FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label நிதி உதவிகள். Show all posts
Showing posts with label நிதி உதவிகள். Show all posts

Monday, April 21, 2025

வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு

 

21.04.2025 திருச்சுழி அருகே வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தனுஷ்கோடி இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி உயிரிழந்த நிலையில் மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகனும் தஞ்சாவூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வரும் நிலையில் இங்கு தனிமையில் முற்றிலும் சிதலமடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். வீடு முழுவதும் சேதமானதால் தற்போது வீடின்றி ஊர் பொது கலையரங்கத்தில் தங்கி சமையல் செய்து வசித்து வந்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த முறை ஆய்விற்கு சென்ற தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு சாலையில் செல்லும்போது அந்த வீட்டினை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து இவருக்கு வீடு வழங்க ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட வேலைக்கான உத்தரவு ஆணையினை மாற்றுத்திறனாளி முதியோர் தனுஷ்கோடியிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார். அப்போது வேலைக்கான உத்தரவு நகலை வழங்கிய பிறகு முதியவரிடம் உங்கள் வீட்டை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும். உங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் வரை சென்று கோரிக்கை வைத்து வாங்கி வந்துள்ளேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இந்த வீடு கட்டி முடிக்கும் வரை அதிகாரிகள் களத்தில் இருந்து உடனுக்குடன் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சர் தங்கம்தென்னரசு உத்தரவிட்டார்.



Thursday, January 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும். விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.






02.01.2025
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி
தெரிவித்திருப்பது:

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, குறைந்த அளவிலான மனவளர்ச்சிக் குன்றியவர், 75 சதவீதம் மேல் மனநலன் குன்றிய தாய்மார்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களின்அடையாள அட்டை, ஆதார் அட்டை, தையல் தொழில் பயிற்சி சான்றிதழுடன் இணைய வழியிலோ அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் 8438736944 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே தேர்வில் பங்கேற்றவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, தேர்வு பெற்றுள்ள விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தி, தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், தகுதியான மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) மாலை 5 மணிக்குள் இணைய வழியிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நேரிலோ பிண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.





Monday, September 28, 2020

‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


Sunday, September 27, 2020

ஆவின் பால்பொருள் விற்பனை மையம்: மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு


26.09.2020
திருச்சி, செப். 25: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால்பொருள் விற்பனை மையம் தொடங்கிப் பயன்பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு ஆவின் முகவா்களாகும் வாய்ப்புள்ளது.

தோ்வு செய்யப்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன் வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருள் கொள்முதல் நிதியாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆவின் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆவின் உற்பத்தி பொருள்களை விற்க வசதியாக வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 1 வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் காா்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590.

Wednesday, September 16, 2020

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 வகை திருமண உதவிகள்

16.09.2020
திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 4 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெறலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 வகையான திருமண உதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

கை, கால் பாதிக்கப்பட்ட நபா்களை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்தல் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். பாா்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோா் திருமணம் செய்யும் திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவா்களை நல்ல நிலையில் உள்ளவா்கள் திருமணம் செய்தல், மாற்றுத் திறனாளியை மாற்றுத்திறனாளியே திருமணம் செய்தல் என 4 நிலைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதியரில் யாரேனும் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ. 50 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.

தம்பதிகளுக்கு முதல் திருமணமாக இருத்தல் அவசியம். திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமண அழைப்பிதழ், மாா்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்று நகல், முதல் திருமணம் என்பதற்கான விஏஓ சான்று ஆகியவற்றுடன் நேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், கன்டோன்மென்ட் என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 0431-2412590.



Friday, July 17, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் துவங்க கடன்

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகள் என்ன?.

- மாவட்டத்தில் 31 ஆயிரத்து 972 பேர் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்துள்ளனர். இவர்களது தேவையை அறிந்து அரசின் சலுகைகளை பெற்று தரப்படுகிறது.

* மன நலம் பாதித்தோருக்கு நிதி உதவி என்ன.

