FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label காதுகேளாதோர் செய்திகள். Show all posts
Showing posts with label காதுகேளாதோர் செய்திகள். Show all posts

Saturday, January 31, 2026

Deaf-mute Mohali couple’s tiffin service goes viral


31.01.2026
Chandigarh

"Yeh toh roti hai. Ye toh aloo-gobhi hai," a shy yet enthusiastic boy informs thousands on social media about his parents' cloud kitchen that has captured the attention of Mohali residents in need of home-cooked food delivery.


While the boy is a "full-time mischief maker" and primary ambassador for the tiffin service on Instagram, Vanshpreet Singh and his wife Anmol Kaur face daily challenges as a deaf and mute couple to keep their business going.

The internet, however, is a fan of the couple's resilience and perseverance in setting up the thoughtfully named cloud kitchen, 'Quietly Delicious'. Their videos are widely circulating on the internet, with many top news outlets covering their story.

"What a cute and lovely family. May god bless them with good health," says one Instagram user. "Food is looking awesome.God bless you guys," another person said.

The story is only improved by the fact that several family members have come together to make it a success.

Besides being the couple's voice in their videos, their young school-going son Sukhmehar Singh helps pack the tiffin boxes. His younger brother Charanmeet Singh and Himanshi are data engineers who live abroad but are available for any help. Himanshi manages their social media handles. In a short period, they have 21,600 followers on Instagram.

Gurmeet Singh and Inderjeet Kaur are proud parents. After their transport business faced problems in Sitapur in Uttar Pradesh, they have now relocated to Mohali and live with Vanshpreet, their elder son, and Anmol.

Gurmeet told PTI that both Vanshpreet and Anmol are deaf and mute since birth.

Having shifted to a rented home in Mohali recently, they came up with the idea of a cloud kitchen. "By God's grace, the response from the people has been good," Gurmeet said at their Mohali home.

"We serve only vegetarian food, packing them in thalis. Our daughter-in-law, who lives abroad, handles the social media and uploads their stories. We make dal, chole, vegetables and sweets. The food is just like we prepare in our homes and that's why people like it.

"We get orders from housing societies nearby. We also get bulk orders from people who want to make religious offerings or serve food to the poor," he said.

Inderjeet explained that Vanshpreet learnt the tricks of cooking by helping her in the kitchen. Anmol and Vanshpreet also distribute food for the needy and underprivileged as 'sewa' (volunteer service).

Vanshpreet told PTI that he is deeply moved by the love and support of people. His father translated for PTI.

"We have just begun and already people are showering their love. Their warmth and support mean a lot to us," he said.

Feedback about the taste of the food has been very positive, with poori and chole being in high demand, he added.



Saturday, January 17, 2026

அரசு மருத்துவமனை இ.என்.டி, பிரிவில் காது கேட்கும் கருவி வழங்கல்



16.01.2026 
புதுச்சேரி: மத்திய அரசின் ராஷ்டிரிய வயோ யோஜனா திட்டத்தின் சார்பில், 43 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவு ஏற்பாட்டின் மூலம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய வயோ யோஜனா மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகள் 43 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்வு அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி அரசின் சுகாதார துறை கீழ் இயங்கும், தேசிய சுகாதார இயக்கம் காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 150 பயனாளிகளுக்கு அதிநவீன காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிகப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் காது கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என, புதுச்சேரி மாநில திட்ட அலுவலர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம், செயற்கை உறுப்பு மற்றும் எலும்பு மூட்டு ஆதரவு சாதனங்கள் தென்னிந்திய அலுவலர் கிரிதரி நாயக் குழுவினர் மூலம் உபகரணங்கள் பொருத்தப்பட்டது.



Saturday, December 13, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைப்பேசி வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் நேர்காணல்



12.12.2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைப்பேசி வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் வியாழக்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச முடியாத, செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கைப்பேசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கைப்பேசி பெற விண்ணப்பித்த 440 மாற்றுத்திறனாளிகள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

அவ்வாறு அழைக்கப்பட்டவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் திட்ட அலுவலர் (தமிழக ஊரக வாழ்வாதார திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.



சத்தமே வரல.. ஆனாலும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக.. அரங்கத்தை அதிர வைத்த முதல்வர் ஸ்டாலின்



12.12.2025
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கஷ்டப்பட்டுப் படித்து இப்போது தனது பெற்றோரைக் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அதைக் கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் கலங்கிய நிலையில், அடுத்து நடந்த சம்பவம் அரங்கத்தையே அதிர வைத்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அத்தோடு சேர்த்து வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் அந்தத் திட்டம் குறித்துப் பேசினார்.

மாற்றுத்திறனாளி பெண்
அப்போது காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் எழிலரசி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் சைகை மொழியில் பேசவே அதை அருகே இருந்த மற்றொரு பெண், மொழிபெயர்ப்பு செய்தார். அந்தப் பெண் பேசுகையில், "நான் அரியலூர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் இருந்து வருகிறேன். எனது அப்பா மற்றும் தந்தை வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான். எனது குடும்பத்தில் மிகவும் கஷ்டமான ஒரு நிலை தான். அப்பா விவசாயம் செய்கிறார். அம்மா வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். ஒரு ஏழ்மையான நிலையில் தான் இருக்கிறோம். ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்

எனது தந்தைக்கு வெளியுலகம் தெரியாது. இதனால் வேறு இடங்களுக்கும் வேலைக்குப் போக முடியவில்லை. அவருடன் பிறந்த எல்லாரும் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி தான்! இந்தக் கஷ்டத்தில் இருந்து உடைத்து வெளியே வர வேண்டும் என யோசித்தேன். அப்போது எனது உறவினர்களே பலரும் +2 வரை படித்தது போதும் விவசாயம் பாருங்கள் என்றே சொன்னார்கள்.

