக்கு வந்தோம்.

இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மயிலாப்பூரில் இருக்கும் 'சில்ரன் கார்டன் ஸ்கூல்'ல மனீஷைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சகுந்தலா ஷர்மா, சிறந்த ஆசிரியையாக அவனை அற்புதமாகப் பார்த்துக்கிட்டாங்க. பிறகு, சோழிங்கநல்லூரியில் இருக்கும் சில்ட்ரன் கார்டன் ஸ்கூலின் கிளையான, எலென் சர்மா பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கவெச்சோம். நான் அந்தப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியையா பணிபுரிய ஆரம்பிச்சேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையா நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளுக்குப் பின்னாடி, ஓர் அம்மாவின் தவிப்பும் இருந்ததால், முழு அர்ப்பணிப்போடு ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன்.
1997-ம் வருஷம், எலென் சர்மா பள்ளியின் சார்பாக நெதர்லாந்து மற்றும் லண்டனுக்குப் போனேன். காது, கண் குறைபாடு, ஆட்டிஸம் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, அவங்க வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளப் பயிற்சி கொடுப்பது மற்றும் ஸ்பெஷல் டீச்சர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எனப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சில ஆராய்ச்சிகளையும் செய்தேன். பாண்டிச்சேரி, குஜராத், போபால் என நாடு முழுக்க பயணம் செஞ்சு இந்தப் பணிக்காக செயல்பட்டிருக்கேன்'' என்கிறார் விஜயலட்சுமி.

25 வருடங்களாக ஒவ்வொரு நொடியும் பிள்ளைக்காகவும் சிறப்புக் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துவரும் இந்தத் தாய், ''இப்போ எனக்கு 57 வயசு. எங்கள் மகன் மனீஷை பி.எஸ்ஸி, பயோடெக், எம்.எஸ்ஸி, பயோடெக் என முடித்திருக்கிறார். மனீஷுக்கு எதையுமே விஷுவலா சொல்லிக்கொடுத்தாதான் புரியும். அதனால், முடிந்தவரை எல்லாத்தையும் அவனுக்கு நேரடியா காட்டிதான் கற்பிச்சோம். உதாரணமா, நாடாளுமன்றத் தேர்தலை அவனுக்குப் புரியவைக்க, சிறப்பு அனுமதி வாங்கி, நாடாளுமன்றத்துக்கே அழைச்சுட்டுப் போய் சொல்லிக்கொடுத்தோம். ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன் எனப் பல இடங்களுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கோம். ஸ்கூல், காலேஜுக்காக இடம் மாறும்போதெல்லாம், அவனுக்காகக் கிட்டத்தட்ட 12 வீடுகள் மாறியிருப்போம். எந்தச் சூழலிலும் அவன் தனிமையாவோ, தாழ்வாவோ தன்னை நினைச்சுக்கக்கூடாதுனு நாங்க இன்னொரு குழந்தையைப் பெத்துக்கலை'' என்கிற விஜயலட்சுமி, சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். 

‘‘சென்னை, படூர் 'ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' கல்லூரியில் பி.எஸ்ஸி., பயோடெக்கும், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி., பயோடெக்கும் முடிச்சுட்டு அங்கேயே ரிசர்ச் பண்ணிட்டிருந்தான். இப்போ அதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டான். மனீஷை இன்னிக்கு நார்மல் குழந்தைகளுக்கு இணையா வளர்த்ததுக்குப் பின்னாடி, ஒரு பெற்றோராக உழைப்பும் அன்பும் அர்ப்பணிப்பும் மிக அதிகம். படிப்பில் பிலோ ஆவரேஜா இருக்கும் பிள்ளைகளைப் பற்றி அவங்க பெற்றோர் கவலைப்படுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளை 'படி படி' எனக் கட்டாயப்படுத்தும், நச்சரிக்கும் பெற்றோர்களையும் கவனிச்சிருக்கேன். ஒரு சிறப்புக் குழந்தையைப் பெற்றோர் நினைச்சா முதுநிலை பட்டதாரி ஆக்க முடியும்போது, ஆவரேஜ் குழந்தையையும் அம்மா நினைச்சா சூப்பர் குழந்தையா ஆக்கலாம்தானே?

