FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label வேலை வாய்ப்புகள். Show all posts
Showing posts with label வேலை வாய்ப்புகள். Show all posts

Thursday, January 1, 2026

கோவையை கலக்கும் ‘நம்ம லாண்டரி’ - மாற்றுத்திறனாளிகளின் முயற்சிக்கு பெருகும் வரவேற்பு




 

31.12.2025 
 ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘நம்ம லாண்டரி’ தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சினேகா.

"வாய் பேச முடியாமல், காது கேட்காத நிலையிலும் தகவல் தொடர்பு பிரச்சனை எங்களுக்கு இருந்ததில்லை. வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள். கூகுள் மேப் (google map) மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று துணிகளை வாங்கி வருகிறோம்" என்கிறார் முரளி.

வேலைவாய்ப்பு... இது தான் இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய கனவு. பெரிய படிப்புகள் முடித்திருந்தாலும், வேலை தேடி அலையும் பலரை நாம் பார்த்து வருகிறோம். அதிலும், மாற்றுத்திறனாளிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனாலும், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தம்பதி, தங்களைப் போன்றவர்களுக்கு சப்தமில்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கோவையில் தற்போது பிரபலமாகி வருகிறது 'நம்ம லாண்டரி'. துணிகளை துவைத்து, காய வைத்து அயர்ன் பண்ணிக் கொடுக்கிற லாண்டரி கடையில் என்ன சிறப்பு இருக்க முடியும்? ஆனால்'நம்ம லாண்டரி'க்கு நிறைய சிறப்புகள் உள்ளன. இதனை நடத்தி வருபவர்கள் முரளி மற்றும் அவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள். இது மட்டுமல்லாமல், இங்கு பணியாற்றி வரும் 5 பேரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்.

உணவு, உடை, உறைவிடம். இது தான் மனிதனின் அத்யாவசிய தேவை. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு எந்த தொழிலை தொடங்கினாலும் சாதிக்கலாம் என்பது தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் சூட்சமம். அதனை பின்பற்றி, லாண்டரி தொழிலில் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளான முரளி மற்றும் சுதா.



கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர்கள் முரளி மற்றும் சுதா. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் போன்ற செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், Deaf Leaders Foundation என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், ஏராளமானவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்கியதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அவர்களது முயற்சியின் அடுத்த பரிணாமமாக தொடங்கியது தான் 'நம்ம லாண்டரி'. தங்களின் Deaf Leaders Foundation அமைப்பின் மூலம் கடந்த ஜனவரி மாதம் கோவை சாய்பாபா காலனியில் ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கினர். சுமார் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த கிளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், இப்போது சாய்பாபா காலனி பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பகுதி மக்களும் ‘நம்ம லாண்டரி‘க்கு கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இதற்கு காரணம் இங்கு பணியாற்றும் 5 பேரும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களது தொழில் நேர்த்தி என்பது தான். தற்போது ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இது குறித்து கேள்விபட்டவுடன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழு, சாய்பாபா காலனியில் உள்ள ‘நம்ம லாண்டரி‘க்கு சென்றோம்.

அங்கு நாம் சென்ற போது, அங்கிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பணியாளர்கள், துணிகளை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தனர். நாம் சென்றது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் துணிகளை நேர்த்தியாக மடித்து அழகாக அயர்ன் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‘நம்ம லாண்டரி‘யின் உரிமையாளரும், Deaf Leaders Foundation இயக்குநருமான முரளியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் சைகை மொழியில் பேசத் தொடங்கினார். அவர் பேசுவதை அவரது மகள் சினேகா நமக்கு மொழிபெயர்த்தார்.

நம்மிடம் பேசிய முரளி, “கடந்த ஒரு வருடமாக ‘நம்ம லாண்டரி’ என்ற பெயரில் சலவை நிலையம் (Namma Laundry) நடத்தி வருகிறோம். இரண்டு தனியார் அமைப்புகளின் உதவியுடன், வேலையில்லாமல் இருந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாத (Deaf and dumb people) 5 பேரை கொண்டு இதனை தொடங்கினோம்“ என்றார்.