5 ஆண்டுகள் வேலை கிடைக்கல
அம்மா தான் தொடர்ந்து படிக்கச் சொன்னார். இதனால் சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிப் படிப்பையும் கூட கஷ்டப்பட்டு தான் முடித்தேன். அப்போதும் கூட ஈஸியாக வேலை கிடைக்கவில்லை.. 5 ஆண்டுகள் வேலை தேடி அலைந்தேன். நீ மாற்றுத்திறனாளி உன்னால் சமாளிக்க முடியாது.. சென்னையில் வாழ முடியாது எனச் சொல்லி பலரும் கஷ்டப்படுத்தினார்கள். அப்போது முதல்வர் கொடுக்கும் உதவித்தொகை தான் பெரியளவில் கை கொடுத்தது. மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது.


அந்தச் சூழலை எப்படியாவது உடைக்க வேண்டும் என்றே நினைத்தேன். எல்லாராலும் முடியும்போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன். அப்பாவுக்கு இருக்கும் சூழல் நமக்கும் வந்துவிடக்கூடாது என நினைத்தேன். உன்னால் முடியாது என்றே பலரும் தொடர்ந்து சொன்னார்கள்.

கை கொடுத்த முதல்வரின் திட்டம்
அப்போது தான் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. நம்மிடம் திறமை இருக்கிறது.. எல்லாராலும் முடியும் போது நம்மாலும் நிச்சயம் முடியும் என நம்பினேன்.. கல்லூரி படித்த பிறகும் 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தது. அப்போது மிகவும் கஷ்டமாக இருக்கும்.. அம்மா தான் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார். தீவிர முயற்சிக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே மனதை விட்டுவிட்டேன்.. நம்மால் முடியாது தான் போல என யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கேயே எனக்குப் பயிற்சி கொடுத்தனர். நிரந்தரமாக வேலையும் கிடைத்தது.

அப்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. குடும்பச் சூழலை மாற்றிவிட்டோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா, அப்பாவை நானே எனது வருமானத்தில் பார்த்துக் கொண்டேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தபோது தான் இந்தத் திட்டம் எனக்குப் பெரியளவில் கை கொடுத்தது. ஈஸியாக வேலை கிடைத்தது. அத்தனை பேர் முடியாது என்ற போதிலும், என்னால் சாதிக்க முடிந்தது. இதற்காக நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அரங்கமே அதிர்ந்தது
அவரது இந்தப் பேச்சு பலரையும் கலங்க வைத்தது. இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் தங்கள் கைகளை உயர்த்தி, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கைகளை தட்டும் வகையில் சைகை செய்தனர். ஒரு துளி சத்தம் வரவில்லை என்றாலும் அரங்கமே அதிரும் வகையில் இந்தச் சம்பவம் இருந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.




தடைகளை உடைத்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண்… சைகை மொழியில் வாழ்த்திய முதலமைச்சர்!




 

12.12.2025
அரியலூர் எழிலரசி வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் தடைகளை மீறி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பெற்றார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் சைகை மொழியில் வாழ்த்தினார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்கள் வெற்றிக் கதையைச் சொன்னார்கள்.

நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவி மற்றும் பேச்சு திறன் மாற்றுத்திறனாளி எழிலரசி தன் வாழ்வில் போராடி வென்றதையும், அதற்கு வெற்றி நிச்சயம் திட்டம் உறுதுணையாக இருந்ததையும் பற்றிச் சொன்னார்.

மாற்றுத்திறனாளியான எழிலரசி, தன் அப்பாவும், சகோதரரும் கூட செவி மற்றும் பேச்சு திறன் மாற்றுத்திறனாளிகள். அதுமட்டுமல்ல, அப்பாவுடன் பிறந்த 8 பேரும் அவரைப் போலவே மாற்றுத்திறனாளிகள். இதன் காரணமாக அப்பாவால் வெளியே வேலை செய்ய முடியாமல், விவசாயம் செய்துவருகிறார்.


Wednesday, August 27, 2025

இறைவனை வணங்க தடை ஏது? விநாயகரை 'சைகை' மொழியில் வணங்கும் இளைஞர்கள்!

காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள்
விநாயகர் சிலை தயாரிக்கும் மாற்றுத் திறனாளிகள்

26.08.2025 
இயற்கை தங்களை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் இந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.

கட்டாக், ஓடிசா: நான்கு இளைஞர்கள் விநாயகர் சிலை முன்பு சைகை மொழியில் பேசுகிறார்கள். சற்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது? என்பதை யூகிக்க சற்று தாமதமாகலாம். ஆனால், அருகே சென்று அவர்களை உற்று நோக்கினால் மட்டுமே அவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

யார் இவர்கள்? ஏன் அங்கே குழுமியிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிய அவர்களுடன் பயணத்தால் பல்வேறு ஆச்சரியமான செய்திகளை சுவாரசியமாக அவர்களது சைகை மொழியிலேயே கூறுகிறார்கள் அந்த இளைஞர்கள்.

இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், யாருடைய கொண்டாட்டத்திற்கும் சிறிதும் குறைவில்லாமல் இந்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டி மகிழ்கின்றனர். பல தசாப்தங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கட்டாக் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாற்றுத்திறனாளிகள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

மேலும், சிலையை செதுக்குவது முதல் பூஜை, அலங்காரங்கள் மற்றும் பிரசாதம் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்தையுமே இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தே கவனிக்கிறார்கள்.

இது தொடர்பாக காது கேளாதவரும், கட்டாக் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவருமான கிருஷ்ணா நாயக் கூறும் போது, "கடந்த காலங்களில் எங்களுக்கு பிடித்த மாதிரி சிலைகள் வேண்டும் என்பதை, விநாயகர் சிலை தயாரிக்கும் சிற்பிகளுக்கு விளக்குவதே பெரிய சவாலாக இருந்தது. இந்த தொடர்பு தடைகளை எவ்வாறு நீக்க முடியும் என்பதை யோசித்தோம். ஏனென்றால், அவர்களால் சைகை மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் தவறாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எங்களுக்கு கொடுத்தார்கள்.

அதனால் நாங்களே சிலைகளை தயாரிக்க ஆரம்பித்தோம். எங்களில் சிலர் யூ டியூப் பார்த்து சிலைகளை உருவாக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டனர். விநாயகர் சிலை தயாரிப்புக்களை பொதுவாக இரண்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் ஆரம்பித்து விடுவோம். எனென்றால், பெரும்பாலானவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். இதனால், இந்த சிலை தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களால் வேலை முடிந்து மாலை நேரம் அல்லது விடுமுறை நாள்களில் மட்டுமே வர முடியும்.

சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து இந்த சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். தங்களுக்கு தேவையான களிமண், வைக்கோல், நிதி என அனைத்தையும் ஒன்றாக அமர்ந்து பேசி மிக எளிதாக நடைமுறைப்படுத்துகிறார்கள். மேலும், எங்கள் தேவைகளை கடைக்காரர்கள் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்கப் போகும் போது ஆரம்பத்தில் சற்று சிரமம் இருந்தது. தற்போது எங்கள் தேவைகளை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கொண்டாட்டங்களில் உள்ளூர்வாசிகளும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்" என்றார்.

எங்கள் கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால், எங்களுக்கு அது மகிழ்ச்சியை தருகிறது. இந்த பூஜை எங்களுக்கானதாக உணர்கிறோம். அதனால், ஆர்வமுடன் பங்கேற்று இறைவன் அருள் பெறுகிறோம் என்கிறார் சங்கத்தின் செயலாளர் அபி மொஹந்தி.

இயற்கை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


Deaf Associations Oppose SC PIL Seeking Compulsory ASL In Schools, Demand Protection Of Indian Sign Language

Deaf Associations Oppose SC PIL Seeking Compulsory ASL In Schools, Demand Protection Of Indian Sign Language

24.08.2025

In a language dispute among the deaf community, multiple associations for the deaf persons across India have raised concerns against a recent public interest litigation (PIL) filed in the supreme court seeking the American Sign Language (ASL) to be made mandatory in schools for the hearing impaired.

Mumbai: In a language dispute among the deaf community, multiple associations for the deaf persons across India have raised concerns against a recent public interest litigation (PIL) filed in the supreme court seeking the American Sign Language (ASL) to be made mandatory in schools for the hearing impaired. The associations have opposed the introduction of ASL and urged the chief justice of India to preserve and promote Indian Sign Language (ISL).

On July 31, The Free Press Journal reported that a Mumbai-based activist, working for the welfare of the community of persons with hearing impairment, filed a PIL with the supreme court to make ASL compulsory. He claimed that the move will open doors for the specially-abled youth to seek employment opportunities across the globe.

Indian Deaf Associations Raise Objections

However, the effort has not gone well with the Indian associations of deaf persons as they have opposed the PIL and have demanded that ISL should be safeguarded and promoted instead of making ASL mandatory. They highlighted that around 18 million deaf people in India have fought for the recognition that ISL commands today and is critical to the deaf culture in India as an indigenous language.

AIFD Calls Move ‘Discriminatory’

The All India Federation of the Deaf (AIFD), an ordinary member of the World Federation of Deaf, wrote to the chief justice of India that the demand to make ASL compulsory is deeply harmful, unconstitutional and discriminatory against the Indian deaf community. It claimed that the argument of ASL unlocking global job potential is misleading as global deaf communities use their own sign languages like BSL in the UK, JSL in Japan and LSF in France.

Cultural and Educational Threat

The letter, written by the federation’s general secretary Roshan Kumar on Thursday, claimed that introducing ASL would undermine decades of efforts and devalue ISL while forcing a foreign language on Indian deaf children is a violation of their cultural and linguistic identity as well as the right to education in their own language.

It also claimed that enforcing ASL would confuse students, divide the community and waste national resources citing that India has already invested significantly in ISL-based education, interpreter training and research.

Deaf Identity and Cultural Pride

“Just as Hindi, Bengali, Tamil, and other spoken Indian languages represent cultural pride, ISL represents the linguistic dignity of deaf Indians. Allowing ASL to operate alongside ISL poses a dual threat as it risks colonising minds and potentially leads to cultural erasure,” said Kumar.