மனீஷுக்கு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி கல்யாணம். நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிஞ்சிருக்கு. பொண்ணு பெயர் மானஸி. ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். நல்லா ஓவியம் வரைவாங்க. அவங்களும் மனீஷ் மாதிரியே காது கேளாத, வாய் பேச முடியாதவங்க. மனீஷ் படிச்ச பள்ளியில்தான் மானஸியும் படிச்சிருக்காங்க. திருமணம் குறித்த பேச்சு வந்தது. மனீஷ், மானஸியிடம் பதினைந்து முறைக்கும் மேலே சைகை மொழியில் பேசினான். ரெண்டுப் பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம். 27 வருஷமா மனீஷ்கூட தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாக இருந்திருக்கேன். அவன் வாழ்க்கை முழுக்கவும் இருக்க ஒரு தேவதை எங்க வீட்டுக்கு வரப்போறாங்க. அதுதான் இப்போ எங்களின் மொத்த சந்தோஷம்'' என முகமும் குரலும் பூரிக்கச் சொல்கிறார் விஜயலட்சுமி.

Sunday, July 23, 2017

Disabled lad wins national IT challenge

22.07.2017
BATHINDA: Yashvir Goyal (17), a youth with speech and hearing impairment from Bathinda has won the national informational technology challenge for youth with disabilities. Yashvir (17) will now represent the country at the global IT challenge for youth with disabilities in Vietnam in September.

The national competition was held at the National Institute of Technology, Kurukshetra on Friday where disabled youths from 15 states of India participated. Despite his disabilities, Yashvir has been studying with students in a normal school. He got a gold medal in the category of the hearing impaired.

Yashvir's father Chander Prakash, also a former state information commissioner of Punjab, said he got 86% in class X and 91.3% in class XII. "He is now doing graduation in social sciences," said Chander.

He said only 72 youths were selected to take part in the competition and the jury of eight judges selected four disabled youths, including Yashvir, the sole representative from Punjab to represent the country. He certainly has done the state proud.
Get latest news & live updates on the go on your pc with News App. Download The Times of India news app for your device.

Wednesday, July 19, 2017

நம்புங்கள் உங்களாலும் முடியும்!

பயிற்சி மூலமாக துணிக் கடையில் வேலை செய்பவர்
17.07.2017
உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த மாரியப்பனைப் போல், முயன்றால் உங்களாலும் சாதிக்க முடியும். இந்த நம்பிக்கையைப் பயிற்சிகளின் மூலமும் வேலைவாய்ப்புகளின் மூலமும் ஏற்படுத்திவருகிறது ‘யூத்4ஜாப்ஸ்’ தன்னார்வ அமைப்பு. கை, கால் செயல்படுவதில் குறைபாடு, காது கேட்காத வாய் பேசமுடியாத குறைபாட்டுடன் இருந்த 11 ஆயிரம் பேருக்குப் பலவிதமான திறன் பயிற்சிகளை அளித்திருக்கிறது இந்த அமைப்பு. இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணியில் இருக்கின்றனர் என்கிறார் இதன் நிறுவனர் மீரா ஷெனாய். இந்த அமைப்பில் சமீபத்தில் பயிற்சிபெற்ற மாற்றுத் திறனாளி மணிகண்டன், டெக்மஹிந்திரா நிறுவனத்தில் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஹார்ட்-வேர் இன்ஜினீயராக இருக்கிறார்.

“பெரும் வணிகத் துணிக் கடைகளில் துணியை மடித்துவைக்கும் பணிக்கு ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள், படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கேஷியராக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பேச முடியாதவர்கள். ஆனால், திறனில் குறைந்தவர்கள் அல்ல. மாற்றுத் திறனாளிகளின் திறனைப் பயன்படுத்திக்கொள்ளப் பல நிறுவனங்களும் முன்வர வேண்டும்” என்கிறார் சங்கீதா. இவர், மாற்றுத் திறனாளிகளை நிறுவனங்களில் பணியமர்த்தும் பொருட்டு, நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்திவருகிறார்.