மேலும், ‘நம்ம லாண்டரி‘யின் வாடிக்கையாளர்கள், அன்றாடப் பணிகள் குறித்து நாம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர், “தினமும் 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இங்கு துணி துவைத்தல் (washing), இஸ்திரி (Iron), நீராவி சலவை (steam Iron), உலர் சலவை (dry cleaning) ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருகிறோம்“ என்றார்.

இங்கு பணியாற்றுபவர்கள் வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள் என்பதால், வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு பதில் அளித்த முரளி, “எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தொடர்பில் இதுவரை எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ‘நம்ம லாண்டரி‘க்கென தனி வாட்ஸ்ஆப் எண் வைத்துள்ளோம்.

இதில் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள். சிலர் இங்கு வந்து துணியை கொடுத்து சலவை செய்து அயர்ன் பண்ணி வாங்கிச் செல்கின்றனர். மேலும், வர முடியாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், கூகுள் மேப் (google map) மூலம் அவர்களது முகவரியை அனுப்பச் சொல்வோம். அவர்கள் அனுப்பிய பிறகு, வாடிக்கையளர்களின் வீடுகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவோம்“ என்று அவர்கள் சலவை செய்து தரும் துணி போல் 'பளிச்' என்று பதில் அளித்தார்.

“இந்த கிளையில், 5 பேர் முழுநேரமும், டெலிவரிக்காக ஒருவர் பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் தொடங்க உள்ளோம். தொடர்ந்து 3-வது கிளையை சூலூர் பகுதியில் திறக்க உள்ளோம். அந்த கிளைகளிலும், எங்களைப் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளோம். எங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து, சினேகா நம்மிடம் பேசுகையில், “ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கிலே ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வாட்ஸ்ஆப் மூலம் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. 100-க்கும் அதிகமானோர் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

எங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உதவியின் கீழ் எங்களுக்கு சிலர் உதவி செய்கின்றனர். அதனை நாங்களும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். மற்ற இடங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலவை செய்து கொடுக்கிறோம். ஒரு துணியை ‘நம்ம லாண்டரி‘யில் அயர்னிங் செய்வதற்கு ரூ.12, ஒரு கிலோ துணியை சலவை செய்வதற்கு ரூ.120 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம்” என்றார்.




Sunday, September 28, 2025

TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை - தேர்வு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது



தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பதவிகளுக்கு 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், உளவியல், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், பிசியோதெரபிஸ்ட், சமூகப் பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Rights திட்ட வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியுடன் TN Rights திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாவட்ட திட்ட செயல்பாட்டு அலகு (DPIU) மற்றும் துணை பிரிவு மையம் (SDC) ஆகிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 9 பதவிகளில் மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பதவியின் பெயர்                                                 காலிப்பணியிடங்கள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர்                                                 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்                                 94
உளவியலாளர் / ஆலோசகர்                                                     94
சிறப்புக் கல்வியாளர்                                                                 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்                                                       94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர்                        94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர்                                                94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) 188
அலுவலக உதவியாளர் (SDC)                                                     94
மொத்தம்                                                                                         1096

தகுதிகள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மறுவாழ்வு அறிவியல், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல், சமூகப் பணி மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மறுவாழ்வு சாரந்த படிப்பு, பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு அனுபவம் தேவை.

உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு உளவியலில் முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.

சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 3-5 ஆண்டு அனுபவம் தேவை. மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டு அனுபவம் தேவை.
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஆப்டோமெட்ரி-யில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 10 அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு மாதம் ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு மாதம் ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000

நேர்காணல் மூலம் தேர்வு
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் எழுத்துத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுச் செய்யப்பட்டவர்கள் முதலில் 11 மாதங்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேவை மற்றும் திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
1000 அதிகமான உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான இணைப்பை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 24-ம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : Continue என்பதை கிளிக் செய்யவும். "Proceed to Online Application" என்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொண்டு பதிவு செய்யவும்.
படி 4 : ஆன்லைன் இணையதளத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
படி 5 : விண்ணப்பத்தை சரிபார்த்து Submit கொடுக்கவும்.