மன நலம் 45 சதவீதம் குன்றியோருக்கு, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 மற்றும் அதற்கு மேல் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டோர், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம்தோறும் தலா ரூ.1500 வழங்கப்படுகிறது.

* சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் நிதி வழங்கப்படுகிறதா.
- கண் பார்வை, செவித்திறன், கை, கால் பாதித்தோருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி உண்டா.- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவி தொகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெற்றுத்தரப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை தடையில்லாமல் கிடைக்கிறதா.

- 2020 ல் ஜூன் வரை வழங்கப்பட்டு விட்டது.

* வேறு சில நலத்திட்ட உதவிகள் என்ன.

- 40 சதவீதம் பாதிப்புள்ளோருக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், கை, கால் பாதித்த, காது கேளாதோர், பார்வையற்றோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்களை திருமணம் செய்து வைத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிற மாற்றுத்திறனாளிகளிகளை திருமணம் செய்து கொண்டால் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை.

- 1 முதல்- 5 ம் வகுப்பு ரூ.1000, 6 - முதல் 8 ம் வகுப்பு ரூ.2000, 9 முதல் - பிளஸ் 2 ரூ.3000, இளநிலை படிப்பு ரூ.4000, முதுகலை படிப்பு ரூ.7000 என கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

உயர் கல்வி பயில்வோருக்கு சலுகைகள் உண்டா.

- உயர் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு, சட்ட புத்தகம் வாங்க ரூ.3000 வழங்கப்படுகிறது.

அரசின் பிற சலுகைகள் என்ன.

- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பயண சலுகை உண்டு. தனியாக பயணம் செய்ய இயலாத மாற்று திறனாளிகளுடன் உதவியாளர் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யவும் சலுகை உண்டு.

சுய தொழில் துவங்க உதவி செய்யப்படுமா.

- பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 5 சதவீதம் தனிநபர் பங்கு தொகையை அரசு வழங்குகிறது. தேவிய ஊனமுற்றோர் நிதி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் சுய தொழில் துவங்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளதா.

- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் சேர்ப்பதற்கு சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அரசு நிதி உதவியுடன் ஜீவக்கல் மன நல காப்பகம் இருபாலருக்கும் இலவமாக நடத்தப்படுகிறது.

* மன நலம் குன்றிய பெண்களுக்கு காப்பகம் உண்டா.-

விருதுநகர் குல்லுார் சந்தையில் அரசின் நிதியுடன் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான பெண்கள் காப்பகம், பயிற்சி மையம் உள்ளது என்றார்.

தொடர்புக்கு 04562 252 068.

Wednesday, December 5, 2018

மாற்றுத்திறனாளிகள் அரசு சலுகைகளை பெறுவது எப்படி?


அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும். மேலும் இத்தகைய அடையாள அட்டைப் பதிவுதான் அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைத் தீட்டவும், சலுகைகள் அளிக்கவும் அடிப்படையாக அமைகிறது...


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு. அந்த வகையில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் குறைபாடு உள்ளவர்களும் மற்றவர்களைப் போல வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். அவர்களில் பலருக்கு அரசின் சலுகைகள், திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. அவைபற்றித் தெரிந்துகொண்டால் அவர்களது வாழ்வு சிறக்கும். அதே நேரத்தில் அவர்களை அடையாளம் கண்டு அவர்களது வாழ்வு மேம்பட பல்வேறு திட்டங்களை அரசு வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு சலுகைகளையும் அளித்து வரும் சூழலில் மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அதைப் பகிர்ந்துகொள்வது ஏற்புடையதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாற்றுத்திறனாளி என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். இதுவே ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைப் பெறுவதற்கான தேவைகளாகும். அதே வேளையில், மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்படும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவது அவசியமே தவிர கட்டாயமில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும். மேலும் இத்தகைய அடையாள அட்டைப் பதிவுதான் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைத் தீட்டவும், சலுகைகள் அளிக்கவும் அடிப்படையாக அமைகிறது.

சான்றிதழ் எங்கெல்லாம்‌ உதவும்?

1) பள்ளியில் சேர.

2) தேர்வில் கூடுதல் நேரம் பெற.