எப்படி வித்தியாசப்படுகிறது?

“சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தைக் கொடுப்பதற்காகக் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்தியாவில் 11 மாநிலங்களில் 20 மையங்களில் இது செயல்படுகிறது.

சில அமைப்புகளில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். சாஃப்ட் ஸ்கில் பயிற்சி மட்டுமே தருவார்கள். இவர்களிலிருந்து எங்களின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலும் நாங்களே மாற்றுத் திறனாளிகளைத் தேடிப் போவோம். அவர்களின் குடும்பத்தோடு ஒருநாள் தங்கியிருந்து, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். நாங்கள் 60 நாட்களுக்கு என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறோம் என்று சொல்வோம். அவர்களின் முழு ஒப்புதலோடு இந்த சென்டருக்கு வருவார்கள். பயிற்சி நடக்கும் நாட்களில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அனைத்தையும் இலவசமாகவே அளிக்கிறோம்.

உடல் குறைபாட்டோடு பிறந்ததால் தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று சமூகம் அவர்கள் மீது திணித்த அவநம்பிக்கையை, பயத்தைப் பலதரப்பட்ட எங்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் மூலம் போக்குகிறோம். கடைசி 15 நாட்களில் இரண்டு விதமான நேர்காணலுக்கு அவர்களைத் தயார்படுத்துவோம். இந்தப் பயிற்சி தன்னம்பிக்கையோடு நேர்காணலைச் சந்திக்க உதவும். வேலை கிடைத்தாலும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர்களைக் கண்காணிப்போம். குறைந்தபட்சம் 8 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை அவர்களின் தகுதிக்கு ஏற்ப மாதச் சம்பளம் பெறும் பணியில் இருக்கின்றனர்” என்கிறார் யூத்4ஜாப்ஸின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான உதவித் திட்ட மேலாளர் ஜெய்சபரி பாலாஜி.

2 மாதப் பயிற்சிக்குப் பின்னர் அவரவருக்குப் பொருத்தமான வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நேர்காணலுக்குத் தயார்படுத்துகிறது இந்த அமைப்பு. வேலை கிடைத்த பின்பும் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான செயல்திறன் கலந்தாய்வையும் அளிக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத், சென்னை, பெங்களூரில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படுகிறது. அதிக வளர்ச்சியும் அதிக மனிதவள ஆற்றலும் தேவைப்படும் துறைகளான ஹாஸ்பிடாலிட்டி, ரீடெயில், பேங்கிங், ஃபைனான்ஸ், பி.பீ.ஓ., ஐ.டி., டிராவல் அண்ட் டூரிஸம் ஹெல்த் ஆகியவற்றிலும் தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள்ளூரிலும் அதே மாவட்டத்திலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தொடக்கப் புள்ளி

இந்த அமைப்பைத் தொடங்கிவைத்து அதன் மூளையாகச் செயல்படுபவர் மீரா ஷெனாய். இந்தியாவிலேயே முன்மாதிரியாக, ஆந்திர மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் திட்டத்தை 2004-ல் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டவர் இவர். தெற்காசியாவுக்கான உலக வங்கியின் ஆலோசகராகவும் இருந்தவர். 
மீரா ஷெனாய்

இவர் இந்த அமைப்பைத் தொடங்கியதற்கான காரணம் ஒரு ஆய்வு என்கிறார். “இந்தியாவின் மக்கள்தொகையில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு உடல்ரீதியான குறைபாடு இருப்பதாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. உடலளவிலும் மனதளவிலும் தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்களுக்குத் தகுந்த பயிற்சியையும் ஒரு வாய்ப்பையும் வழங்கினால் அவர்களாலும் பொருளாதாரரீதியாக முன்னேற முடியும் என இந்த அமைப்பைத் தொடங்கினோம்.

1. உடல் குறைபாட்டோடு இருப்பவர்களும் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதைப் புரியவைப்பது.

2. அவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி நம்பிக்கை அளிப்பது.