முக்கிய நாட்கள்

விவரம்                                                         தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்             14.10.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு அரசு துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். டிஎன் ரைட்ஸ் திட்டத்தில் உள்ள பணி வாய்ப்பிற்கு மாநில அளவில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


Tuesday, February 11, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்குப் பணி நியமன ஆணை



08.02.2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 30 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்திய முகாமை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடக்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுஜா சோய் இண்டஸ்ட்ரீஸ், ரெட்டி பவுண்டேசன், பாரத் எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க், ஹோட்டல் தயாளன், ஏர்சி நடேசன் நிறுவனம், கணேசன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. முகாமில், 150க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்வான 30-க்கு மேற்பட்ட வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, April 27, 2024

காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்



26.04.2024 சென்னை/கோவை: காது கேளாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.

அதன்பலனாக பி.காம், பிசிஏ படிப்புகளை முடித்த காது கேளாத மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்திலேயே சிறப்பு வேலைவாய்ப்பு நேர்காணல் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 18 மாணவிகள் உட்பட 31 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘கோவையைச் சேர்ந்த `5கே கார் கேர்' நிறுவனம் 31 மாணவர்களை பணிக்காக தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு சைகை மொழி மூலம் பயிற்சி அளித்து, பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வரும் ஆண்டுகளில் பெரிய தொழிற் நிறுவனங்களையும் தொடர்புகொண்டு, அதிக அளவிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுதர முயற்சித்து வருகிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து 5 கே கார் கேர் நிறுவன மனிதவள மேலாண்மைப் பிரிவு அதிகாரி ரஞ்சித் கூறும்போது, ‘‘எங்கள் நிறுவனத்தில் பேச முடியாத, கேட்கும் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சிலர் ஏற்கெனவே பணியாற்றுகின்றனர்.

அவர்களது பணியில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரசிடென்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள் 31 பேரை தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு பயிற்சி அளித்து, உரிய பணி வழங்கப்படும். எங்கள் நிறுவனக் கிளைகளில் 300 மாற்றுத் திறனாளிகளை நியமிக்க உள்ளோம்" என்றார்.





Saturday, April 9, 2022

தமிழகத்தில் அரசு வேலைக்காக காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,904 பேர் காத்திருப்பு..!



கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,359 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 35,56,085 ஆண்களும், 40,32,046 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,14,582பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 28,60,359 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13,20,337 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386 பேர் என தெரிவித்துள்ளது.

அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,39,825 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்கள் 92,779 பேரும், பெண்கள் 47,046 பேரும் பதிவு செய்துள்ளனர். கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,08827 பதிவு செய்துள்ளனர். அதில், 71566 ஆண்களும், 37,261 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 17,094 பேர் பதிவு செய்துள்ளனர்.

அதில், 11,776 ஆண்களும், 5,318 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,904 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,437 ஆண்களும், 4,467 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, September 29, 2020

தூய்மை பணியில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள்

28.09.2020
திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.


Monday, September 28, 2020

சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் பணிக்கு செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

27.09.2020
திருப்பூா்: சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எம்.ஜி.ஆா்.சத்துணவு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 சத்துணவு அமைப்பாளா், 14 சமையல் உதவியாளா் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் தகுதியான பெண்கள் நியமிக்கப்படவுள்ளனா். சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்களாகவும் 18 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், மாற்றுத் திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கு 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருப்பதுடன், 21 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும் , விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதில், நியமன பணியிடத்தில் இருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Friday, September 25, 2020

சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


25.09.2020
ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான காலிப் பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீட்டுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் விளம்பரம் செய்யப்படும்.

அதனடிப்படையில், அமைப்பாளா் பணிக்கான தகுதிகள்: பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) சம்பந்தப்பட்டோரின் கல்வித் தகுதியானது, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி என இருந்தால் போதுமானது.

வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் பிரிவினருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

பிற தகுதிகளாக நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்பும் 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கான தகுதிகள்: சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அவா்கள் விண்ணப்பம் செய்யும் நாளில் (1.9.2020) கல்வித் தகுதியாக பொது மற்றும் தாழ்த்தப்பட்டோா் 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவராக இருந்தால் போதுமானது.

பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். விண்ணப்பதாரருக்கான வயது வரம்பாக, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது நிரம்பியும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். நியமன பணியிடத்துக்கும், விண்ணப்பதாரா் குடியிருப்புக்கும் இடையே 3 கிலோ மீட்டா் சுற்றளவு இருக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளா் மற்றும் சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு 24.9.2020 முதல் 30.9.2020 வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி ஆணையா் அலுவலகங்களுக்கு மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல் இணைக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா் அதற்கான சான்று நகல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் அதற்கான சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். நோ்முகத் தோ்வின்போது அசல் சான்றிதழ்கள் அளிக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Thursday, November 14, 2019

காலியாக இருக்குது துப்புரவாளர் பணி: அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு

13.11.2019
கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு, அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், ஐந்து லட்சம் கட்டடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. குப்பை சேகரிக்க, 250 வீடுகளுக்கு ஒருவர், தள்ளுவண்டி தள்ள ஒருவர், மழை நீர் வடிகால் துார்வார ஒருவர் என, மூன்று பேர் நியமிக்க வேண்டும்.இதன்படி, 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தேவை. நிரந்தர தொழிலாளர்களாக, 2,520, ஒப்பந்த தொழிலாளர்களாக, 2,308 பேர் உள்ளனர்.அதனால், காலியாக உள்ள, 549 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 'கமிஷனர், கோயம்புத்துார் மாநகராட்சி, பிரதான அலுவலகம், பெரிய கடை வீதி, கோயம்புத்துார்-641001' என்ற முகவரிக்கு, வரும், 15ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர்) மற்றும் பொதுப்போட்டி ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணம் இல்லாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும், என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

Wednesday, April 17, 2019

200 Tangedco (TNEB) jobs for persons with disabilities – Gangman



Direct Recruitment to the post of Gangman (Trainee)-Notification Issued – Applications are invited through ONLINE MODE from 22.03.2019 to 22.04.2019. Eligible candidates are invited to register their applications through ONLINE MODE for appearing in the Physical Test and for the Written Examination

  • · The number of candidates advertised is only approximate and is liable for modification including reduction/increase with reference to vacancy position at any time before finalisation of selection.
  • · The candidate on their selection should be prepared to serve anywhere in Tamil Nadu.
  • · The candidates on their selection in respect of Gangman (Trainee), would be placed under two year training period with a consolidated pay of 15,000/- pm and after successful completion of the training period they will be placed at level -1 in the pay matrix (i.e., Rs.16,400 – 51,500).
Distribution of vacancies 
Name of the Post
Total Post for PwDs
Consolidated pay
Gangman (Trainee)
200
Consolidated pay of Rs. 15,000
per month








Important Date
Activities
Date
Date of Notification
07/03/19
Online application opens on
22/03/19
Last date for submission of applications and for uploading the documents
22/04/19
Last date for payment of Fee through Canara Bank/ Indian Bank/Indian Overseas Bank
24/04/19

Age relaxation for Differently abled

Minimum Age (should have completed) – 18 Years
Maximum Age (Should not have completed) – 40 Years

Education Qualification

Gangman(Trainee) – Studied upto fifth standard

Examination Fees

Rs. 500 (Rupees Five Hundred only)

How to Apply

Candidate should apply only through Online in the TANGEDCO’s Website www.tangedco.gov.in. In the website the candidate can go to the online application portal by clicking the link.


The Online Application can be filled upto 22.04.2019 till 23.59 Hrs. after which the link will be disabled
(For any additional information the candidates may refer the TANGEDCO’s website www.tangedco.gov.in )

Download

Notification (161KB, PDF)

Hindustan Aeronautics jobs for Persons with Disabilities

HAL invites applications from eligible Persons with Benchmark Disability (in Visually Handicapped & Hearing Handicapped Categories) in the prescribed proforma for the post of Admin. / Commercial / Accounts Trainee (Channel C) (Scale 5) in Non-Executive Non cadre in various Divisions of HAL at Bangalore (Karnataka); Hyderabad (Telangana); (Telangana) Koraput (Odisha) & Nasik (Maharashtra) (Maharashtra). . The details of the post are as indicated below:

Name of the Post / Scale of Pay

Admin/ Commercial/ Accounts Trainee (Channel C) (Scale 5)
[Scale of Pay : Rs.10750-27670]

Post Code – NA52019.

No. of Posts – 8.

