FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label சிந்தனைக் களம். Show all posts
Showing posts with label சிந்தனைக் களம். Show all posts

Sunday, May 17, 2026

மௌனமாய் பேசும் உலகம்! | நட்சத்திரக் குழந்தைகள் 12



வாயுள்ள பிள்ளை மட்டுமல்ல, சைகை மொழி பேசும் பிள்ளையும் வழக்கில் வெல்லும் என நிரூபித்தவர் செவித்திறன் குறைபாடுடைய வழக்கறிஞர் சாரா சன்னி. உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் முதன்முதலில் சாரா வாதாட, சைகை மொழிபெயர்ப்பாளர் சாராவின் வாதத்தை மொழிபெயர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி 2023 செப்டம்பரில் நிகழ்ந்தது.

அன்று சைகை மொழி தொடர்புமொழியாக மட்டுமல்லாமல் காதுகேளாதோரின் வாழ்வில் புது விடியலையும் கொண்டுவந்தது. ஒரு சராசரி நபரால் 0-25 டெசிபல் ஒலிகளைக் கேட்க இயலும். அதற்கு மேல் ஒலியைக் கேட்க இயலாமல் போகும்போது மென்மையான காது கேளாமையில் (26-40 டெசிபல்) தொடங்கி முழுமை யான கேட்டல் திறன் இழப்பு (91 டெசிபல்) வரை ஏற்படக்கூடும்.

காது கேளாதோரின் தந்தை

காது கேளாதோரின் அனுபவங்களைப் பிரதிபலிக்க கை அசைவுகள், விரல் அமைப்புகள், முகபாவனைகள், உடல் நிலைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாவது சைகை மொழி. தனித்துவமான இலக்கணம், சொற்கள், வாக்கிய அமைப்பு (Syntax) ஆகியவை கொண்ட ஒரு முழுமையான மொழி அமைப்பு இது.

பேசும் மொழிக்கு ஏற்ப இலக்கண அமைப்பும் மாறுபடும், ஒவ்வொரு நாட்டின் சைகை மொழியும் தனித்துவமானது. ஆதிகாலத்தில், கைகளின் அசைவுகள், முகபாவனைகள் மூலம் தொடர்புகொள்வது மனிதர்களின் இயல்பான தொடர்பு முறையாக இருந்தது.

பொ.ஆ.மு. (கி.மு.) 5ஆம் நூற்றாண்டி லேயே சாக்ரடீஸ், கை சைகைகள் மூலம் காது கேளாதோர் தொடர்புகொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினில் மதகுருக்கள், மௌன விரதத்தின்போது பயன்படுத்தப்பட்ட கைச்சைகை களை மாற்றி அமைத்து, காது கேளாத மாணவர் களுக்குக் கற்பிக்கத் தொடங்கினர்.

பின்னர், ஜுவான் பாப்லோ போனெட் 1620இல், உலகின் முதல் கை விரல் எழுத்துமுறை (manual alphabet system) குறித்த நூலை வெளியிட்டார். பிரான்சில், ‘காது கேளாதோரின் தந்தை’ என்ற ழைக்கப்பட்ட அப்பே சார்ல்ஸ்-மிஷேல் த லெப், காது கேளாதோருக்கான முதல் இலவச பொதுப் பள்ளியை நிறுவினார்.

சைகைகளைத் தொகுத்து அகராதி உருவாக்கி, இயல்பான சைகைகளுடன் இணைத்து அவர் கற்பித்தார். 1981இல் இந்திய சைகை மொழி அகராதி முதன்முதலில் வெளிவந்தது. பின்னர், 2011இல் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி - பயிற்சி மையம் நிறுவப்பட்டது.

கட்டாயமாக்கும் சட்டம்

காது கேளாதோரின் வாழ்க்கையில் கல்வி, வேலை, சமூக உரிமை, சுயநிறைவு ஆகியவற்றை உருவாக் கும் அடிப்படையாகச் சைகை மொழி உள்ளது. சைகை மொழி மூலம் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும்போது, கருத்து அடிப்படை யிலான புரிதல் மாணவர்களுக்கு மேம்படுகிறது.