3) 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழித் தாளிலிருந்து விலக்குப் பெற.

4) பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டில் கட்டணச் சலுகை பெற.

5) வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற.

6) இன்னும் பல இடங்களில் சலுகை, முன்னுரிமை பெற.

அரசுத் திட்டங்கள் எவையெவை?

1) மாத உதவித் தொகை

2) இலவச நான்கு சக்கர வாகனங்கள்

3) காதுகேள் பொறி

4) நிதியுதவி

5) கண்பார்வையற்றோருக்கான உதவி உபகரணங்கள்.

ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட இயலாமை குறித்து அரசு மருத்துவர் உறுதிசெய்த பிறகே சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையில் அவரது இயலாமை சதவிகிதம் குறிக்கப்பட்டிருக்கும். `ரைட்ஸ் ஆஃப் பேர்ஸன்ஸ் வித் டிஸ்ஸெபிலிட்டீஸ் ஆக்ட் 2016' (Rights of Persons with Disabilities Act, 2016), நடைமுறைக்கு வருவதற்கு‌முன்‌ ஏழு‌ வகைக் குறைபாடுகளே அரசால் அங்கீகரிக்கப்பட்டன. தற்போது ஆட்டிசம் உட்பட 21 வகைக் குறைபாடுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

அவைகுறித்து பார்ப்போம்.

* பார்வை இழப்பு

* பார்வைக் குறைபாடு

* குணமடைந்த தொழுநோய்

* செவித்திறனற்றோர், செவித்திறன் குறைபாடு.

* கை கால் பாதிப்பு/ விபத்தால் இழப்பு

* உடல்வளர்ச்சி குன்றிய நிலை

* மூளை வளர்ச்சிக் குறைபாடு.

* மனநோய் (Mental illness)

* ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder)

* பெருமூளை வாதம்

* தசை அழிவு

* நீண்டநாள் நரம்பு மண்டலப் பாதிப்பு

* குறிப்பிட்ட கற்றல் குறைபாடு

* பேச்சு மற்றும் மொழித் திறம் குறைபாடு

* ரத்த அழிவுச்சோகை (தலசீமியா)

* ரத்தம் உறையாமை (ஹீமோஃபீலியா)

* ஸிக்கிள்‌ செல் அனீமியா (Sickle cell anemia)

* செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உட்பட இரண்டு அல்லது மூன்று குறைபாடுகள் சேர்ந்துள்ள நிலை

* அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்.

* நடுக்குவாதம் (பார்க்கின்சன்)

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென அடையாள அட்டை மற்றும் சான்றிதழைப் பெறுவது பல்வேறுவகையில் நன்மை தரும். மேற்கூறிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைப்பெற அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளை அணுகி தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் எல்லா மாவட்டத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சான்றிதழ் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். இந்த சேவை சென்னை கே.கே நகரில் உள்ள மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் பயிற்றுநர் மற்றும் தொடர்பாளர் ஷீபா நம்மிடம் பேசினார்.

``மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெற சென்னை கே.கே நகரில் உள்ள எங்களது மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களது குறைபாடுகளுக்கேற்ப அதற்கெனக் குறிப்பிட்ட நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை, செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முழுமையாகப் பார்வைத்திறன் இழந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் கை மற்றும் கால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் கைகளை இழந்தவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குள்ள மனிதர்கள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோய் குணமடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெள்ளிக்கிழமை - மனவளர்ச்சி குன்றியவர்கள், `ஆட்டிசம்' பாதிப்பு உள்ளவர்கள், புற உலகச் சிந்தனையில்லாதவர்கள், குறிப்பிட்ட கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில், அந்தந்தக் குறைபாடுகளை உறுதிசெய்ய அரசு மருத்துவர்கள், இந்த மையத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம் அரசு மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். அதன்பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

அடையாள அட்டை பெற சில ஆவணங்கள் தேவைப்படும். அவை என்னென்னவென்று பார்ப்போம். குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட மார்பளவுப் புகைப்படம், மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் சிகிச்சை சான்றிதழ்கள் போன்றவையாகும்.