No. of Posts Disability Disability-wise

3 – VH(LV); 5 – HH

Upper age limit as on 2.5.19 after age relaxation of 10 years for PWBDs – UR – 38 years; SC/ST – 43 years; OBC-NCL – 41 years

Qualification


Full Time Bachelor Degree (3 years after 10+2) in Arts / Science / Commerce / Administration / Management / Computer Applications

or

Regular SSLC + Full Time Diploma in Commercial and Computer Practice / Diploma in Commercial Practice / Diploma in Secretarial Practice acquired from the State Board of Technical Education.

or

Candidates are required to possess Certificate of Proficiency in Typing / PC Operations of minimum 3 months (the duration needs to be continuous). In respect of candidates possessing the qualification of Degree in Computer Science or Degree in Computer Application, Certificate of proficiency on PC Operations is not required.

HOW TO APPLY:
Candidates meeting the above specifications may send their applications strictly in the prescribed Application Format printed on A-4 size paper (neatly typed/ handwritten), along with a self-attested recent Passport Size Photograph to the following address:

Chief Manager (HR)
Recruitment Section, HR Department Hindustan Aeronautics Limited
#807, P.T.Lee building, 6th Floor, Anna Salai, Corporate Office, 15/1 Cubbon Road
Bangalore, Karnataka 560001
India

The last date for receipt of applications is 2nd May 2019. Applications received after the due date will not be considered. No application will be received in person on the address mentioned above.

Candidates are requested to compulsorily super scribe the envelope with the Name of the post they are applying to (i.e. “Application for the Post of …………………….”).

Monday, February 11, 2019

Railway Divyang Employee’s March for Promotion: New Delhi


New Delhi : Railway Divyang Employee’s March for Promotion “Disabled Employees Association of Railway(Regd.)” will be observing “Swadhikar Rally” on 11th February 2019 in which all Divyang employees of Railways shall be protesting to press their demands of promotions to all “Divyang” which is pending for years after passing the judgement by CAT, Hon’ble High Court and Hon’ble Supreme Court. On this occassion a protest rally in which around 300 divyang employees of Railways are likey to particiapte. This rally is also proposed to be started from HQ of Norther Railway i.e. Baroda House to office of Railway Board at Rail Bhawan. “Disabled Employee Association of Railway Regd.” will has been formed for the welfare of the Disabled employees & disabled dependents of railway employees comprising of the Indian Railway. This is worth mentionable that the association is exclusively meant to solve the real problems as well as grievance being faced by disabled employees & disabled dependents of Railway Employees. As this association has raised various issue in form of demands with the competent authority of Railway Board from many years but the same has not yet been accepted and are still pending before Railway Board.To show our solidarity and to create awareness & sensitization amongst the Railway administration for the purpose of acceptance of our demand, the Association have now decided to organize a “SVADHIKAR RALLY’ which will march from Baroda House the headquarter of Northern Railway to Railway Board, the Rail Bhawan and “Dharna Protest” will be proposed in front of the Railway Board office on dated 11th February 2019”. In this Rally & Dharna, approximately 300 disabled employees will be participating, who have various types of disability e.g. orthopedically/visually/hearing impaired people some of them are even using wheelchair, on their designed scooter/car etc.

“Our Association believes that during the course of organizing the aforesaid rally we want to get a legal shelter as a precautionary measure under the leadership of our association, hoping for fruitful consideration.” it was informed by the Mukesh Gupta, General Secretary of the union.

Monday, December 17, 2018

47 Bank of Baroda jobs vacancies for persons with disabilities


Bank of Baroda invites online applications from eligible Indian Nationals for appointment to the following post as a part of Recruitment Drive to fill up vacancy for persons with Disabilities (PwDs). Candidates are requested to apply online only. No other means/mode of application will be accepted.