காது கேளாதோருக்கு அரசுத் தகவல்கள், அறிவிப்புகள், சேவைகள் அனைத்தும் சைகை மொழியில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் சைகை மொழி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அரசு, சில தனியார் ஊடகங்களும் சைகை மொழி விளக்கத்துடன் செய்திகளை ஒளிபரப்புகின்றன.

சவால்களும் வழிகளும்

திறமையான சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை இன்றுவரை இருப்பதால் மருத்துவம், நீதித்துறை, அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய துறைகளில் அணுகல் சிரமமாக உள்ளது. அரசு சேவைகளில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வராததும் ஒரு பெரிய குறையாக உள்ளது.

இத்தகைய சவால்களை சமாளிக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பள்ளிகளில் சைகை மொழியை ஒரு பாடமாக

அறிமுகப்படுத்துவது, காது கேளாத மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக் கும் உள்ளடக்கிய கல்வியை உருவாக்கும்.

ஆசிரியர்களுக்கு சைகை மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும், ஊடகங்களில் சைகை மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும்.

மேலும், அரசு சேவை களில் சைகை மொழி வசதிகளைக் கட்டாயமாக்கி, அனைத்து துறைகளிலும் அணுகல் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனுடன், மக்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், சைகை மொழி ஒரு பரவலான சமூக இயக்கமாக வளர முடியும்.



Sunday, April 26, 2026

செவித்திறன் குறைபாடும் தொழில்நுட்ப ஆதரவும்

தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கவே இருக்கிறது என்றும் உரிய நவீனக் கருவிகள், செவித்திறன் பாதிப்புள்ளவர்களை மீண்டும் உலகத்துடன் இணைக்கும் என்றும் கூறினார் செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா

செவித்திறன் குறைபாடு, உணர்வுபூர்வமான பாதிப்பு என்பதைவிட உலகத்துடனான தொடர்பில் ஏற்படும் விரிசல் என்பது ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அச்சவாலை எதிர்கொண்டு வரும் 63 வயது மகே‌ஷ் சமத்தின் அனுபவம்.

செவித்திறன் பாதிப்பு, தமது பணியிலும் சமூக வாழ்விலும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர் பகிர்ந்தார்.

“செவித்திறன் குறைபாடு இருந்தால் பணியிலும் குடும்ப, நண்பர்கள் ஒன்றுகூடலிலும் உரையாடல் நடப்பதே தெரியாது. எதை இழக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் போகலாம். உரையாடல்களைப் பின்தொடர முடியாமல் போகும்போது, தனித்து விடப்பட்டதை உணரத் தொடங்குவோம். அது ஒருவித விரக்தியை ஏற்படுத்தும்,” என்று அவர் விளக்கினார்.

செவித்திறன் பாதிப்பால் பணி இழப்பு

இக்கருத்தை வழிமொழிந்த செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா க்ருணாகரன், செவித்திறன் பாதிப்பால் தாம் சந்தித்த இளம்பெண் ஒருவர் தமது பணியிலிருந்து விலக நேரிட்டதைப் பகிர்ந்தார்.

“உரையாடல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போவது ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, பதற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் வித்திடுகிறது,” என்றார் அவர்.

“செவித்திறன் குறைபாட்டை முறையாகக் கவனிக்காமல் போவது, சக ஊழியர்களுடனான தொடர்பைப் பாதிக்கிறது. சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு திறமையற்றவராகச் சித்திரிக்கப்படக்கூடும்.

“இது இறுதியில் வேலை இழப்பு போன்ற கடுமையான நிலைக்குக் கொண்டு செல்வதுடன், வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது,” என்றார் ஹிரியா.

சமூகத் தனிமை

உணர்வு ரீதியாக, சரியாகக் கேட்க முடியாதவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். இச்சமூகத் தனிமைப்படுத்தல் அவர்களை மெல்ல மெல்ல மனச்சோர்வுக்குத் தள்ளுவதாகவும் ஹிரியா குறிப்பிட்டார்.

குறிப்பாக, செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதை இளம் வயதினர் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு சமூகத்தில் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்வதே முக்கியக் காரணம் என்றார் ஹிரியா.

