FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, August 21, 2025

In pictures: Children with hearing impairments discover freedom through play


An afternoon of laughter, inclusion and shared celebration for the students of The Oral School for Deaf Children


The Oral School for Deaf Children turned 61 this year, and the milestone was marked with a celebration that perfectly reflected its mission of empowerment and inclusivity. Forty-three students, from toddlers to young adults, were welcomed into a vibrant world of fun and freedom at Jump-N-Joey, a trampoline and adventure park.


Founded in 1964 and located on Short Street, the school has long worked to create opportunities for children with hearing impairments, many of whom come from disadvantaged backgrounds. The anniversary was not only about marking time, but also about reaffirming the belief that play and learning must go hand in hand.


From rope ladders and obstacle courses to the thrilling Spider Tower, the children embraced every challenge with unbridled energy. Teachers, too, joined in, proving that fun knows no age or limit. “Bar hearing, there is nothing that a child with a hearing impairment cannot do,” a teacher remarked — and the sight of students conquering each corner of the play zone made that truth evident.


The students expressed their gratitude in sign language during the cake-cutting to mark the school’s 61st anniversary

Play experts ensured safety while encouraging exploration, while staff members bridged gaps through sign language, making the experience seamless and warm.

Thursday, June 5, 2025

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


05.06.2025
சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். குறிப்பிட்டு, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Thursday, May 22, 2025

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தகவல்



21.05.2025 
சென்னை: குரூப் - 4 தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகிறது. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பப்படிவ நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.


Monday, April 21, 2025

காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

21.04.2025 சிவகங்கை: அரசு பொதுத்தேர்வுகளில் காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைக்க வேண்டும், என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

உடல் இயக்க குறைபாடு உடையவர்களுக்கு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்ய இயலாது. அவர்களின் நிரந்தர ஊனத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் வழங்க வேண்டும்.

அறிவுசார் குறைபாடு, முடக்கு வாத பாதிப்பு, கை செயலிழப்பு, புற உலக சிந்தனை, உடல் இயக்க குறைபாடு, பன்முக குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் திடீர் விபத்துகளால் ஏற்படும் கை முறிவு போன்ற தற்காலிக பாதிப்பு உடையவர்களுக்கும் சொல்வதை எழுதுபவர் அதாவது அதே பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறவியிலேயே சில மாணவர்கள் காது கேட்காமல் வாய் பேசாமலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பயனில்லை.
காது கேளாதவருக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெரும்பாலானவருக்கு அவ்வாறு பொருத்தப்படும் கருவி செயலிழந்து விடுவதால் எப்பயனும் கிடைக்க பெறுவதில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதின் அபாயம் கருதி பெற்றோர்களும் தயக்கம் காட்டுவதால் நிரந்தர குறைபாடாக காது கேளாமை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் காது கேட்காத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிபெண்கள் வழங்கிட வேண்டும் என்றார்.




Saturday, January 11, 2025

காது கேளாதோருக்கு புது பாடப்பிரிவு துவக்கம்




20.12.2024, சென்னை:செவித்திறன் குறைந்த வாய் பேச இயலாத மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லுாரியில், புதிய பாடப் பிரிவு துவங்கப்படவுள்ளது.

இதற்காக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிக்கும் வகையில், இரண்டு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. பயிற்சி காலம் ஆறு மாதங்கள். இதில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியான மாணவர்கள் சேரலாம்.



Saturday, August 12, 2023

University Of Birmingham With Shakespeare Project Makes Shakespeare Accessible To Deaf Students In Schools


01.08.2023
There are around 52,000 deaf children in the UK, many of whom are disadvantaged in the classroom. Deafness by itself is not a learning disability, but its effects can be compounded by factors such as non-inclusive practice or an inadequate linguistic environment.
Recent figures produced by the National Deaf Children’s Society (NCDS) show that British deaf students achieve, on average, a grade lower than their hearing peers at GCSE level. Attainment gaps in English and Maths are particularly stark with around 37.7% of deaf children achieving a grade 5 in both subjects compared with 51.9% of all children. According to the NCDS ‘deaf young people are being consistently failed by the education system’.