3. சாதாரணமாக இருப்பவர்களின் பணித்திறனுக்கு மாற்றுத் திறனாளிகளின் திறன் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குப் புரியவைப்பது.

இந்த மூன்று விதமான சவாலை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்றார் மீரா ஷெனாய்.

தொடர்புக்கு: 9600830540 , 9751820602 (காலை 9:30 முதல் மாலை 6 வரை அழைக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்)

கூடுதல் விவரங்களுக்கு: www.youth4jobs.org

Monday, July 10, 2017

Hearing-impaired Tripura boy makes his paintings talk, awaits top award

09.07.2017
Pankaj Roy, 14, dances to music he cannot hear. And he lets his paintings speak what he cannot express in words.

His dancing is yet to progress beyond the Tripura contest circuit, but his painting has earned him the top prize in a nationwide contest conducted by the Indian Council for Child Welfare in 2014.

He is scheduled to receive the award – along with winners of the next two years – in New Delhi in November.

When the council broke the news a few days ago, Pankaj’s parents realised their hearing and speech-impaired son was really special.

“Doctors advised us to go for cochlear implant in Chennai when we discovered his disability when he was three. But we couldn’t afford it. We though his future was doomed, but he has proved us wrong,” said his mother Purnima Roy, wiping away tears of joy.

The mother recalled Pankaj picked up a pencil at the age of six to reproduce from a calendar the picture of a farmer ploughing his field. Unknown to them, the boy also became familiar with English alphabets from signboards and nameplates.

It was then that the Roys based in Bishalgarh, about 18 km from state capital Agartala, decided to admit their differently-abled son in a school for the speech and hearing impaired. Pankaj’s mother later shifted to Agartala for his special classes.

Besides painting, Pankaj was found to be a quick learner – from academics to sports such as cricket, table tennis and badminton. He also took part in badminton at a national sports event for the deaf.

“Painting is his medium of expression. One can have a glimpse of Tripura’s culture through his paintings,” Purnima said. 

Pankaj’s teacher Joy Bhattacharya, a lecturer in the Government College of Arts and Crafts, waxed eloquent on his student. “He is highly creative and has the ability to implement ideas. His dedication has earned him a scholarship from the Centre for Cultural Resources and Training under the central ministry of culture,” he said.

Pankaj is scheduled to take part in a national-level painting competition in Odisha this month.

The boy’s talent took him to Rashtrapati Bhavan via a trip organised by the Assam Rifles in 2015. President Pranab Mukherjee accepted one of his paintings.

“Pankaj is multi-talented, and it is unbelievable how he has picked up dancing to beats he cannot hear. He is a born genius,” Siddhartha Shankar Deb, a college teacher, said.

The boy’s father, Manoj Roy teaches mathematics at a girls’ higher secondary school. His elder brother Aguntuk works in Goa while younger brother Mainak is in class 9.

Wednesday, April 5, 2017

காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

01.04.2017
நம்பிக்கை தான் வாழ்க்கை, மனதில் உறுதி இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். அதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில், வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