இத்தகைய பயம் அவர்களைத் தங்களுக்குள்ளேயே முடக்கி, மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

செவித்திறன், காது சார்ந்தது மட்டுமன்றி மூளையின் செயல்பாட்டோடு நேரடித் தொடர்புடையது என்று அவர் விளக்கினார்.

“நாம் நம் மூளையின் மூலமே ஒலிகளைச் செயலாக்குகிறோம். செவித்திறன் குறையும்போது, ஒலியைப் புரிந்துகொள்ள மூளை அதிகப்படியான ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கிறது. இது சோர்வை ஏற்படுத்தி, ஒருவரின் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. காலப்போக்கில் இது அறிவாற்றல் மந்தநிலை, மறதிநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனைச் சாதாரணமாகக் கருதக்கூடாது,” என்று ஹிரியா எச்சரித்தார்.

தொழில்நுட்ப ஆதரவு

சமூகத்தில் மூக்குக்கண்ணாடி அணிவதை இயல்பாகப் பார்க்கும் மக்கள், செவித்திறன் குறைபாடுள்ளோர் அதற்கான கருவி அணிவதைக் குறையாகப் பார்க்கும் மனப்பான்மை இன்னும் இருப்பதாக ஹிரியா வருந்தினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி, செவிப்புலன் குறைபாடு உடையோர்க்கு ஆதரவாக அமையும் கருவி வடிவமைப்புக்கு வழிவகுத்துள்ளதைச் சுட்டிய அவர், தாம் பணியாற்றும் ‘ஆட்டிகான்’ நிறுவனம், தனிப்பயனாக்கப்பட்ட கருவிகளை வழங்குவதாகச் சொன்னார்.

உரிய நேரத்தில் கவனித்து வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி சரியான கருவிகளை அணிவது எதிர்காலச் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் என அவர் விளக்கினார்.

இனி புது உலகம்

“தற்போதுள்ள செவித்திறன் கருவிகள் முற்றிலுமாக மாறிவிட்டன. நான் பயன்படுத்தும் கருவி எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்துள்ளது,” என்றார் மகே‌ஷ்.

இந்தக் கருவி மிகச்சிறியதாக இருப்பதால் பிறர் கண்களுக்குத் தெரிவதில்லை என்று சொன்ன அவர், இரைச்சலான சூழலிலும் உரையாடல்களில் கவனம் செலுத்த முடிவதாகச் அவர் சொன்னார்.

தமது திறன்பேசியுடன் இணைக்க முடிவதால் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதைச் சுட்டினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் ‘ஆட்டிகான் சிர்கான்’ போன்ற கருவிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதையும் இவை சுற்றுச்சூழலை ஆய்வுசெய்து ஒலியைத் தானாகவே சரிசெய்வதையும் சுட்டினார்.

“தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கவே இருக்கிறது. ஆட்டிகான் போன்ற நவீன கருவிகள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை மீண்டும் உலகத்துடன் இணைக்கின்றன,” என்றும் சொன்னார் ஹிரியா.



Thursday, December 11, 2025

மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் - எங்கே இருக்கிறது? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்!



உடலிலோ, மனதிலோ ஏற்படும் எதிர்பாராத மாற்றத்தின் காரணமாக ஒருவரால் சில செயல்களை நிரந்தரமாக செய்ய முடியாமல் போய் விடுவது உண்டு. அவ்வாறானவர்ளை நாம் ‘மாற்றுத் திறனாளிகள்’ (Differently abled people) என்று அழைக்கிறோம். ஹெலன் கெல்லர், பீத்தோவன், லூயி பிரெயில் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமது சுய ஊக்கத்தால் அவர் தம் வாழ்வில் பல சாதனைகளை படைத்துள்ளதாக வரலாறு கூறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம், சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு சட்டம் 1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது 1996 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான விதிகளை ஐக்கிய நாட்டு சபை அமைத்தது. இந்தியாவில் தற்போது அது அமலில் உள்ளது. 'மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்' என்பதும்தான் இதன் நோக்கமாகும்.