Shakespeare is a compulsory element of the National Curriculum in England, yet many deaf young people struggle to access his work. There are very few resources available to help Teachers of the Deaf in supporting their deaf students. As a result, some deaf students are excluded from the Shakespeare classroom, and hence from the study of GCSE English. Not only does this impact their future educational and employment prospects, GCSE English being a requirement of entry to most UK Universities, but also their social development, a Shakespeare is so heavily embedded in our cultural landscape.

‘Signing Shakespeare’ is a project designed to support deaf young people in their study and enjoyment of Shakespeare. The project aims to:

Create enjoyment and understanding of Shakespeare’s text
Develop pro-social, collaborative skills
Support social and emotional development
Build understanding of literary terms including iambic pentameter, antithesis, soliloquy
Offer role models for deaf young people
Increase deaf awareness and appreciation of how sign language can bring new ideas and interpretations to working with Shakespeare for all

Beginning as a research project between the RSC and the University of Birmingham, it has evolved into a programme consisting of active, rehearsal room-based resources for the study of Shakespeare’s Plays, supported by image-rich presentations. So far, we have completed a scheme of work for Macbeth. We began with this play as it is the most widely taught of Shakespeare’s plays.

All the resources are built around a series of films – key scenes from the play – performed by deaf actors, in British Sign Language (BSL), Sign Supported English (used in some classrooms where there are deaf students), and sometimes in a form of iconic, performative sign language, inspired by Bernard Bragg’s Visual Vernacular. The films add clarity to vital moments of the plot and inspire students to perform their own versions. With a generous donation from the Billy Rose Foundation in New York, we made the films for Macbeth in American Sign Language (ASL – making them accessible to the estimated 308,648 deaf or hard-of-hearing children between the ages of 5 and 17 in the US (US Census Bureau, 2018).

We trialled these resources in schools for the deaf and with Teachers of the Deaf in a range of educational settings – the response has been extremely positive. At Braidwood Trust School for the Deaf, the Head of English commented:

Pupils were all highly engaged. I was amazed with how much they remembered of the story. This is unusual for our pupils. I can see how this visual approach really helped pupils to recall details.

Another teacher, working at a deaf unit in a London school described the resources as ‘absolutely vital’, adding that they could make a real difference to his students’ educational experience.

The resources constitute a complete scheme of work for teaching the play. Our initial research suggested that closely following the chronology of the play as events unfold is crucial in building understanding of different perspectives, including the dramatic irony of what the audience know compared to what the characters know. Our activities invite young people to inhabit and explore those different perspectives and express their findings in sign, written and oral forms. Although the project is titled ‘Signing Shakespeare’, we are mindful of the many deaf children who do not use sign language. All our resources have subtitles, and we are also considering making filmed lip-reading versions of the scenes, since many deaf young people rely on lip-reading alongside other aids.

Having worked on Macbeth, we now hope to continue our work to produce resources for the other most frequently studied Shakespeare plays – Romeo and Juliet, A Midsummer Night’s Dream and The Tempest (TES, 2016). The principles and structure that we have developed can be applied to any number of the plays. They might also be applied to other literature on the curriculum – including prose and poetry.

With the introduction of the BSL Act of 2022, British Sign Language has been recognised by law as a language of the UK and the government has committed to its promotion and facilitation. Our hope is, that as a compulsory element of the UK education syllabus, Shakespeare will become fully accessible to users of BSL and other sign languages.


Friday, January 21, 2022

Innovations for inclusive learning showcased at NITI Aayog event

19.01.2022
Twelve start-ups offering socially relevant solutions for inclusive learning presented their innovations at the Assistive Technology Innovation Showcase for Inclusive Education organized by the Department of School Education and Literacy, Ministry of Education, in association with Atal Innovation Mission, NITI Aayog.