பல கல்லுாரிகளில் அலைந்து திரிந்து சீட் கிடைக்காத மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை அரவணைத்து உற்சாகப்படுத்கி வருகிறது இக்கல்லுாரி நிர்வாகம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின், 80 சதவிகிதம் பேர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் தான் என்பது முற்றிலும் உண்மை.பச்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் செல்லத்துரை - யோகமலர் தம்பதிகளின் மகள் ரஞ்சிதா. இவருக்கு காதுகேளாத சூழ்நிலையில், எங்கே நமக்கு கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற நேரத்தில், கல்லுாரியில் இவருக்கு சீட் வழங்கியதோடு, சிறப்பு கவனம் செலுத்தி பாடம் சொல்லித்தருகின்றனர்.இது குறித்து மாணவியின் தந்தை செல்லத்துரை நம்மிடம் கூறுகையில், ''எனது இரண்டாவது மகள் ரஞ்சிதா. இவர் 6ம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று காதுகேட்கவில்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றனர். கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்பதால், இறைவன் விட்ட வழியில் மகளை தொடர்ந்து படிக்க வைக்கிறேன். இன்று வரை எந்த வகுப்பிலும் பெயிலாகாமல் படித்து வருகிறாள். எனது மகளுக்கு சீட் வழங்கிய வால்பாறை கல்லுாரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.கல்லுாரி தமிழ்பேராசிரியர்கள் கோவிந்தராஜ், தமிழ்கனி ஆகியோரிடம் கேட்ட போது, ''இக்கல்லுாரியில் பி.ஏ.,தமிழ் முதலாமாண்டு படித்துவரும் மாணவி ரஞ்சிதாவுக்கு காது மட்டும் தான் கேட்காது. ஆனால் நாம் சொல்லித்தரும் பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து, தேர்வை திறம்பட எழுதுகிறாள். மேலும் இந்த மாணவிக்கு மட்டும் தனியாக சிறப்பு பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவி படிப்பில் மட்டுமல்லாது கவிதை எழுதுவதிலும், இசை அமைப்பதிலும், விளையாட்டு போட்டிகளிலும் அதிக அளவில் பங்கு பெற்று சாதனை படைத்துள்ளார்,'' என்றனர். மாணவி ரஞ்சிதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை கல்லுாரியில் 'சீட்' கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். எனது ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என்று கல்லுாரி போராசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் தான் தெரிகின்றனர். நன்றாக கவிதையும் எழுதுவேன். நான் நன்றாக படித்து என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது தான் எனது ஆசை,'' என்றார்.இவரது லட்சியம் நிறைவேற நாமும் மனதார வாழ்த்தலாமே!-

Saturday, March 25, 2017

அபூர்வ திறமை கொண்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவி - காரணைப்புதுச்சேரியில் அதிசயம்


காரணைப்புதுச்சேரி, மார்ச் 20--காரணைப்புதுச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் இருந்தும், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குகிறார்.ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஓவியத் திறமையில் சிறந்து விளங்குவதாகக் கேள்விப்பட, மாணவியை நேர்காணச் சென்றிருந்தோம். விசாரிக்கையில், சிறந்த ஓவியத் தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை கண்ணால் காண்பதை, தனது பிஞ்சுக் கைவண்ணத்தில், நமது கண் முன் நிறுத்துகிறார்.அவரிடமே, அவர் குறித்த விளக்கங்களை கேட்ட போது, பதில் கூற மறுத்து, அமைதியாகவே இருந்தார். காரணத்தை அவரது ஆசிரியர் யமுனாவிடம் விசாரிக்கையில், அவர் பெயர் ஸ்ரீபவானி எனக் கூறினார். இதைச் சொல்ல, அந்த மாணவிக்கு ஏன் இவ்வளவு தயக்கம்... என எண்ணி முடிப்பதற்குள், ஸ்ரீபவானிக்கு, காது கேட்காததையும், வாய் பேச முடியாததையும் விளக்கினார் அவரது ஆசிரியர் யமுனா.ஆனால், இக்குறைகளால், மாணவியோ, அவரது பெற்றோரோ தளர்ந்து விடவில்லை. மாறாக, அவரது வயதுக் குழந்தைகளுடன் படிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது மாணவி, மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஸ்ரீபவானியின் ஓவியங்களைக் கண்டு வியந்த நாம், காதுகளும், வாயும் செய்ய முடியாத சாதனைகளையும் சேர்த்து, இவரது கைகளே செய்துவிடும் என, வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

குடும்ப நிலை! காரணைப்புதுச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதிக்கு, 2008, செப்., 24ல் பிறந்த பெண் குழந்தை, இத்தனை திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருப்பார் என, அப்போது, யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்குழந்தைக்கு, ஸ்ரீபவானி என பெயர் சூட்டிய பெற்றோர், குழந்தைக்கு, காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையை எண்ணி வருந்தினர். ஏழ்மையான குடும்பச் சூழலில், பெற்றோர் இருவரும் கூலி வேலைக்குச் செல்ல, ஸ்ரீபவானி, காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். ஓவியம் மட்டுமின்றி, படிப்பிலும் சுட்டி. மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் இம்மாணவி. உடன் படிக்கும் மாணவர்களுடன், இயல்பாக விளையாடியும் மகிழ்கிறார் இம்மழலைச் செல்வம்!