எங்களது மையத்தில், பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் துணையுடன் சிறப்புக் கல்வி, தொழில் பயிற்சிகள், நடத்தைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றுடன் தொடக்க நிலையிலேயே குறைபாடுகளைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது எனப்படும் ஏர்லி ஐடென்டிஃபிகேசன் (Early identification) மற்றும் ஏர்லி இன்ட்டர்வென்சன் (Early intervention) சேவையும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, எங்களது மாநில வள ஆதாரப் பயிற்சி மையம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவகர்லால் நேரு இன்னர் ரிங்க் ரோடு, கே.கே. நகர், சென்னை - 600 078, தொலைபேசி எண்: 044-24719942

‌* சென்னை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரி சென்னை -ஃபாரஸ்ட் ஆபீஸ் பில்டிங், டி.எம்.எஸ். காம்பவுண்டு, சென்னை - 600 006 தொலைபேசி எண் 044-24315758

* காஞ்சிபுரம்: ஜிஎஸ்டிரோடு (கோர்ட் அருகில்), காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - 603 001 தொலைபேசி எண் - 044 27431853

* திருவள்ளூர்: மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர், தொலைபேசி எண் - 044-27662985

* வேலூர்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டப் பஞ்சாயத்து அலுவலக வளாகம், பெருமாள்சாமி கட்டடம் (தரைத்தளம்), வேலூர்.தொலைபேசி எண்- 0416 2222737

* திருவண்ணாமலை: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தரைத் தளம், கலெக்டர் நகர், திருவண்ணாமலை - 606 604, தொலைபேசி எண்: 04165 294635

* கடலூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 37 - ராமதாஸ் சாலை, புதுப்பாளையம், கடலூர் - 607 001, தொலைபேசி எண்: 04142 294415

* விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம், தொலைபேசி எண்: 04146 225543

* சேலம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 146 - வெங்கடேசபுரம் விரிவு, குமாரசாமி பட்டி, சேலம் - 637 003, தொலைபேசி எண்: 04286 280019

* ஈரோடு: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், ஈரோடு - 638 001, தொலைபேசி எண்: 0424 2258986

* கோயம்புத்தூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் - 641 018,தொலைபேசி எண்: 0422 2380382

* தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,எம்.சி. ரோடு (மேம்பாலம் அருகில்) தஞ்சாவூர் - 613 001, தொலைபேசி எண்: 04362 236791

* நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (தரைத்தளம்), பால்பண்ணைச்சேரி (தெற்கு), நாகப்பட்டினம் - 611 002, தொலைபேசி எண்: 04365 253041

* திருச்சி: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 1/1 பிளாக் 1 ,வார்டு J, மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், துணை கணக்காயர் அலுவலகம் அருகில், கன்டோன்மென்ட், திருச்சி - 620 001, தொலைபேசி எண்: 0431 2412590

* மதுரை: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சுப்ரமணியபுரம், வில்லாபுரம் அஞ்சல், மதுரை - 625 011, தொலைபேசி எண்: 0452 2679695

இவைதவிர திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய முகவரிகளில் அவரவர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். இது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் மையத்தையும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறியலாம்.

தொலைபேசி எண்: 044-24719942, 24719943

இலவச தொலைபேசி எண்:18004250111

Wednesday, April 19, 2017

Merit Based Education for Students with disabilities with Full Scholarship


Ability foundation and Sathyabama University offer merit based admission to 50 students with disabilities for the year 2017.

Course : B.E, B.tech, B.Com and MBA
  • Full scholarship covering tuition and hostel fees
  • Study environment suited to one’s disability
  • Accessible Hostel facilities
Avail of this great opportunity

Completed forms must reach Ability Foundation, on or before, Friday 19th May 2017.

Download Application Forms:

For more information e-mail
varsity@abilityfoundation.org

Administrative Office:
Ability Foundation, New No.4, Old No.23, Third Cross Street,
Radhakrishnan Nagar, Thiruvanmiyur
Chennai – 600 041, India.