நாட்டில் பார்வையற்றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும், செவித்திறனிலும், பேசுவதிலும் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பாசிரியர்களும் போதிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத் துறைகளில் C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 1996 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

மாற்றுத்திறனாளிக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. 1968 ஆம் ஆண்டு மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டன.

1995 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான (சம வாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டமும், 1992 ஆம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் இந்திய அரசால் இயற்றப்பட்டன.

இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் ஆண்டுதோறும் இவர்களுக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவர்களுக்கான இலவசப் இரயில் பயணச் சலுகை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சலுகைகளை இவர்கள் பெற மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி மாற்றுத்திறனாளர் மறுவாழ்வுத் துறை வழங்கும் அடையாள அட்டை இவர்களுக்கு தேவை. இதனைப் பெறுவதற்கு அசல் குடும்ப அட்டை மற்றும் அதன் நகல், மார்பளவுப் புகைப்படம், உடல் இயலாமையை உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழ் போன்றவை தேவையாகும்.

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்தம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 667 கோடியிலிருந்து, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளியில் சேருதல், தேர்வுகளில் கூடுதல் நேரம் பெறுதல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழித் தாளிலிருந்து விலக்கு பெறுதல், பயணச்சீட்டுகளில் கட்டணச் சலுகை பெறுதல், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுதல், அரசின் நலத்திட்டச் சலுகைகளில் முன்னுரிமை பெறுதல், இலவச நான்கு சக்கர வாகனம் பெறுதல், காதுகேள் பொறி, நிதியுதவி பெறுதல், கண்பார்வைக் குறைபாட்டிற்கான உதவி உபகரணங்கள் பெறுதல் போன்ற உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற தகுதி படைத்தவர்கள்.

இவ்வுதவிகளைப் பெற இவர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். இவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்களை மன உறுதியுடன் சந்தித்து வெற்றி பெற வேண்டும். சமூகத்தில் அவர்கள் கண்னியமாக நடத்தப்பட வேண்டும். இதுவே நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியாகும்.


Saturday, April 26, 2025

“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!



24.04.2025 
பார்வை மாற்றுத் திறனாளிகள் தினம் தினம் போராடிப் போராடிதான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஓர் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்பதெல்லாம் எட்டிப்பிடிக்க முடியாத கனவுதான். இத்தகையை சூழலில், ஒன்பதாம் வகுப்பில் தனது பார்வையை இழந்த மனு கார்க் (23) என்ற இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 23 வயதான மனு கார்க். தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துள்ளார். சமீபத்தில் முடிவுகள் வெளியான யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே , சமூக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இது குறித்து அவர் பகிர்ந்தவை: “அரசு ஊழியர்கள் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்பது பற்றிய கதைகளை நான் சிறு வயதிலேயே கேட்பேன். அது எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. சிறு வயதில் இருந்தே நாட்டு நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சம்பவங்களை அறிந்து கொள்வதில் நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது, ​​பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் தொடங்கின. வகுப்பறையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தாலும், கரும்பலகையை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிறகு, விழித்திரையில் சிதைவை ஏற்படுத்தும் ஒரு அரிய மரபணு கோளாறு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

காலப்போக்கில், இது முழுமையான பார்வை இழப்புக்கு வழிவகுத்தது. தொழில்நுட்பங்களை எனக்கு நிறைய வழிகளில் உதவியாக இருந்தது. தேர்வுக்கு தயாராவதில் சற்று சிரமங்கள் இருந்தாலும் கூட, நான் அதை சரியான முறையில் கையாண்டேன். ஆடியோ வடிவில் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னதான் நன்றாக படித்திருந்தாலும், தேர்வு எழுதுவது மிக முக்கியமான ஒரு விஷயம். நன்றாக எழுதும் ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலானது. அவர்கள் நாங்கள் கூறும் பதில்களைப் புரிந்துகொண்டு அவற்றை நாம் சொல்வது போல் சரியாக எழுத வேண்டும். முதலில் 2023-இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். ஆனால், தேர்ச்சி பெறமுடியவில்லை. எனது அம்மா மிகவும் உதவிகரமாக இருந்தார்.

