FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

கஞ்சா போதையில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது




03.12.2025
ஆடுகோடி: பெங்களூரில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை அப்பகுதியினர் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு, ஆடுகோடி எம்.ஆர்., நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பேசவும் முடியாது; நடக்கவும் முடியாது. 9ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர், மகளை வீட்டில் விட்டு விட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர்.

காலை 11:00 மணியளவில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்காததால், கதவை காலால் எட்டி உதைத்து திறந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது மகள், நிர்வாணமாக கீழே விழுந்திருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவின் பின்புறம் விக்னேஷ், தன் உடைகளை அணிந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவர் கூச்சலிட்டார்.

இதனால் தப்பி ஓடிய விக்னேசை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, கால்களை கட்டினர். பின், ஆடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய விக்னேஷ் முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தற்போது விக்னேஷ், நீதிமன்ற காவலில் உள்ளார்.



No comments:

Post a Comment