Telephone Numbers:
91 44 2452 0016

Tuesday, April 4, 2017

Scheme of Free Coaching for Students with Disabilities


Central Sector Plan scheme of Free Coaching for Students with disabilities
Notification : F.No. 14-24/2013-Sch

Index
  • Objectives
  • Courses for coaching
  • Implementing Agencies
  • Eligibility Criteria for applying for empanelment of Coaching Institutes:
  • Selection of Institutes
  • Funding Pattern
  • Quantum of Coaching Fees
  • Eligibility criteria and selection of candidates:
  • Stipend
  • General Provisions
  • Review of performance and monitoring
  • Date of Commencement of the Scheme
  • Jurisdiction of the Schemes
  • Furnishing of False Information
  • Litigations
  • Administrative Expenses
  • Revision of the Scheme
Schemes for providing free coaching to students belonging to Scheduled Castes(SCs) and Other Backward Classes(OBCs) is presently available. However, there is no such ongoing scheme for students with disabilities. XII Five year Plan document in the context of socio-economic development of persons with disabilities, inter alia, provides that emphasis will be on educational development of such persons through a scheme for free coaching of students with disabilities.

Objective

The objective of the Scheme is to provide coaching for economically disadvantaged students with disabilities, having minimum 40% or more disability to enable them to appear in competitive examinations and to succeed in obtaining an appropriate job in Government / Public / Private Sector.

Courses for coaching


The courses for which the coaching will be imparted shall as follows

  • Recruitment examinations conducted by the Union Public Service Commission(UPSC), the staff selection Commission(SSC) and the various Railway Recruitment Boards (RRBs) for Group ‘A’and ‘B’ posts;
  • Recruitment examinations conducted by the state public service commission for group ‘A’ and ‘B’ posts in the respective states.
  • Recruitment examinations conducted by INstitute of Banking Personnel Selection (IBPS), Nationalized Banks, Government Insurance Companies and Public Sector Undertakings (PSUs) for Officer level posts under them.
  • Entrance Examinations for admission in
    1. (a) Engineering (eg. IIT-JEE)
    2. Medical (eg.NEET)
    3. Professional courses like Management(eg. CAT)
    4. Law (eg. CLAT) and
    5. Any other such disciplines as Ministry may decide from time to time
Implementing Agencies

The Scheme will be implemented through the reputed coaching institutions / centre run by the:
  • Central Government / State Governments / UT Administrations and PSUs or Autonomous Bodies there under
  • Universities (under both central and state governments) including the Deemed Universities and Private Universities; and
  • Registered private institutions / NGOs
Eligibility Criteria for applying for empanelment of Coaching Institutes:
  • The institute should be a registered body or run by any organization registered under the Societies Registration Act, 1860 /Companies Act, 2013 or any other relevant Act of the State / Union territory;
  • The institute should have been registered at least for a period of 3 years as on date of notification inviting applications from States / UTs/ Coaching Institutes for empanelment by the Department of Empowerment of Persons with Disabilities
  • The institute should have been fully functional for a minimum period of 3 years at the time of applying under this scheme and having a minimum enrolment of 100 students in the courses as indicated at Para-3 here in above each year for at least two years, immediately prior to the year in which empanelment is sought
  • The institute must have proper infrastructure (barrier free) to meet all prescribed requirements for providing coaching in the courses applied for.
Selection of Institutes

(i) The proposals for empanelment of coaching institutes will be considered by a Selection Committee and recommended for selection based on their past record of performance and other criteria to be determined by the Selection Committee. The institutes for providing coaching will finally be selected by the DEPwD based on the recommendations of the Selection Committee. The Composition of Selection Committee will be as follows:

Joint Secretary (DEPwD) – Chairperson
Financial Advisor, DEPwD or nominee not below the rank of DS/Director – Member
Joint Secretary, Deptt. of Higher Education – Member
Two Representatives from relevant background to be decided by the department – Member
Director / Ds, Concerned, DEPwD – Convener

(ii) The States/UTs will furnish a list of (not more than 10) reputed coaching institutes with a proven track record of success in coaching in courses identified in Para-3 here-in-above.

