FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 3, 2025

கஞ்சா போதையில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது




03.12.2025
ஆடுகோடி: பெங்களூரில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை அப்பகுதியினர் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு, ஆடுகோடி எம்.ஆர்., நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பேசவும் முடியாது; நடக்கவும் முடியாது. 9ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர், மகளை வீட்டில் விட்டு விட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர்.

காலை 11:00 மணியளவில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்காததால், கதவை காலால் எட்டி உதைத்து திறந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது மகள், நிர்வாணமாக கீழே விழுந்திருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவின் பின்புறம் விக்னேஷ், தன் உடைகளை அணிந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவர் கூச்சலிட்டார்.

இதனால் தப்பி ஓடிய விக்னேசை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, கால்களை கட்டினர். பின், ஆடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய விக்னேஷ் முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தற்போது விக்னேஷ், நீதிமன்ற காவலில் உள்ளார்.



No comments:

Post a Comment