The letter urged the CJI to protect the linguistic dignity and identity of over 1.8 crore deaf citizens of India by rejecting the PIL and directing the union government to uphold and strengthen ISL as the sole recognised sign language of India. It also prayed the CJI to ensure that all educational, legal, and accessibility measures for the deaf community are based exclusively on ISL.

NAD Also Opposes PIL

Similarly, the National Association of the Deaf (NAD), an umbrella representative organisation of deaf persons across India, said that while it appreciated the intent to unlock global job potential through language learning, the petition is uninformed and unaware of the realities and aspirations of deaf persons in India. It said that any attempt to denigrate the importance that ISL plays, is a disservice to the deaf community of the country.

It added that ISL has been developed organically to meet the communication needs of millions of deaf Indians as it uses a two-hand system unlike ASL, which is based on American and French sign languages and uses a single-hand manual alphabet.

It also claimed that ASL is not suitable for Indian deaf people as it is culturally disconnective, which does not align with Indian societal contexts and would create communication barriers within the deaf community, especially among different generations.

‘Strengthen ISL, Not Replace It’

A.S. Narayan, president of NAD, said, “In a country where limited resources means that not all options can be equally prioritised, introducing ASL alongside or in place of ISL undermines national linguistic sovereignty, disrupts community cohesion, and neglects the cultural and practical needs of deaf Indians. We call upon policymakers, educators, and stakeholders to support the development of ISL as a means to empower India’s deaf community sustainably and inclusively.”



Thursday, August 21, 2025

Punjabi University develops technology to convert spoken Punjabi into Indian Sign Language


17.08.2025
In a significant advancement for inclusive communication, researchers at Punjabi University, Patiala, have developed an innovative system that automatically converts spoken Punjabi into Indian Sign Language (ISL). This transformative technology, funded by the Department of Science and Technology (DST), Government of India, bridges the communication gap between hearing-impaired and non-hearing-impaired individuals, fostering greater inclusion and accessibility.

The research project is led by Williamjeet Singh, Project Supervisor and Assistant Professor, Department of Computer Science and Engineering, and supported by Amandeep Singh, Research Project Assistant. The system integrates speech recognition, natural language processing, and synthetic animation to convert spoken words into ISL gestures in real time.

Williamjeet Singh told that the system is designed to empower the hearing-impaired community by enabling seamless communication in education, healthcare, and public services.

He said that communication is a vital part of human interaction, enabling the exchange of emotions, ideas, and information. While speech is the primary mode for most, hearing-impaired individuals rely on sign language, a structured form of gestural communication that uses hand movements and facial expressions. However, the lack of a universal sign language and limited knowledge of ISL among non-hearing-impaired individuals often create barriers, leading to exclusion and restricted opportunities for the hearing-impaired. He told that the newly developed system addresses these challenges by converting spoken Punjabi into ISL using advanced technologies. It employs the Hamburg Notation System (HamNoSys) to represent sign gestures and Signing Gesture Markup Language (SiGML) to generate animated 3D sign sequences. The system includes an ISL dictionary that captures both manual (hand gestures) and non-manual (facial expressions and body movements) features, ensuring accurate and natural sign representation.

Amandeep Singh said that the system leverages two approaches for sign language representation: synthetic animation and video-based sign presentation. A novel optimization technique enhances the accuracy of converting spoken words into structured ISL scripts. He told that rigorous testing has demonstrated the system’s efficiency, accuracy, and practical usability, offering a reliable platform for real-time communication. He told that available as a Progressive Web Application, the system supports multi-lingual speech input and is accessible on both web and mobile platforms. Beyond facilitating daily communication, it serves as an educational tool, enabling users to learn new signs and improve their communication skills.

He explained that through enabling real-time conversion of spoken Punjabi to ISL, they are making communication more accessible in critical areas like education, healthcare, and public services. The goal is to empower hearing-impaired individuals to engage fully in society. He told further that the research team envisions expanding the system to support additional languages, making it accessible to a broader audience through a dedicated mobile app.

Vice Chancellor Jagdeep Singh, while congratulating the research team, said that this innovation promises to transform the lives of millions of hearing-impaired individuals in India and beyond, offering new opportunities for inclusion and interaction.


Thursday, June 5, 2025

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


05.06.2025
சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். குறிப்பிட்டு, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Friday, April 18, 2025

‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்!



18.04.2025 

நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது.

செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா.

தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார் அபிநயா. அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ’ஈசன்’, ‘7-ம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘தாக்க தாக்க’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜுக்கு ஜோடியாக இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி, ஓடிடியிலும் கவனம் பெற்றுள்ள ‘பணி’ (Pani) படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்புத் திறனும் வெகுவாக பேசப்பட்டது.

இந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான கார்த்திக் என்பவரை அபிநயா கரம்பிடித்துள்ளார். இருவருக்கும் ஹைதராபாத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.


Sunday, February 16, 2025

பிளக்ஸ் பேனரில் ஐஸ்வர்யா ராய்! வாய் பேச முடியாத அபிநயா நடிக்க வந்தது எப்படி? கிரேட் ஃபாதர்!




சென்னை: நாடோடிகள் எனும் படத்தில் நடித்த அபிநயா, காது கேட்காத வாய் பேச முடியாதவராக இருந்த போதிலும் அவர் எப்படி நடிப்பதற்கு வந்தார் என்பது தெரிந்து முடியும். இதன் மூலம் உடலில் எந்த பிரச்சினை இருந்தாலும் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்கலாம். 