(iii) In addition to proposals received from States, the Selection Committee, as indicated at Sub-para (i) above, may also propose empanelment of institutes which enjoy good reputation and record of performance in providing coaching.

(iv) On receipt of list of names of coaching institutes, the institutes will be requested by Department of Empowerment of Persons with Disabilities (DEPwD) to submit a detailed proposal in compliance with requirements of the Scheme along with their performance record in proforma as requested.

(v) Reputed institutes having branches in more than one district in a State will be given preference over stand alone institutes.

(vi) The concerned Programme Division will carry out a preliminary screening of the proposals received from State Governments / UTs and institutes recommended by the Selection Committee and shortlist those, which prima facie satisfy the eligibility criteria and have all prescribed supporting documents. Such shortlisted proposals shall be placed before the Selection Committee.

(vii) The institutes, once selected, will enter into an Agreement with the Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), Ministry of Social Justice and Empowerment, Government of India with regard to the courses to be offered, terms and conditions of empanelment, fee structures, frequency of disbursal, number of slots, duration of courses, furnishing of Utilization Certificates, etc.

(viii) Selected coaching institutes will be empanelled for a period of three years subject to their Agreements entered with the DEPwD.

Note: With a mew to give the Scheme wider publicity, the coaching institutes will issue advertisement in the local newspapers and invite applications from the eligible Persons with Disabilities (PwDs) candidates as per promsions of the Scheme.

Funding Pattern


i) The Department of Empowerment of Persons with Disabilities (DEPwD), Ministry of Social Justice and Empowerment, Government of India will fund the entire expenditure of coaching provided to selected PwDs candidates as per the terms and conditions of the Scheme and agreement entered into with the concerned coaching institute.

ii) Fee component will be released directly to the coaching institutes/centers concerned in the form of grant-in-aid.

iii) Grant-in-aid will be released to the institutes concerned in two equal installments every year.

iv) The first installment will be released to the institutes immediately after their empanelment. However, the second installment of grant-in-aid will be released (in shape of reimbursement) to the coaching institutes on production of Utilization Certificate, details of expenditure made, audited accounts certified by a Chartered Accountant, details of courses conducted and number of students coached.

v) After completion of first year, the performance of the institutes will be assessed before releasing the fund for the subsequent year. The release of fund after every year will depend on the satisfactory performance of the institute during the previous year.

vi) The grant-in-aid for 2nd and 3rd year would be released to empanelled coaching institutes only after receipt of due Utilization Certificate, list of students coached with the previous year’s grant, audited accounts in respect of previous year’s funds and performance of students coached during previous year.

vii) The Empanelled institutes should register themselves in National Scholarship Portal (www.scholarships.gov.in) (whenever the portal will be made operational for this scheme).

viii) The applicants (students/trainees) should submit their application for coaching through the on-line system by the last date prescribed for receipt of applications. All requisite documents like photograph, proof of age, disability certificate, income certificate of the parent, etc. duly filled in the prescribed format will be required to be uploaded in the on-line system. [However, until this scheme of Free Coaching starts through National Scholarship Portal, the candidates shall submit their applications to the Empanelled Coaching Institutes of their choice through off-line method]

ix) The Nodal Officer nominated by Empanelled institutes shall verify the applications and process the same and forward the final list in PFMS portal for disbursal of stipend and Special allowance.

x) Stipend and Special allowance admissible to the candidates shall be released directly to their Bank Accounts through PFMS portal under Aadhaar based DBT by DEPwD.

Quantum of Coaching Fees

The quantum of coaching fees will be as agreed to in the agreement between the DEPwD and the coaching institute at the time of empanelment.

Eligibility criteria and selection of candidates:

(i) Free coaching under this scheme will be available to students with disabilities who are covered under the Persons with Disabilities (Equal Opportunity, Protection of Rights and Full Participation) Act, 1995 and the National Trust for the Welfare of Persons with Autism, Cerebral Palsy, Mental Retardation and Multiple Disabilities Act, 1999 and any other relevant Act issued by the Govt, of India from time to time.

(ii) The students should be selected by the coaching institute based on academic criteria prescribed by the institute itself. However, the institute may relax these criteria for PwDs candidates as per terms to be laid down in the Agreement.