எல்லாருக்கும் திறமை உண்டு!ஸ்ரீபவானி, மிக அழகாக ஓவியங்கள் வரைகிறாள். ஒரு முறை கண்ணால் கண்டதை, அப்படியே வரைந்து விடுவாள். அதிக திறமைசாலி. இதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோரும், ஆசிரியர்களும், அவற்றை வெளிக்கொணர வேண்டும்.- ஆர்.செல்விதலைமை ஆசிரியர்

கடினம் இல்லை; பெருமை!அனைத்து மாணவர்களுடன் ஒன்றாகவே, ஸ்ரீபவானி அமர்கிறாள். அவளுக்கு, தனியாக பாடம் எடுப்பேன். அவளுக்கு புரியும் வகையில், சைகைகளாலும், எழுதிக் காட்டியும் பாடம் நடத்துவேன். இது கடினமான காரியமாக இல்லை. மாறாக, ஒருவித மனநிறைவைத் தருகிறது.- கே.யமுனாஸ்ரீபவானியின் வகுப்பு ஆசிரியர்

Friday, March 3, 2017

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் அசத்திய காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள்!


01.03.2017
சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பரதநாட்டியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் நடனக் கூத்தனான சிதம்பரம் தில்லை நடராஜர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்வதுதான் அந்தக் கலைக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை. அவர்களின் பாக்கியமும்கூட. அதன்படி ஒவ்வொரு வருடமும் நடனக் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு வந்து, புதிதாக நடனக் கலையைக் கற்றுக்கொள்பவர்களும், நடனக் கலைஞர்களும் பல்வேறு நடனங்கள் மூலம் அக்கலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்கள், சினிமா நடிகைகளான பத்மா, சொர்ணமால்யா, பானுப்பிரியா எனப் பலர் இங்கு நடனமாடியிருந்தாலும், முதன் முறையாக மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் நடனமாடியதுதான் இந்த வருட நாட்டியாஞ்சலியில் சிறப்பு.

நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 36-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, தெற்கு ரத வீதியில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நான்காவது நாளான நேற்று, ஜி.வி.காது கேளாதோர் மற்றும் மணவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த நடனத்தை வெப்சைட் மற்றும் இண்டர்நெட்டில் கண்டுரசித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உத்தண்டி பாபு என்பவர், 5000 ரூபாயை அந்தக் குழுவுக்குப் பரிசாக அளித்தார்.

இது குறித்து அந்தக் குழுவின் பயிற்சியாளர் ப்ரியா கூறுகையில், "இதுமாதிரியான நாட்டியாஞ்சலி விழாவில் முறையாகப் பயிற்சி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. பரதம் என்பது உடலும், உள்ளமும் ஒன்றிணையும் ஒரு தூய்மையான கலை. அதைக் கற்றுக்கொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். சலங்கைப் பூஜைகளெல்லாம் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கு அப்படி எங்களால் செய்ய முடியவில்லை. இவர்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்டோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு மாதத்துக்கு முன்புதான். இதை, நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கடினமான பயிற்சியின் மூலம் சிவனின் தசாவதார நடனத்தை ஆடினோம். இதன்மூலம், பரதம் அனைவருக்கும் சொந்தம் என்பதை நிரூபித்திருக்கிறோம். அடுத்த வருடம் இன்னும் அதிகமான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்" என்றார் பெருமிதத்தோடு.



Tuesday, February 28, 2017

சாதிக்க நினைப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையில்லை!

