FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, September 28, 2025

TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை - தேர்வு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது



தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பதவிகளுக்கு 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், உளவியல், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், பிசியோதெரபிஸ்ட், சமூகப் பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Rights திட்ட வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியுடன் TN Rights திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாவட்ட திட்ட செயல்பாட்டு அலகு (DPIU) மற்றும் துணை பிரிவு மையம் (SDC) ஆகிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 9 பதவிகளில் மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பதவியின் பெயர்                                                 காலிப்பணியிடங்கள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர்                                                 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்                                 94
உளவியலாளர் / ஆலோசகர்                                                     94
சிறப்புக் கல்வியாளர்                                                                 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்                                                       94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர்                        94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர்                                                94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) 188
அலுவலக உதவியாளர் (SDC)                                                     94
மொத்தம்                                                                                         1096

தகுதிகள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மறுவாழ்வு அறிவியல், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல், சமூகப் பணி மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மறுவாழ்வு சாரந்த படிப்பு, பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு அனுபவம் தேவை.

உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு உளவியலில் முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.

சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 3-5 ஆண்டு அனுபவம் தேவை. மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டு அனுபவம் தேவை.
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஆப்டோமெட்ரி-யில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 10 அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு மாதம் ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு மாதம் ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000

நேர்காணல் மூலம் தேர்வு
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் எழுத்துத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுச் செய்யப்பட்டவர்கள் முதலில் 11 மாதங்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேவை மற்றும் திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
1000 அதிகமான உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான இணைப்பை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 24-ம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : Continue என்பதை கிளிக் செய்யவும். "Proceed to Online Application" என்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொண்டு பதிவு செய்யவும்.
படி 4 : ஆன்லைன் இணையதளத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
படி 5 : விண்ணப்பத்தை சரிபார்த்து Submit கொடுக்கவும்.

முக்கிய நாட்கள்

விவரம்                                                         தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்             14.10.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு அரசு துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். டிஎன் ரைட்ஸ் திட்டத்தில் உள்ள பணி வாய்ப்பிற்கு மாநில அளவில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


No comments:

Post a Comment