(iii) The candidate should be eligible to appear at the examination for which he/she is obtaining the coaching under this Scheme.

(iv) Income Ceiling: Only students with disabilities having total family income from all sources of Rs.6.00 lakh or less per annum will be eligible to apply under the Scheme.

(v) Benefits under the Scheme can be availed by a particular student not more than once, irrespective of the number of chances he/she may be entitled to take in a particular competitive examination. The coaching institute will also be required to take an undertaking from the students that they have not taken benefit more than once under the Scheme.

(vi) Candidates who are not availing the benefits of free coaching under any other scheme of the Central Govt, are eligible under the scheme. The coaching institute will also be required to take an undertaking from the students that they have not availed benefit of free coaching under any other scheme of the Central Govt.

(vii) However, notwithstanding the provision at para (v) above, where examination is conducted in two stages viz. Preliminary and Main, the candidates will be entitled for free coaching for both the stages of examinations. They will be entitled for free coaching separately for both the Preliminary and Main examinations as per their convenience. However, there will be no restriction in number of chances for coaching for Interview, if the candidate is selected for interview.

(viii) Attendance: In the event of any student remaining absent for more than 15 days without any valid reason, benefits of free coaching to him/her shall be discontinued under intimation to the DEPwD.

(ix) Duration of Coaching Assistance: On completion of the first year, if a student wants to continue for the second year, he/she has to apply for renewal of coaching assistance.

Stipend

Monthly stipend of Rs.2500/- (Rupees Two Thousand and Five Hundred only) per student will be paid for local students for attending the coaching class. Similarly, Rs.5000/- (Rupees Five Thousand only) per student will be paid p.m for outstation students. Special Allowance of Rs.2,000/- (Rupees Two Thousand only) per student p.m will be paid to students towards reader allowance, escort allowance, helper allowance etc.

General Provisions

i) The institutes shall maintain complete progress record of the coaching and selection of the candidates.

ii) Grant-in-aid released to the institutes shall be dealt with in a separate account by them.

iii) The institutes shall utilize the grant-in-aid only for the purposes laid down in this Scheme. In the event of the grantee institute acting in contravention of this condition, the institute will be liable to refund the amount received with 18% penal interest and other action, as deemed necessary.

Review of performance and monitoring

i) There will be a review of performance of the coaching institutes at the end of 3rd year of empanelment. The assessment will be based on the results of PwDs candidates provided coaching under the Scheme and the success rate enjoyed by coached students in clearing competitive examination for which he/she has received coaching.

ii) The DEPwD reserves the right to conduct random inspection/check from time to time of any of the empanelled institutes.

iii) The DEPwD reserves the right to discontinue funding under the Scheme at any point of time if the performance of the coaching institute is found to be unsatisfactory.

Date of Commencement of the Scheme

The scheme will be effective from 1st April, 2017.

Jurisdiction of the Scheme

The jurisdiction of the Scheme is up to providing prescribed financial support to the selected candidates for receiving coaching assistance in specified courses. The Scheme does not cover employment aspects of the beneficiaries and also does not provide for any kind of assistance to them in seeking employment or admission anywhere, after his/her having availed of the benefits of free coaching.

Furnishing of False Information

If any candidate has furnished any false information/document and is established as false, he/she will be debarred from the award and if he/she has availed of it or is availing, an action will be initiated for recovery of the amount spent with 15% compound interest thereon. Such candidate will also be black listed for future and appropriate legal action can be taken against the candidates.

Litigations

Any litigation on matters arising out of this scheme will be subject to sole jurisdiction of the courts situated in National Capital Territory of Delhi.

Administrative Expenses

The scheme will be implemented by the Department of Empowerment of Persons with Disabilities. In order to implement the scheme, the Department may have to meet certain administrative expenses like –

a) Engagement of manpower at the Department for execution of the scheme. As the magnitude of data to be entered and processed would be enormous and the scheme gets implemented over the years there would be a need to engage qualified skilled personnel right from the beginning to deal with the scheme.

b) Publishing advertisements and other publicity materials to generate awareness among the targeted beneficiary group.