எனது இலக்கில் மிக கவனமாக இருந்தேன். படிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினேன். ஒரு நாளுக்கான பாடத்திட்டத்தை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் இரவு வெகுநேரம் வரை படிப்பேன். மற்ற சமயங்களில் பாடல் கேட்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவேன்.

நான் ஐ.ஏ.எஸ்.-ல் சேர்ந்தால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் அனுதாபத்தையோ அல்லது ஹீரோக்களைப் போல நடத்தப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பு வழங்கப்பட்டாலே போதுமானது” என்றார்.


Sunday, February 10, 2019

நிவேதாவின் ஒரிஜினல் `பேரன்பு' ஸ்டோரி!


மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட நிகழ்வுகளைத் தத்ரூபமாக `பேரன்பு' படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ராம்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களுள் சிலர், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு பேரன்பைக் கொடுத்து நம்முடைய வாழ்வின் அடுத்தகட்ட நகர்தலுக்கான நம்பிக்கையைக் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் பேரன்பானவர்கள்! நிஜத்தில் `பேரன்பினால்' அழகான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நிவேதாவின் வாழ்க்கையைப் பற்றித்தான் இங்கே பேசுகிறார் அவர் அம்மா வனிதா.

``நிவேதாவுடைய ஒன்றரை வயசுல அவளுக்குத் திடீர்னு காய்ச்சல் வந்துச்சு. அதுவும் கையே வைக்க முடியாத அளவுக்கு பயங்கர காய்ச்சல். அலறியடிச்சுகிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அந்தக் காய்ச்சலுக்கு அப்பறம்தான் நிவேதா உடம்புல சில மாற்றங்கள் வர ஆரம்பிச்சது. அவளுக்கு என்னப் பிரச்னைனே தெரியாம பல ஆஸ்பத்திரிகளுக்குக் கூட்டிட்டு போனோம். கடைசியா அவ பன்மெய்ப்புல சவால் கொண்ட குழந்தைனு (Multiple disabled child) கண்டுபிடிச்சு சொன்னாங்க'' என்றவரின் வார்த்தைகளின் அந்நாளின் வலி பிரதிபலிக்கிறது.

``அழுகையைத் தவிர வேற எதுவும் எனக்கும் என் கணவருக்கும் ஆறுதலா இல்லை. கண்ணீர் வற்றிப் போற அளவுக்கு அழுது தீர்த்தோம். அதுக்கப்புறம்தான் உண்மை உறைச்சது. நாங்கதான் அவளோட உலகம். அவளுக்குக் கண் தெரியும்... காது கேட்காது, வாய் பேச வராது, நடக்கும் போது பேலன்ஸ் குறைவாக இருக்கும். எந்நேரமும் அவ பக்கத்திலேயே இருக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல சேக்கனும்னு நினைச்சப்பதான் பிரச்னையே ஆரம்பிச்சது. நார்மல் ஸ்கூல்ல அவள எடுத்துக்கல. காது கேளாதோர் பள்ளியிலயும் சேர்த்துக்கல. வீட்ல அவளுக்குத் தெரிஞ்ச வார்த்தைகள மட்டும் நாக்க மடக்காம பேசி எங்களுக்கு புரிய வெச்சுட்டு இருந்தா.

அவளை உன்னிப்பா கவனிக்கிறப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சது. நிவேதா மூளை பயங்கர ஷார்ப். சொன்னதை அப்படியே கப்புனு பிடிச்சுகிற கற்பூர மூளை. ஆனா அவ மூளையோட கட்டளைகளை ஏத்துகிடுற அளவுக்கு அவளோட கை கால்கள் ஒத்துழைக்கல. அதை ஒரு சாக்கா நிவேதா எடுத்துக்கலை. வீட்ல இருந்தப்படியே கைவினைப் பொருள்கள் செய்ய கத்துக்கிட்டா. அதே மாதிரி சைய்ன் லாங்குவேஜ் கத்துக்க ஆரம்பிச்சா. செல்போன் கவர், நெக்லஸ், கம்மல்னு அவளே நிறைய பொருள்கள் செய்றா. இந்த வருடம் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் மேடை ஏற்றப்பட்ட நிவேதாவுக்கு ஒலித்த கரகோஷங்கள் அடங்க வெகு நேரமானது.'' என்றபடி பெருமையுடன் தன் மகளைப் பார்க்கிறார் வனிதா.