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு அப்பாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு பேசவோ, கேட்கவோ முடியாது என்று பின்னாளில் தெரிகிறது. அப்போது முதல் அந்த அப்பாவுக்கு அந்த குழந்தை தான் உலகம் என்றாகி விடுகிறது. மற்ற குழந்தைகளைப்போல் தன் குழந்தையும் வளர்ந்து ஆசைப்பட்டது போல் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதே தன் கடமை என நினைக்கிறார் அந்த தந்தை. அப்படியே அப்பெண்ணும் வளர்கிறாள். ஒரு நாள் ஸ்கூட்டரில் அந்த தந்தை தன் மகளை சாலையில் கொண்டு செல்லும் போது ஒரு ஃப்ளெக்ஸ் போர்டை சுட்டிக் காட்டுகிறாள். 

அதில் ஐஸ்வர்யா ராய் இருக்க அதைப் பார்த்துக் கொண்டே விடுகிறார். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் அந்த குழந்தை தந்தையை அழைத்து அதே ஃப்ளெக்ஸை காண்பிக்கும் தந்தைக்கு புரிந்து போகிறது. அது போல் ஃப்ளெக்ஸ்களில் வரவேண்டுமென தன் மகள் நினைக்கிறாள் என புரிந்து கொண்ட அவர், அதற்கான காரியத்தில் இறங்கினார். மக்களை வைத்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி விளம்பர ஏஜன்சிகள் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குகிறார். ஆனால் வாய் பேச முடியாத பெண் என வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக ஒரு ஏஜன்ஸியிடம் போட்டோ இருக்கிறது. அதைப் பார்க்க கேரளாவிலிருந்து ஒரு விளம்பரப்பட இயக்குனர் ஹைதராபாத் வருகிறார்.

அவரிடம் விளம்பர ஏஜன்ஸி பல பெண்களின் போட்டோக்களை. தன் மகளின் ஆல்பத்தை ஒதுக்கி வைத்தார்கள் என அப்போது அங்கே இருந்த அப்பாவுக்கு தெரிந்து விடுகிறது. அவர் உடைந்து போகிறார். அந்த கேரள இயக்குனர் கார் ஏறப்போகும் பார்க்கிங்குக்கு ஓடிச் சென்று நாதழுதழுக்க தன் மகளின் போட்டோக்களை ஏஜன்ஸி காட்டவில்லையென்றும், தயவு செய்து பார்க்க வேண்டும் என்றும், தன் மகளால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும் சொல்லும் போதே அவரின் கலக்கத்தை பார்க்கிறார் அந்த இயக்குனர். 

தந்தையின் எமோஷனலுக்காக போட்டோக்களை பெற்றுக்கொண்டு வந்து விடுகிறார். இது நடந்து பல மாதங்கள் கழித்து இயக்குனர் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் புதுமுகங்களை தேடி எர்ணாகுளம் வந்து அவரிடம் போட்டோக்களையும், விபரங்களையும், தந்தையின் எமோஷனலையும் சொல்ல போன் கால் ஹைதராபாத்துக்கு போகிறது. 

அப்போது வந்து இறங்கிய பெண் தான் நடிகை அபிநயா. போட்டோடில் டெஸ்ட் பாஸாகி அபிநயாவை நடிக்க வைத்து பார்த்த சமுத்திரக்கனியும், சசிகுமாரும் ஷாக்காகிறார்கள். பெயருக்கேற்றார் போல் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் அபிநயா. அவர் குறைபாடுகள் எதுவுமே தெரியாமல் அசத்துகிறார்.

நாடோடிகள்' படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது. தெலுங்கு, கன்னட ரீமேக்குகளிம் அபிநயாவையே நடிக்க வைக்கிறார்கள். தெலுங்குப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் சசி 'ஈசன்' பட வாய்ப்பை தருகிறார். 

சமீபத்தில் 'பணி' பார்த்த போது உண்மையில் அசத்தி இருந்தார் அபிநயா. ஒரு காதல் மனைவியாக அவர் எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் கொள்ளை அழகு. பணி பட பிரமோஷனில் அபிநயாவை மேடையில் உட்கார வைத்து மேடையில் யார் பேசினாலும் எதிரே அவருக்கு புரியும் விதமாக டிரான்ஸ்லேட்டரை வைத்து சைகை பாஷையில் புரிய வைக்க இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் செய்த காரியங்களெல்லாம் அவரின் மேல் நன்மதிப்பைக் கூட்டுகிறது. 

ஒருவர் இந்த சமுதாயத்தில் எப்படி குறைகளோடு பிறந்தாளென்ன..யார் தூற்றினாலும், தாழ்த்தினாலும் அவர்களை கவனிக்க வெண் சிறகு தேவதைகள் இருக்கத்தான் செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்கின்றன. அபிநயாவின் அப்பா, சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோஜு என பல வகை.... வாழ்க்கை எல்லோரும் வாழ்வதற்கே.... இவ்வாறு அவர் தனது போஸ்டில் தெரிவித்துள்ளார்.



Thursday, February 13, 2025

வணங்கான் – திரைப்பட விமர்சனம்..




இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான “வணங்கான்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய படம். இப்படம் ஒரு தீவிரமான சமூக நோக்கில் படமாக உருவாகியுள்ளது, மேலும் அருண் விஜயின் நடிப்பு மற்றும் பாலாவின் இயக்கம் குறித்து மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

கதை: 
கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழும் கதாநாயகன் (அருண் விஜய்), வாய் பேச இயலாதவன். தன் கண்முன் வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டு, அதை அடித்து துவைத்து தனது கோபத்தை வெளியிடுகிறார். வாழ்க்கையின் பல்வேறு சோதனைகளை சந்தித்து, சர்ச் ஃபாதர் உதவியுடன் வேலை கிடைக்கிறது. அங்கே தங்கியிருந்த நிலையில், சண்டைகள் மற்றும் கொலைகள் நிலவுவதை தொடர்ந்து, கதையின் திருப்பம் வரும். அவன் இந்த கொலைகளை ஏன் செய்தான், அதற்கான காரணம் என்ன என்பதே படம் முழுவதும் ஆராயப்பட்டு, அதனால் திரைக்கதை மேலும் ரொமான்ஸ் மற்றும் அதிர்ச்சியுடன் பரபரப்பாக மாறுகிறது. நடிப்பு:


 
அருண் விஜய், வாய் பேச இயலாத கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அவர் அளித்துள்ள அசாதாரண நிபுணத்துவம், படம் முழுவதும் காட்சியுடன் சேர்ந்து செல்லும் திறனைக் காட்டுகிறது. ரோஷ்ணி பிரகாஷ் மற்றும் ரிதா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர், அவர்களின் நடிப்பு முக்கியமான துணைத்தொகுதியாக உள்ளது. மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் முக்கியக் கண்ணோட்டங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்கம் மற்றும் திரைக்கதை: 
பாலா இயக்கத்தில் படம் மிகவும் அசாதாரணமாக உருவாகியுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் எதிர்க்கும் கடும் கொடுமைகளை தட்டிக்காட்டி, அதன் விளைவுகள் பற்றி பேசும் விதத்தில் படத்தை திரைக்கதை நேர்த்தியாக உருவாக்கியது. சமூக அக்கறையும், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் மிக முக்கியமான சிக்கல்களாக விளங்குகின்றன.

இசை மற்றும் தொழில்நுட்பம்: 
ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு சிறப்பாக இணைந்துள்ளதை நாம் காணலாம், குறிப்பாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை மகிழ்ச்சி அளிக்கின்றன. சாம் சி.எஸ் – இன் பின்னணி இசை படம் முழுவதும் மிரட்டலாக இருந்தது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

கடைசியில்: 
“வணங்கான்” படத்தின் ஒரு முக்கிய பாய்ண்ட் அருண் விஜயின் நடிப்பு மற்றும் பாலாவின் இயக்கம் தான். படம் பல்வேறு துக்கங்களையும், கெட்ட மனதுகளையும், குற்றங்களை எடுக்கும் வழிகளையும் அற்புதமாக கையாளும். இது அனைத்து ரசிகர்களையும் கலங்க வைக்கும், அதனால் இப்போது திரையரங்கில் பார்த்திட வேண்டிய ஒரு திரைப்படமாக இது அமைந்துள்ளது.

பிளஸ் பாய்ண்ட்:
  • அருண் விஜயின் நடிப்பு.
  • பாலாவின் சிறந்த இயக்கம்.
  • திரைக்கதை மற்றும் வசனங்கள்.
  • சாம் சி.எஸ் – இன் மிரட்டலான பின்னணி இசை.

மைனஸ் பாய்ண்ட்:
  • குறிப்பிட்ட காட்சிகள் ஒருபோதும் கவனம் பெறவில்லை.

முடிவு: 
இந்த படம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதன் திரைக்கதை, நடிப்பு, இசை அனைத்தும் திரைப்பார்வையாளர்களை எளிதில் ஆழமாக கொண்டு செல்லும்.


15 வருடமாக ஆண் நண்பருடன் ரிலேஷன்ஷிப்: அபிநயா தகவல்


02.02.2025
சென்னை: 'நாடோடிகள்' படம் மூலம் அறிமுகம் ஆனவர் அபிநயா. இவர் 'ஈசன்', 'ஜீனியஸ்', 'வீரம்', 'பூஜை', 'தாக்க தாக்க', 'விழித்திரு', 'மார்க் ஆண்டனி' என பல படங்களில் வரிசையாக நடித்தார். அபிநயா பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். மாற்றுத்திறனளியாக பிறந்த இவர், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்கிறார். தனது காதலருடன் கடந்த 15 வருடங்களாகவே ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக அபிநயா தனது பதிவில் கூறியுள்ளார்.அந்த பதிவில் அபிநயா கூறும்போது, ​​''அவர் எனது சிறு வயது நண்பர். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இருவரும் உறவிற்குள் வந்து விட்டோம். இனிமேல் என்னை எந்த ஒரு நடிகருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்'' என கூறியுள்ளார். விரைவில் அபிநயாவின் திருமண செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் விஷாலுடன் இணைத்து இவர் பேசப்பட்டார். அதனாலேயே மற்ற நடிகர்களுடன் சேர்த்து பேச வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் பணி என்ற படத்தில் அபிநயா நடித்தார். இதில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகி படமும் வெற்றி பெற்றுள்ளது.



Tuesday, February 4, 2025

வாழ்வில் முதல் முறையாக வானில் பறந்த மாற்றுத்திறனாளிகள்... வாய்ப்பை அளித்த ஐடி நிறுவனம்




29.01.2025 
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர்.

திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து Basis Cloud Solutions என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

சென்னையில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனமான basis cloud solutions நிறுவனத்தில் தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டும் இன்றி ஐடி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.

அது மட்டும் இன்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த குறித்த பேராசிரியர் தெரிவித்த பொழுது இதுபோன்று மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதுடன் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெருகும் எனவும் சாதாரணமாக ஆங்கில வழியில் கல்வி கற்று ஐடி துறையில் பணிபுரியும் மாணவர்களே சிரமப்படும் நிலையில் ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொண்டு ஐ டி துறையில் பணிபுரிந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும் அளவிற்கு மாணவர்கள் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Tuesday, January 14, 2025

விருதுநகர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்!



10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.


Chennai Sangamam Namma Ooru Tiruvizha 2025 | மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்

 

காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஹீரோ மாற்றம் கொண்டு வந்தாரா? வணங்கான் விமர்சனம்!



14.01.2025 
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்ததா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்க கமிட் ஆகி அவர் விலகியதால் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் தான் வணங்குகிறேன், மாற்றுத்திறனாளியான அருண் விஜய், கன்னியாகுமரியில், நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல், கிடைத்த வேலைகளை செய்துகொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் கோபக்காரரான இவர், அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.

அருண்விஜய் அடிதடியில் ஈடுபட்டு வருவதால், அருகில் வசிப்பவர்கள் அவரை ஒரு ஆதவோர் இல்லத்தில், வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர். அங்கு பார்வையாற்ற பெண்கள் குளிப்பதை 3 பேர் பார்க்கின்றனர். இதை பார்த்துவிட்ட அருண்விஜய், அவர்களை அடித்து உதைத்து இருவரை கொலை செய்துவிடுகிறார். ஒருவரை மட்டும் தப்பித்துவிட, அருண்விஜய் கொலை செய்ததற்காக கைது செய்யப்படுகிறார்.

போலீஸ் விசாரணையில் எதுவும் சொல்ல மறுக்கும் அருண் விஜய், அடுத்து என்ன செய்தார்? தப்பித்த அந்த ஒருவரின் நிலை என்ன? காவல்துறை இந்த வழக்கில் என்ன செய்தது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை. பாலா தனது வழக்கமான பாணியில், இருந்து சற்றும் விலகாமல், அதேபாணியிலான ஒரு படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக அருண்விஜய் கேரக்டர் பிதாமகன் விக்ரம் கேரக்டரை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சூர்யா விலகியதால், இந்த படத்தில் கமிட் ஆன அருண் விஜய், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, நடிப்பில் வித்தியாசத்தை காட்டியுள்ளார். அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் வாழ்ந்திருக்கிறார். அவரை போல், ரோஷ்னி பிரகாஷூம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தங்கையாக நடித்துள்ள நடிகை ரிதா அண்ணனுக்காக உருகும்போது நம்மையும் சேர்த்து உருக வைக்கிறார். தனது அண்ணனிடம் சைகையில் பேசும்போது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாலா அழுத்தமாக கூறியுள்ளார். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் சாம்.சி.எஸ். அசத்தியுள்ளனர்.

மொத்தத்தில், 6 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பாலா அதை நேர்த்தியாக மாற்றுகிறார், இன்றைய தினத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாகவும் சொல்லி, கவனம் ஈர்த்துள்ளார்.


Saturday, January 11, 2025

காது கேளாதோருக்கு புது பாடப்பிரிவு துவக்கம்




20.12.2024, சென்னை:செவித்திறன் குறைந்த வாய் பேச இயலாத மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லுாரியில், புதிய பாடப் பிரிவு துவங்கப்படவுள்ளது.

இதற்காக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிக்கும் வகையில், இரண்டு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. பயிற்சி காலம் ஆறு மாதங்கள். இதில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியான மாணவர்கள் சேரலாம்.



Sunday, January 5, 2025

காது கேளாத, மோட்டார் குறைபாடுள்ளவர்களுக்கு ஸ்மார்ட்-வாட்ச் கருவி: ஐஐடி மெட்ராஸ் அறிமுகம்!




செவித்திறன் மற்றும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மலிவு விலை கருவிகளை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது.

மாற்றுத்திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை பல்வேறு கடினங்களை அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டி இருக்கிறது. எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தயாராக இருந்தாலும் சில சூழல்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிர்வாகிகள் இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல வேண்டும் அதையும் மலிவு விலையில் அனைவரும் வாங்கக்கூடிய வகையில் வடிவமைக்க வேண்டும் என்பதில் வெற்றியடைந்துள்ளனர் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்.

செவித்திறன் குறைபாடு மற்றும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்கள் சுதந்திரமாகத் தொடர்புகொள்வதற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் நவீனங்களுடன் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணியக்கூடிய சாதனங்களை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்தியுள்ளனர். இந்த அணியக்கூடிய சென்சார்கள் இன்டர்நெட் ஆஃப் திங்ஸில் பயன்படுத்தப்படும் அதி நவீன சென்சார் தொழில்நுட்பங்களைக் கொண்டதாகும்.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளின் மூலம் ஐஐடி மெட்ராஸின் இந்தத் திட்டங்களுக்கு ஆதரவு தருகிறது. ஐஐடி மெட்ராஸின் பல்துறை மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி முயற்சியான புனர்வாழ்வு பொறியியல் மற்றும் உதவி தொழில்நுட்ப மையம் (CREATE) இந்தியாவில் உள்ள பல்வேறு திறன்களைக் கொண்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குறைந்த விலை தொழில்நுட்பங்களின் உள்நாட்டு வளர்ச்சிக்கான முக்கிய சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

CREATEஆல் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு முக்கியக் கருவிகள் 'வைப்' (VIBE) மற்றும் 'ஐ ஜெஸ்ட்' (I gest). இவை இரண்டும் முறையே செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் மோட்டார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் உதவக் கூடியவையாகும்.