Accordingly, a provision of not exceeding 3% of the total budget allocated to the scheme shall be kept as administrative expenditure.

Revision of the Scheme

The Scheme will be reviewed every three years.

CLICK HERE ⬇⬇⬇
Scheme of Free Coaching for Students with Disabilities

Wednesday, February 22, 2017

Special and Tuition Fees Exemption G.O for Differently Abled


தமிழ்நாடு அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கட்டணம் ( Special Fees ) மற்றும் கல்விக்கட்டணம் ( Tuition Fees) செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது.

Special and Tuition Fees Exemption G.O for Differently Abled – Tamil Nadu Government Orders

G.O Ms.No. 30 (Special Fees )
Dt: 28/06/2010
( Download PDF )

G.O Ms.No. 135 (Tuition Fees )

Dt: 20/09/2008
( Download PDF )

வருமான உச்ச வரம்பு நீக்கம்

நேர்முகக் கடித எண். 4121/மா.திந. 2/2010 -1 06.7.2010
( Download PDF )

மேலும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ள அரசாணைகளை பதிவிறக்கம் செய்யவும் மற்றும் தெரிந்துகொள்ளவும் பின்வரும் வலைதள பக்கத்தை பார்க்கவும்

Sunday, November 6, 2016

தையல் இயந்திரம் வழங்கல்: மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு

06.11.2016, நாமக்கல்: 
நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆண்டுதோறும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் கை, கால் பாதித்த மற்றும் காது கேளாத, வாய் பேசாத, 18 வயது முதல்,45 வயதுக்கு உட்பட்ட தையல் தெரிந்த மாற்றுத்திறனாளிகள், இத்திட்டத்தில் பயன் பெறலாம். விண்ணப்பத்துடன் உரிய விவரங்களை இணைத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். அதற்கான, வருமான வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

Sunday, February 14, 2016

SBI donates Rs 2.36 Cr to speech, hearing impaired children

10.02.2016, Srinagar:

State Bank of India Tuesday donated an amount of Rs 2.36 crores for rehabilitation of speech and hearing impaired and physically challenged children for the welfare of the inmates of Voluntary Medicare Society.

State Bank of India has in the past conducted various CSR activities like blood donation and medical check-up camps, drug de addiction camps, tree plantation drives, donation of fans, water purifiers and computers to schools of the valley.

Managing Director (National Banking Group) State Bank of India Rajnish Kumar, along with Chief General Manager Anil Kishora, and General Manager, NW-III,LHO Chandigarh Kumar Rajan visited Voluntary Medicare Society (VMS) to make donations.

VMS is dedicated to the care, treatment and rehabilitation of the physically and mentally challenged persons.

VMS will organise camps in schools and in community to aware and identify the persons having speech and hearing impairment. The hearing aids will be provided to beneficiaries as per their type and degree of hearing loss.

Rajnish Kumar also reiterated State Bank of India’s commitment for continuation of its “Corporate Social Responsibility” as a responsible Corporate.

On the occasion, Dr Mir Mohammad Maqbool, founder and President VMS thanked Managing Director and appreciated State Bank's commitment towards care and upliftment of Society.


Saturday, February 13, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

12.02.2016, கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி முதல் அடுத்த மாதம்(மார்ச்) வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.

மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராக அல்லது செவிபுலன் இழந்தவராக இருந்து தமது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வயது வரம்பு 45. மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக்கொண்டிருக்க கூடாது. ஆனால் தொலைதூர கல்வியின் மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே படித்து இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வினியோகம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 14, 2016

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், 14 January 2016
வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளி இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750-ம், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ. 1,000-மும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு- 45. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு- 40.

தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இணைத்து வருகிற 29-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Saturday, January 9, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், 09 January 2016
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, 5ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையினை பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் உதவித்தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வி பயின்றவராகவும், வேறு எந்தப் பணியிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பை தொடர்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

தகுதியுடைய பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், திண்டுக்கல் அலுவலகத்துக்கு வரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை விவரம்:

பிரதி மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 300, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு, மீண்டும் உதவித்தொகை வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.