பீரியட்ஸ்... நார்மல் பெண்களே உடலளவிலும் மனதளவிலும் துவண்டு போகும் ஒரு தருணம். நிவேதா எப்படிச் சமாளிக்கிறார் என்று வனிதாவிடம் கேட்டோம்'' சொன்னா நம்ப மாட்டீங்க. நிவேதா பொறுத்தவரைக்கும் பீரியட்ஸ் பிரச்னைகள் எதுவும் நான் எதிர்கொண்டது இல்லை. அவளுக்கு பீரியட்ஸ் வர தேதிய அவளே சரியா குறிச்சு வெச்சுப்பா. அதே மாதிரி அந்தச் சமயத்துல, டார்க் கலர் ட்ரஸ்தான் செலக்ட் பண்ணிப்பா. என்கிட்ட கூட எதையும் வெளிக்காட்டிக்க கூடாதுனு நெனைப்பா. என் பொண்ணு செய்ற விஷயங்கள வெளிய சொன்னா எல்லாரும் ஆச்சர்யமா பாப்பாங்க. ஏன்னா, மருத்துவச் சான்றின்படி, நிவேதா நூறு சதவிகிதம் ஊனமுற்ற பெண். அப்படி இருந்தும் இவ்ளோ தூரம் தெளிவா இருக்கானா நிச்சயம் அதுக்கு அவளோட தன்னம்பிக்கைதான் காரணம்.

அதே மாதிரி அப்யூஸ் பத்தியும் என் பொண்ணுக்கு சைன் லாங்குவேஜ்ல சொல்லிக் கொடுத்திருக்கேன். பஸ்ல டிராவல் பண்ணும்போது நிறைய பாலியல் ரீதியான பிரச்னைகள்ஏற்படும். மாற்றுத்திறனாளி குழந்தைங்கன்னா அந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல முடியாது... அவங்களால் எந்தப் பிரச்னையும் வராதுங்குற தைரியத்துல பஸ்ல பாலியல் ரீதியான சீண்டல்களைச் சிலர் செய்வாங்க. அந்த மாதிரி சமயத்துல பாப்பா என்கிட்டச் சொல்லிடுவா. உதாரணத்துக்கு, இப்போ பஸ்ல டிராவல் பண்ணும்போது யாராவது பாப்பாவைப் பார்த்துட்டே இருந்தா, அம்மா அவங்க என்னைப் பார்க்குறாங்க.. என் முகத்தை மறைச்சு நில்லுங்கன்னு என்கிட்ட சொல்லிடுவா. அந்த மாதிரியான விஷயங்களில் நிவேதா ரொம்பவே கவனமா இருப்பா. ரொம்ப அன்பான பொண்ணும்மா. தன்னைத் தெரிஞ்சவங்ககிட்ட அக்கறையோட நடந்துப்பா. அன்புக்காக ஏங்குற பொண்ணு. என் மூலமா அவளுக்கு அப்படி ஓர் அன்பு கிடைக்கணும்னு கடவுள் நினைச்சிருக்கார் போல...'' என்கிறவர் ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார்.

``எல்லோரையும் போல ஒரு திருமண வாழ்க்கையை நாமளும் வாழணுங்குற எண்ணம் என் பொண்ணுக்கு இருக்கு. நிவேதாவால் பேச முடியாததுனால வாய் பேச முடியாத, காது கேட்காத பையனைத்தான் திருமணம் செஞ்சுப்பேன்னு சொல்றா. ஏன்னா, அவளால் பேச முடியாதுங்குறதுனால சைன் லாங்குவேஜ் மூலமாப் பேசுறவங்க இருந்த கம்பர்டபுளா இருக்கும்னு நினைக்கிறா. அவளைப் பொறுத்தவரைக்கும் அவ பின்னாடி நின்னு பேசினா பிடிக்காது. ரொம்பக் கோபப்படுவா. ஏன்னா அவளுக்கு அது கேட்காது இல்லியா... அதனாலேயே ஏதாவது சொன்னாகூட அவ முன்னாடி நின்னுதான் சொல்லுவேன். இந்தக் காரணத்துக்காகவும் சைன் லாங்குவேஜ் தெரிஞ்ச பையனா இருந்தா நல்லதுனு நினைக்கிறார். நிறைய வரன் வருது. ஆனா எதுவும் அவ மனசுக்கும் எங்க மனசுக்கும் பிடிச்ச மாதிரி இல்லை. நிச்சயம் பொறுப்பான ஒரு பையன் கையில அவளை ஒப்படைக்கிற வரைக்கும் என் தேடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்'' என்று மகள் சார்பாகப் பேசுகிறார் இந்தப் பேரன்புக்காரி.