The Assistive Technology Innovation Showcase for inclusive education organized by the Department of School Education and Literacy, Ministry of Education in association with Atal Innovation Mission, NITI Aayog was held on January 19.

Young entrepreneurial minds are leveraging frontier technologies such as AI to create learning tools for autism, dyslexia, hearing and speech impairment, visual impairment, cerebral palsy.

The event was addressed by Subhas Sarkar, minister of state for education, Delhi. He highlighted the provision of NEP 2020 that mandates equitable and inclusive education so that every citizen has an equal opportunity to dream, thrive and contribute to the growth of the nation. He said schools are working to provide all children with special needs accommodation and support mechanisms tailored to suit their requirement, ensuring their full participation and inclusion in the classroom.

Abhay Jere, chief innovation officer, AICTE, stressed the need for innovation in the assistive tech space. He spoke about textbook conversion into Indian Sign Language (ISL) and the ministry’s innovation ecosystem taking forward assistive-tech innovations through incubation and acceleration support.

Manoj Kumar, founder of Social Alpha, said assistive technology for education should not only be considered as a social venture but a solid business model of its own and the same needs to be developed further.

Chapal Khasnabis, head of assistive technology, medical devices and diagnostics at WHO, highlighted access to assistive technology and global best practices and stressed how India can become truly inclusive.

A panel moderated by P.V.M. Rao of IIT Delhi and consisting of Anupam Basu, NIT Durgapur, Anil Prabhakar and Sujata, IIT Madras, discussed research and innovations and partnership required for inclusive education.


Friday, June 14, 2019

கல்விக்கு மகுடம்! கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்...


+2 தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. மாணவர்கள் கல்லூரி சேர்க்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் நேரமிது. இந்நேரத்தில் வேலைவாய்ப்பை அளிக்கும் கல்லூரிக்கே மாணவர்களும் பெற்றோர்களும் முன்னுரிமை அளிப்பதைப் பார்க்கமுடியும். கேம்பஸ் இன்டர்வியூ, எனப்படும் வளாக நேர்காணலில், அதிக நிறுவனங்களை ஈர்க்கும் கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விரும்புவர். அந்தவகையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் 400 ஏக்கரில் பரந்து விரிந்து அமையப்பெற்றுள்ள கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களின் விருப்பத் தேர்வாக திகழ்ந்துவருகிறது.

ஒரு லட்சத்து இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில், ஒரே சமயத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் படிப்பறை, கணினி மயமாக்கப்பட்ட புத்தகங்களின் குறிப்புக்கள், வீடியோ கான்ஃபரன்ஸ் ஹால், 90,000 புத்தகங்கள், 40 லட்சத்துக்கும் மேலான மின் புத்தகங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பல்வேறு பருவ இதழ்கள் அடங்கிய, 1000 மாணவர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கக்கூடிய அளவு பிரம்மாண்டமான முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூலகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. உயர்தர கேன்டீன்கள், 2000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே கான்ஃபரன்ஸ் மற்றும் செமினார் ஹால், ஒலிம்பிக் தரத்தில் விளையாட்டுத் திடல்கள், மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே ஜிம்கள், பல்கலை வளாகத்தில் 24 மணிநேர வைஃபை வசதியும் உண்டு.

வேலைவாய்ப்பில் ஜொலிப்பு...

அனைத்து மாணவர்களுக்கும் ஆளுமை மேம்பாடு (Personality Development) பயிற்சி, வேலைவாய்ப்புக்கான சாப்ட் ஸ்கில் பயிற்சி, வினாடிவினா, கணிதத் திறன் பயிற்சி ஆகியவை கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து வழங்கப்படுகின்றன. கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலை. பாடத்தோடு சேர்ந்து நடத்தப்படும் இந்தப் பயிற்சிகளுக்கு, மதிப்பெண்களும் உண்டு. இதனால் மாணவர்கள் பணிச்சூழலுக்கு ஏற்ற ஆளுமையைப் பெறமுடிகிறது. முதலாம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படுவதால், புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஒரு நபர் 2 ஆணைகள் வரை பெறமுடிகிறது.

கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், 2018-19 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 101 கம்பெனிகள் வருகைதந்து, இதுவரை 1600 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள், இவர்களுக்குத் தொடக்கச் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் ஆகும். இதில் பைஜூஸ் கம்பெனி மூலம் தேர்ந்தெடுக்கப்பபட்டுள்ள மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்கும்பொழுதே 320+ மாணவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான (Internship) ஆணை கிடைத்துள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்தியேக வேலைவாய்ப்புக் குழுவின் உதவியுடன் புகழ்பெற்ற நிறுவனங்களில், பயிற்சியும், வேலைவாய்ப்பும் உறுதிசெய்யப்படுகிறது.

இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் வல்லுனர்களையும், மேலாளர்களையும் உருவாக்கியுள்ளது கலசலிங்கம். இவர்கள் யாவரும் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் சிறப்பான பணிகளிலும், சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கோர்ஸ்கள்...


இங்கு மின்னியல், மின்னணு, பயோடெக்னாலஜி, பயோ மெடிக்கல், ஏரோநாடிக்கல், கெமிக்கல், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலெக்டிரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, கேட்டரிங், அக்ரிகல்சர், ஆர்க்கிடெக்சர் உள்ளிட்ட பிரிவுகளுடன், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பிஏ., பி.சிஏ., போன்ற இளங்கலைப் பிரிவுகளும், எம்.காம்., எம். எஸ்ஸி ., எம்.பிஏ, எம்,ஃபில்., எம்.டெக்., போன்ற முதுநிலைப் பிரிவுகளும், பி. ஹெச்டி முனைவர் பட்டப் பிரிவு மற்றும் பி. வோக் என்ற மூன்று வருட புதிய படிப்புடன், மொத்தம் 64 பாடப்பிரிவுகள் உள்ளன.

புதிய பாடப்பிரிவுகளாக ஃபோரின்சிக் சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் இந்த ஆண்டு முதல் துவங்கப்படவுள்ளன. மேலும் வாய்பேசாத, காதுகேளாத மாணவர்களுக்காக, பி டெக் துறையில் சி எஸ் சி மற்றும் மெக்கானிக்கல் என இரண்டு புதிய பிரிவுகள், இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பி.காம் படிப்பும் இந்தாண்டு முதல் துவங்கப்படவுள்ளது.

தன்னிகர் அற்ற தரம்...


NAAC-இன் 'A' கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், 4 புள்ளிகளுக்கு, 3.11 CGPAவைக் கொண்டுள்ளது. Careers 360° நிறுவனம், இந்தியாவின் உயரிய கல்வி நிறுவங்களில் ஒன்றாக AAAA ரேங்கிங்கை கலசலிங்கத்துக்கு வழங்கியுள்ளது. தேசிய மனிதவள அமைச்சகத்தின் தரவரிசைப்படி, இந்திய அளவில் உயர்கல்வி படிப்பதற்கான சிறந்த கல்வி நிறுவனங்களில் 7வது இடத்தைப் பிடித்துள்ளதோடு, அதே அமைச்சகத்தின் NIRF பிரிவின் இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கான தரவரிசையில் தேசிய அளவில் 61 வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், QS-IGAUGE நிறுவனத்தின் தரவரிசையில், உயர்வான 'டைமண்ட்' ரேட்டிங் பெற்றுள்ளது.

கலசலிங்கம் பல்கலையின் ECE, EEE, சிவில், பயோடெக், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளுக்கு, 6 வருடங்களாக NBA Washington Accord எனும் மிக உயரிய சர்வதேச தரச்சான்றிதழ் கிடைத்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.

மாணவர்களுக்கு கட்டணச்சலுகை மற்றும் உதவித்தொகை...