List of Jobs
Reserved for Persons with disabilities

JMG/S-I – OC(12); VI(10);HI(10);ID(07) – 39 Job vacancies
MMG/S-II – OC(2); VI(2);HI(2);ID(1) – 7 Job vacancies
MMG/S-III – 1 Job Vacancy

Abbreviations stand for: 
JMG/S I – Junior Management Grade/Scale I, MMG/S II – Middle Management Grade/ Scale II, MMG/S III – Middle Management Grade / Scale III, OC – Orthopedically Challenged, HI – Hearing Impaired, Visually Impaired, ID – Intellectual Disability

How to Apply

Applicants should fill out the online e-application from the link below :
https://ibpsonline.ibps.in/bobsplnov18/

Important Dates

Commencement of on-line registration of application – 05/12/2018
Closure of registration of application – 26/12/2018
Closure for editing application details – 26/12/2018
Last date for printing your application – 10/01/2019
Online Fee Payment – 05/12/2018 to 26/12/2018

Advertisement Download
Download : Advertisement (195KB, PDF)

Legal MMG/S-III

Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry:
Bank

Occupational Category: Legal

Hours: Full-time

Hiring Organization:
Bank of Baroda

Educational requirements:
  • A Bachelor Degree in Law.
  • Minimum 5 years as Law Officer in Legal Dept of a Scheduled Commerical Bank, Central / State Govt or PSU or practicing at Bar or Judicial Services.
  • Candidates should produce a certificate of having the requisite post qualification work experience from the Court/ Bar council/organization.
Date Posted: 16-12-2018

Legal MMG/S-II

Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry: Bank

Occupational Category: Legal

Hours: Full-time

Hiring Organization: Bank of Baroda


Educational requirements:
  • A Bachelor Degree in Law.
  • Minimum 3 years as Law Officer in Legal Dept of a Scheduled Commerical Bank, Central / State Govt or PSU or practicing at Bar or Judicial Services. .
  • Candidates should produce a certificate of having the requisite post qualification work experience from the Court/ Bar council/organization.
Date Posted: 16-12-2018

Wealth Management Services – Sales MMG/S-II
Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry: Bank

Occupational Category: Sales

Hours: Full-time

Hiring Organization: Bank of Baroda

Educational requirements:
  • 2 Year (MBA or equivalent) Post Graduation Degree or Diploma with specialisation in Marketing / Sales / Retail. (The Institute should be approved by Govt / Govt Bodies / AICTE)
or
  • Graduation (recognized / approved by Govt., Govt. bodies / AICTE) with One year Diploma/ Certification in Banking / Finance before joining any private Bank/ Public Bank.
  • 4 Years Work Experience in Sales / Distribution of Wealth / Mutual Fund / Insurance Products in Banks, Mutual Funds, NBFC’s etc.
Date Posted: 16-12-2018

Wealth Management Services – Sales JMG/S-I

Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry: Bank

Occupational Category: Sales

Hours: Full-time

Hiring Organization: Bank of Baroda

Educational requirements:
  • Graduation in any stream (recognized / approved by Govt., Govt. bodies / AICTE)
  • 2 Years Work Experience in Sales / Distribution of Wealth / Mutual Fund / Insurance Products in Banks, Mutual Funds, NBFC’s etc..
Date Posted: 16-12-2018

Wealth Management Services – Operations MMG/S-II

Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry: Bank

Occupational Category: Operations

Hours: Full-time

Hiring Organization: Bank of Baroda

Educational requirements:
  • 2 Year (MBA or equivalent) Post Graduation Degree or Diploma with specialisation in Marketing / Sales / Retail / Finance. (The Institute should be approved by Govt / Govt Bodies / AICTE)
  • 5 Years Work Experience in working on Wealth Management Solutions for processing Wealth Products / Mutual Fund / Insurance Applciations , etc. Meeting Cut Off Deadlines for Wealth Products / Mutual Fund /
  • Insurance Application, Upload / Download of feeds for NAV’s from the RTA’s and back end operations pertaining to Wealth Products / Mutual Funds / Life Insurance.
Date Posted: 16-12-2018

Wealth Management Services – Operations JMG/S-I

Location: Bank of Baroda, Alkapuri, Vadodara

Industry: Bank

Occupational Category: Operations

Hours: Full-time

Hiring Organization: Bank of Baroda

Educational requirements:
  • 2 Year (MBA or equivalent) Post Graduation Degree or Diploma with specialisation in Marketing / Sales / Retail/Finance. (The Institute should be approved by Govt / Govt Bodies / AICTE)
  • 3 Years Work Experience in working on Wealth Management Solutions for processing Wealth Products / Mutual Fund / Insurance Applciations , etc. Meeting Cut Off Deadlines for Wealth Products / Mutual Fund /
  • Insurance Application, Upload / Download of feeds for NAV’s from the RTA’s and back end operations pertaining to Wealth Products / Mutual Funds / Life Insurance.
Date Posted: 16-12-2018

Monday, December 10, 2018

Madurai High Court Recruitment 2019 Assistants, Watchman, Masalchi (160 Vacancies)


Madurai High Court has published recruitment notification for Madurai district High Court Tamil Nadu state vacancies of Computer Operator, Senior Bailiff, Driver, Xerox Machine Operator, Office Assistant, Night Watchman, Masalchi, Gardner, Sanitary Worker and Sweeper posts.