27.02.2017
கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த ஒருவர், இன்று உலகமே போற்றும் ஒரு சிறந்த ஓவியராக மாறி உள்ளார். அவர் ராமலிங்கம். இவரது 40 வயதில் கண் பார்வையும் பேச்சும் தடைபடத் தொடங்கியது. ஆனாலும் ஓவியக்கலையை அவர் விடவில்லை. இன்று இவரது புகழ் உலகெங்கும் பரவி உள்ளது. குறிப்பாக காது கேளாதோர் மத்தியில் இவர் ஒரு கதாநாயகன். சமீபத்தில் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடை பெற்ற ஓவிய கண்காட்சியில் இவரது ஓவியங்கள் மட்டும் அல்லாமல், இவரைப் போலவே காது கேளாதோர் வரைந்த ஓவியங்களையும், அதைப் பற்றிய குறிப்புகளையும் சொல்ல அந்த ஓவியர்களை அழைத்து பேச வைத்தார் ராமலிங்கம். எப்படி இவரால் அது முடிந்தது? என்று கேட்ட போது, தன்னைப் பற்றியும், தான் எப்படி அந்த ஓவியக் கண்காட்சியைச் சிறப்பாக நடத்த முடிந்தது என்றும் கூறுகிறார் ராமலிங்கம், அவரது மனைவி லதாவின் உதவியுடன்.

"நான் பிறந்தது முதலே காது கேளாமல் தான் இருந்தேன். எனது அத்தை மகன் கமல தியாகராஜன் ஓவியங்களை வரைவார். நானும் அவரைப் பார்த்து வரைய ஆரம்பித்தேன். என் ஓவிய ஆர்வத்தைப் பார்த்த எனது தந்தை, நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிந்தவுடன் என்னை சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்தார். அன்று ஆரம்பித்த இந்த ஓவியம் வரைவது, இன்று வரை தொடர்கிறது.

எனது வண்ண ஓவியம் முதன் முதலில் ஒரு வெளிநாட்டுப் போட்டிக்குச் சென்றது, காமன் வெல்த் விருதுக்குத்தான். அந்த விருது எனது 26 -ஆவது வயதில் கிடைத்தது. அதன் பிறகு எனக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான விருதுகள் என்று பார்த்தால் அவை சார்லஸ் வாலஸ் டிரஸ்ட் (Charles Wallace Trust, UK) யு.கே, இந்த விருது எனக்கு இரண்டு முறை கிடைத்தது, 1995, 2000. அடுத்தது அமெரிக்காவில் உள்ள போலாக்-க்ராஸ்னர் பெளண்டேஷன் (Pollock Krasner Foundation), அளித்த விருது. இது 2000 -ஆம் ஆண்டு கிடைத்தது. பின்னர் யுனெஸ்கோ (UNESCO Aschberg Bursary) விருது 2005 -இல் கிடைத்தது. அதற்கு பிறகு 2009-இல் ஜப்பான் பெளண்டேஷன் (Japan Foundation) விருது வந்தது. ஸ்பெயின் நாட்டின் (Can Serrat) விருது 2010 -ஆம் ஆண்டில் கிடைத்தது. நம் நாட்டின் தேசிய விருது (National Award for the outstanding Creative Adult Persons with Disabilities) 2012 -ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றேன்.

ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிலேயே எங்களைப்போன்றவர்களின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. நமது சென்னையில் ஏன் நடத்தக் கூடாது என்று சிலவருடங்களுக்கு முன் தோன்றியது. அந்த நினைப்பை செயலாக்க என்னைப் போன்ற மக்களிடம் பேச ஆரம்பித்தேன். சிலசமயம் வெப்-கேமரா மூலமும், சில சமயம் இ மெயில் மூலமும் என் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். சுமார் பத்து பேர்களிடம் பேசிய பின் அதில் மூன்று பேர் வர சம்மதித்தனர். அவர்களுக்கு நான் கூறியதெல்லாம், "எங்கள் நாட்டிற்கு வாருங்கள். பழமையான கோவில்களும், சிறந்த முறையில் பராமரிக்கப்படும் இயற்கை எழிலும் உங்களைக் கொள்ளை கொள்ளும்'' என்பதுதான்.