ஸ்டேட் போர்டு மாணவர்கள் 95% மதிப்பெண்கள் எடுத்திருந்தால் 50%ம், 90% எடுத்தால் 25%ம், 85% எடுத்தவர்களும் 10%ம் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. சி. பி. எஸ். இ மாணவர்களுள், 85% மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு 50%ம், 80% எடுத்தவர்களுக்கு 25%ம், 75% எடுத்தவர்களுக்கு 10%ம் கல்விக்கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. JEE, NEET மற்றும் KEEE எக்ஸாம் பிரிவுகளுக்கும் ஸ்காலர்ஷிப் உண்டு. மேலும், என்ஜினியரிங் படிக்கும் போது படிப்பில் முதல் மூன்று இடங்கள் பெறும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விளையாட்டுத்துறையில் மாநில & தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்குச் சிறப்பு உதவித்தொகையும் உண்டு. ஒவ்வொரு வருடமும் சுமார் 5 கோடி ரூபாய்க்கும் மேலான கல்வி உதவித்தொகையை பல்கலை நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

பாடங்களையும், அதைக்கற்பிக்கும் ஆசிரியர்களையும் தங்களின் விருப்பமுறையில் தேர்ந்தெடுக்கும் CBCS கல்வி முறை முழுவதுமாக நடைபெற்றுவருகிறது. மேலும் தொழிற்சாலை நிபுணர்கள், தெழிற்சாலைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள், வருகைதந்து அப்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து தேர்வு நடத்தும் “1” கிரெடிட்' பாடத்திட்ட நடைமுறை மாணவர்களைக் கவர்ந்துள்ளது. மாணவர்கள் வெளிநாடு சென்று படித்து வருவதற்கென 35 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், அயல்நாட்டு வல்லுநர்கள் வருகை தந்து அங்குள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். பிற நாட்டு மாணவர்கள் ஒரு பருவம் இங்கே வந்து படிப்பதாலும், ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஜப்பான், கொரியா மொழிகள் கற்பிக்கப்படுவதாலும் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்கும் அனுபவத்தை பெறுகின்றனர்.

தொழில்வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்!

கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பக்கழகத்தின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்புகளை சுயதொழிலாக வளர்த்தெடுக்கும் மையம் ஒன்றும், சுயதொழில் தொடங்குவதற்கு விதையாக துவக்க நிதி வழங்கும் மையமும் இயங்கி வருகின்றன. இந்த மையங்களின் மூலம் மாணவர்களுடைய 20 புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அதைச் சுய தொழிலாக மாற்ற ரூ. 90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள மாணவர்களுக்கும் சுற்றுப்புற கிராம மக்களுக்கும் குறுந்தொழில் வளர்ச்சிக்காகவும் புதிய தொழில் துவங்குவதற்காகவும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூபாய் 6. 25 லட்சம் வீதம், மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சி மையத்தின் சார்பில் பல்கலைக்கழக சுயதொழில் முனைவோர் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலோடு நிற்காமல் தொடர்ந்து மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டிலிருந்து மூன்றாமாண்டு பி. டெக் மாணவர்களுக்கான சமூக சேவை (புராஜெக்ட்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலம் சிறிய அளவிலான குடிசைத்தொழில்கள், மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நன்மை அடைகின்றன.

தங்கும் விடுதி & ஓட்டுநர் பயிற்சி...

ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு தனித்தனியே, மொத்தம் 6 விடுதிகள் செயல்பட்டுவருகின்றன. வீடு போன்ற சூழ்நிலை கொண்ட இந்த விடுதிகளில் தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு இரண்டும் தனித்தனியே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 2 மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களுடன் 20 படுக்கைகள் கொண்ட 24 மணிநேர மருத்துவ மையம் இங்கு செயல்பட்டுவருகிறது. மாணவ மாணவியருக்கு கார் டிரைவிங் பயிற்சி மற்றும் லைசென்ஸ் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இங்கு பலதரப்பட்ட மாணவர்களும் நாடு முழுவதிலிருந்தும் வந்து படிப்பதால் மாணவர்களுக்கு சிறந்த கலாச்சார அனுபவமும் பன்மொழித்திறனும் கிடைக்கப்பெறுகின்றன. கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பயில்வதால், மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாய்ப்பு பெற்று வாழ்வில் ஒளிரலாம்.