How to Apply: Eligible candidates apply in the prescribed format. Completed application along with photo-copies of educational documents, community certificate and other testimonials addressed to Chief District Judge, High District Court, Madurai District, Tamil Nadu by post. The last date for receipt of applications is 21/12/2018.


 CLICK HERE ⬇⬇


Thursday, December 6, 2018

India Post is hiring! Apply for Gramin Dak Sevak posts if you are 18 years old

06.12.2018
India Post has invited applications for the posts of Gramin Dak Sevak under Haryana Postal Circle.

Candidates will be able to apply for the position till January 2, 2019 on the official website of India Post, www.indiapost.gov.in. The total number of vacancies available for India Post Recruitment for the posts of Gramin Dak Sevaks (GDS) is 682.

Vacancies (Division Wise)
  • Ambala:112
  • Bhiwani: 48
  • Faridabad: 27
  • Gurgaon: 153
  • Hisar: 111
  • Karnak: 81
  • Kurukshetra: 53
  • New Delhi: 03
  • Rohtak: 62
  • Sonepat: 32
Permissible disability for physically handicapped candidates
  • For Branch Postmaster (BPM): One Arm Affected (OA), One Leg affected (OL), Low Vision (LV), Hearing Impaired (HH)
  • For Assistant branch Postmaster (ABPM): One Leg affected (OL), Low Vision (LV), Hearing Impaired (HH)
Community-wise vacancies in India Post Recruitment
  • OBC: 130
  • PH-HH: 5
  • PH-OH:18
  • PH-VH: 04
  • SC: 124
  • UR: 401
Age Limit

Candidates who are interested in this job and are willing to be a part of India Post must note the age limit mentioned below:
  • Minimum: 18 Years
  • Maximum: 40 Years
Relaxation in upper age limit is 05 years for SC/ST and 03 years for OBC.

Information needed for registration
  • Name (In the capital letter as per X class certificate Marks Memo including spaces)
  • Father Name
  • Mobile Number
  • Date of Birth
  • Gender
  • Community
  • PH Type of Disability (HH/OH/VH)- Percentage of disability
  • State in which a candidate has passed Class 10
  • Board in which a candidate has passed Class 10
  • Year of Passing Class 10
  • Class 10 Certificate Number / Roll Number (optional)
To know more about the recruitment, click on this direct link here.

India Post

The Department of Posts, trading as India Post, is a government-operated postal system in India under the Department of Posts, which is part of the Ministry of Communications of the Government of India.

Generally called the post office in India, it is the most widely distributed postal system in the world.

Saturday, April 21, 2018

TNPSC Recruitment 2018 Apply Online Civil Judge (320 Vacancies)


TNPSC, Government of Tamil Nadu has published employment notification for direct recruitment of Civil Judge in the Tamil Nadu State Judicial Service. The last date for submission of online registration is 7th May 2018. The total vacancies as 320 approximately, by taking into account the guidelines given by the Hon’ble Supreme Court in Malik Mazhar Sultan vs. U.P. Public Service Commission [2008(17) SCC 703], for the cadre of Civil Judges.

BOB Recruitment 2018 Wealth Management Service Apply Online (424 Vacancies)


Bank of Baroda Wealth Management Recruitment 2018 Advertisement has been issued from 16th April 2018. BoB Bank invites Online applications from Wealth Management professionals for vacancy position of following Managerial and Head posts in Bank of Baroda Wealth Management Services to HNI/UHNIs. The last date for Online Registration of Application (BOB Wealth Management Recruitment 2018-19) is 6th May 2018.

CLICK HERE ⬇⬇⬇
BOB Recruitment 2018 Wealth Management Service Apply Online (424 Vacancies)