அதில் சீனாவில் இருந்து முஸியாயமெய் (Mu Xiaomei) என்ற பெண்மணியும், ஷி ஜிங்கியாங் (Shi Jingyang) என்ற ஆண் ஓவியரும், தென் கொரியாவில் இருந்து கிம், கியோ - சேங் (Kim, Kyo- Saeng) என்ற ஆண் ஓவியரும் வந்தனர். இவர்கள் அனைவரும் என்னை போலவே காது கேளாதவர்கள் தான். அவர்களது ஓவியங்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டன. நமது நாட்டை பற்றியும் அதிலும் குறிப்பாக நமது சென்னையைப் பற்றியும் அதன் கலாசார, பாரம்பரிய, இயற்கை எழிலையும் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், என்னையும், என் குடும்பத்தையும் பார்த்து நன்றி கூறியதோடு, சந்தோஷமும் அடைந்தனர்.

என்னைப் பொருத்தவரை என் மனைவி லதா தான் இதுவரை என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர். அவர் எல்லாரையும் போல் சாதாரணமாக இருப்பவர். நான் இப்படி இருக்கிறேன் என்று தெரிந்தும் என்னை மணந்தவர். எனக்கு இரு குழந்தைகள். நான் சமீபத்தில் தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். என்னைப் பொருத்தவரை எந்த உடல் ஊனமும் சாதனைக்குத் தடையில்லை என்றுதான் கூறுவேன்'' என்றார் ராமலிங்கம். அவரது மனைவி லதாவும் தனது கணவர் சிரிப்பில் பங்கு கொண்டு புன்னைகைத்தார்.

Wednesday, May 18, 2016

காதுகேளாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயி மகள்: மேற்படிப்புக்கு உதவ வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காதுகேளாதோர் மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை சிறுமலர் செவித் திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்ரி, பள்ளி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.
18.05.2016, காதுகேளாத மாணவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் பி.காயத்ரி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்திரி மொத்தமுள்ள 1,000 மதிப்பெண்களுக்கு 923 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விவரம்: தமிழ் 156, பொருளாதாரம் 199, வணிகவியல் 196, கணக்குப்பதிவியல் 199, வணிக கணிதம் 173.

மாணவி காயத்ரியின் வெற்றி குறித்து அவரது தந்தை எம்.பழனிச் சாமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

செவித்திறன் குறைபாடுடைய குழந்தையை ஏன் படிக்க வைக்கிறாய் என்று உறவினர்கள் என்னிடம் கூறினர். அதையெல்லாம், பொருட்படுத்தாமல் கல்விதான் என் மகளின் வாழ்க்கைக்கு உதவும் என எண்ணி விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்தேன்.

படிப்பை மட்டுமே முழுமூச்சாக கொண்டு எனது மகளும் படித் தாள். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு பி.காம் படிப்பு படித்துவிட்டு, வங்கி அதிகாரியாவதே காயத்ரியின் விருப்பம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பதால் எனது மகளின் மேற்படிப்புக்கு யாரேனும் உதவினால் ஏற்றுக்கொள்வேன் என் றார்
தொடர்புக்கு பழனிச்சாமி: 9443991975.

பேச்சு, காதுகேளாதோர் பள்ளிகளில் ராமாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை

18.05.2016, ஆலந்தூர்

பிளஸ்–2 தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவர்களில் ராமாபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.

மாணவர் கே.பூபாலன் 820 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவர் தமிழில் 135, பொருளாதாரத்தில் 176, வணிகவியலில் 161, கணக்கு பதிவியலில் 183, வர்த்தக கணிதத்தில் 165 மதிப்பெண்கள் பெற்றார்.

பி.விக்னேஷ் 727 மதிப்பெண்கள் பெற்று 2–ம் இடத்தை பிடித்தார். அவர் தமிழில் 117, வணிகவியலில் 149, கணக்கு பதிவியலில் 161, அலுவலக மேலாண்மையில் 102, தட்டச்சு பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றார்.

பி.சதீஷ்குமார் 681 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடம் பிடித்தார். அவர் தமிழில் 115, வணிகவியலில் 147, கணக்கு பதிவியலில் 147, பொருளாதாரத்தில் 138, வர்த்தக கணிதத்தில் 134 மதிப்பெண்கள் பெற்றார்.