Friday, July 13, 2018

NID Ahmedabad reports rise in applications from people with disabilities

12.07.2018
India's premier design institute, the National Institute of Design, Ahmedabad has reported a rise in the number of applications under Persons with Disability (PWD) category. This year, NID received a total of 114 applications as against 78 last year. While the institute has roped in BM Institute of Mental Health to scrutinize the applications, they are also in talks to identify discipline-wise disability, to encourage such students.

As per the data shared by Professor Bhaumik Nagar, admissions chairperson, there has been an increase in the number of applications in the undergraduate and post-graduate courses. The institute received 82 for Bachelors of Design this year, as against 54 last year. As many as 32 students have applied for the Masters programme; NID had received 24 applications for the same last year.

Last year, the institute admitted seven students, with visual impairment, locomotor, hearing disability and disability due to blood disorder, to the M.Des course. For the B.Des course, five students with specific learning disability were admitted.

Pradyumna Vyas, Director, NID said: "Our teaching is focused on hands-on training and not bookish learning which is why students with disabilities prefer to join NID. While BM Institute of Mental Health has been of great help, by scrutinizing applications, we are currently in talks with them to understand disability-wise disciplines. We want to encourage such students to apply at NID. For example, if we get 50 partially blind students applying for animation or graphic design course, they will face difficulties. This is where the tole of BM Institute of Mental Health comes in place."

Madhu Singh, Director, BM Institute of Mental Health, said: "NID approached us last year to scrutinize fake applications and genuine ones. The PwD Act was enacted in 1995 which included only 7-8 kinds of disabilities whereas the same was revised in 2016 and 21 types of disabilities were included. Wherever we have doubt, we inform the institute to avail further documents of the applicants and then proceed with admissions. This year, maximum applicants suffered from learning disorder."

Wednesday, April 5, 2017

Ability Foundation - Inclusive higher education for people with disabilities

Ability Foundation is a national cross disability organisation established in 1995 as a public charitable trust for the empowerment and mainstreaming of persons with disabilities. Based in Chennai, India, Ability Foundation is involved in pioneering activities, ranging from publishing and media, counselling and referral services, advocacy, and training and employment. Over the years, the Foundation has organized several events all of which aim at dispelling stereotypes and changing public attitudes/perceptions towards disabled persons. The organization works towards an inclusive society and equal opportunities and a level playing field for persons with disabilities stressing on the need to have the right opportunities at the right time. This, we resolutely believe will make so much more possible All it takes is an open mind.




⬇⬇⬇⬇

Saturday, June 11, 2016

காது கேளாதோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

11.06.2016, கடலூர் மஞ்சக்குப்பத்தில் காது கேளாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் இப்பள்ளியில் கல்வி, உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உதவித்தொகை, காதொலிக் கருவி, பேருந்து பயண அட்டை மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தற்போது, 2016-17-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு 24, வேணுகோபாலபுரம் பிரதான சாலை, மஞ்சக்குப்பம் என்ற முகவரியிலோ அல்லது 04142-221744, 94875 55948 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அ.மரியபாஸ்கா தகவல் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 25, 2016

கட்டணமின்றி மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர வாய்ப்பு



25.07.2016, சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டணமின்றி படிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்றாண்டு டிப்ளமோ படிப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு படிக்க விரும்பும் மாணவர்கள், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலாஜி, மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான தனி விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், சுய விலாசமிட்ட உறையில் ரூ.10க்கான தபால் தலை ஒட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய மாணவர்களுக்கு படிப்பு கட்டணம் இலவசம், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணத் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தொடர்புக்கு 94862 33740 , 97883 98892, 90923 52973 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.