இரண்டு சாதனங்களும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் மற்றும் மெஷின் லெர்னிங் தொழிற்நுட்பங்களின் சிறந்த பயன்களை உள்ளடக்கியதாகும். ரீச்சார்ஜபிள் பேட்டரி, ப்ளூடூத் மலம் மொபைல் போனுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் அனில் பிரபாகர் நடுவில் இருப்பவர்) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு

ஐஐடி மெட்ராஸ் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் துறையின் இயக்குனர் டாக்டர். அனில் பிரபாகர் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். VIBE மற்றும் நான் நம்மிடம் விரிவாகப் பேசிய அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் பிரதீப் தங்கராஜ்,

“இந்த இரண்டு கருவிகளும் தற்போது பிரபலமாக பலராலும் பயன்படுத்தப்படும் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்சுகளைப் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியவையே ஆகும். VIBE என்பது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத நபருக்காக குறிக்கப்படுகிறது,” என்றார்.

100 சதவீத மாற்றுத்திறன் கொண்டவர்கள் வரை அனைத்து வயதினரும் இதனைப் பயன்படுத்தலாம். மைக்ரோஃபோன் மற்றும் குரல் அங்கீகாரத் தொகுதிகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட பல ஒலி வடிவங்களை 'வைப்' கொண்டுள்ளது.

அழைப்பு மணி, அலாரம், அழும் குழந்தை உள்ளிட்ட 10 உயர் ஒலிகளை அதிர்வுகள் மூலம் காதுகேளாதவருக்கு வெளிப்படுத்தி அவரை விழிப்படையச் செய்தார். பயனரைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு அதிர்வு கொடுப்பதோடு LED-களையும் ஒளிரச் செய்யலாம். இதனால் தனியாக இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் ஒலியின் மூலம் விழிப்படைய முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப அதிர்வை பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

I Gest-ஐ பொருத்த வரையில் பெருமூளை முடக்குவாதம் உள்ளவர்களுக்கு ஒரு மாற்று மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனமாகச் செயல்படும். இது குறைந்த மோட்டார் திறன் கொண்டவர்களின் சைகைகளை அடையாளம் கண்டு அவற்றை ஸ்மார்ட் போன் மூலம் ஆடியோ அவுட்புட்டாக மாற்றும்.

பெருமூளை வாதம் கொண்ட நபர்கள் எதிர்கொள்ளும் பேச்சு குறைபாடு மற்றும் மோட்டார் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே இந்தக் கருவியின் நோக்கமாகும். பெருமூளை முடக்குவாதம் உள்ளவர்களால் உடல் பாகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. Quadraplegic மற்றும் diplegic என்று வகைப்படுத்தப்படும் போது அதன் தன்மைக்கேற்ப உடல் பாகங்களின் செயல்பாடுகள் முடக்கப்படும்.

ஐ ஜெஸ்ட் கருவி

பெருமூளை வாதம் உள்ளவர்களுக்கு இயக்கங்கள் சாதாரண மக்களை விட மிக மெதுவாகவும், குறைவாகவும் செய்த செயல்களின் செயல்பாடுகள் குறிப்பனவாகவும் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் செய்கைகளுக்கு ஏற்ப எச்சரிக்கை ஒலியை செட் செய்து விட்டு மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த இந்தக் கருவி உதவுகிறது.

இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடிய 30 செய்கைகளுக்கு இந்த கருவி உதவுகிறது எழுப்பி விழிப்படையச் செய்யும் தரவுகளின் அடிப்படையில் நான் கெஸ்ட் ஆனது

வர்த்தகத்திற்காக Enability என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கைகோர்த்து பயனருக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் சந்தைப்படுத்தப்படும் பொருட்களின் தயாரிப்பு விலையை விட அதன் வடிவமைப்பிற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும், ஆனால், வைப் மற்றும் ஐஜெஸ்ட் இரண்டு வடிவமைப்பிற்கான கட்டணமின்றி மூலதன விலை வசூலிக்கப்பட வேண்டும் என்று ஸ்டார்ட் அப் நிறுவனத்திடம் கூறி இருப்பதனால் ரூ.2ஆயிரத்திற்குள்ளேயே பயனாளிகள் கிடைக்கும்.

இந்தக் கருவிகளை பரிசோதிக்க விரும்புபவர்கள் ஐஐடி மெட்ராஸை அணுகலாம். இந்தக் கருவிகளை பயன்பாட்டிற்கு வாங்க விரும்புபவர்கள் Enability Foundation-இல் https://enability.in/#/igest பதிவு செய்து வாங்கலாம்.

இந்தக் கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அவர்கள் மூலம் கருவிகளை வாங்கும் பயனருக்கு விளக்கப்படும். மேலும் இந்தக் கருவிகளுக்கு வாரண்டியும் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அவை சரிபார்த்து தரப்படும் என்றும் பிரதீப் தங்கராஜ் தெரிவித்தார்.