Monday, May 8, 2017

Deaf Rainbow Films is a group of hearing and speech impaired young people that makes short films to address life's issues in a sensitive manner

Deaf Rainbow Films team
It takes all five senses to experience the world, right? Wrong. When one of the senses does not work, it’s not a deficit but an opportunity for imagination to take over, creativity to flourish and talent to find a proper showcase. Ask Syed Farooq.

People with a physical deficiency are often demoralised and perceive themselves as someone inferior to ‘normal’ people. Normal people who are without doubt flawed in other ways. At such a time, if someone of their ilk became someone their own and helped them find wonderful life, it is nothing but human triumph at its best.

Meet Syed Farooq Nizam, a man who not only overcame debility but held the hands of many others like him to give them a shot at a creative life. An opportunity to explore new horizons. In fact, a chance to reach the rainbow, so to speak.

Deaf Rainbow Films was founded in 2014. Its objective is to provide a platform to talented members of the deaf community in the Indian context, make movies that will inculcate family values, patriotism, managing complex relationships and being environmentally sensitive.

The films made by them are typically of 10 minutes duration. It is a vibrant group of over 20 energetic, talented between people in the age group of 20 to 45.

Syed Farooq, a Hyderabadi in his late thirties, is a commerce graduate and holds a Diploma in Indian Sign Language from NIHH, Kolkata.

In a conversation in sign language, Farooq explains that there are around 18 million hearing and speech impaired people in India but they are a neglected lot when it comes to creative opportunities, empowerment and recognition of their talent.

“‘Mute’ is not the absence of voice but it is an inability to speak normally like others normally do. There are so many deaf and mute kids who need support and a platform to show their talent to the world. They are an asset in our society and not a liability for their parents,” Farooq points out.

Deaf Rainbow Films tries to fill this gap, organising acting workshops and scripting exercises and engages young people in film-making.

“Though our film industry has some examples representing the story of the hearing and speech impaired community, we have always been portrayed as a comical lot. They mock us, never value our talent.”

From Koshish in 1972 to Black in 2005, the films made on the community are indeed a handful. “What most people don’t know is that Black was a huge success and, of course, a sensitive portrayal, but it used American Sign Language (ASL). And hence the import was lost on most Indians who communicate in Indian Sign Language (ISL),” Farooq points out.

Deaf Rainbow Films also organises personality development classes, teaching them confidence and hones the talent of youngsters.

“My mother never gave up on me. She was the one who coached me first in communication. In gatherings, she would explain to me the general conversations in sign language and encourage my siblings also to do the same. She inculcated an inclusive atmosphere at home.

My family never let me feel left out,” Farooq recalls with pride. That should be the spirit of all parents with kids whose faculties are impaired to prevent them from feeling isolated. Syed Farooq is married to a woman with hearing and speech impairment and has two daughters. Needless to say, the lovely family works as a team.

This group consists of the core team of Mohit, Rakesh, Rohit, Karima, Harjeet, Guneet and Anuragh. They all work in various organisations so they usually meet up every Saturday and Sunday at Lamakaan, Banjara-Hills to work on shooting films.

In the last two years, the group made over 10 films which are a fusion of Voice and Sign Language. They are presently managing funds from their own but hope to do it on a larger scale once tey have external support.

“We have shown these short films in private gatherings and during large events held for the hearing and speech impaired. We are concerned by the copyright issues due to which these films are still not made available on public domain. But work is going on in this direction and very soon we wish to launch a YouTube channel,” the team explains.

There are also efforts to have an exclusive reality show to be shot in Mumbai. Interestingly, none of the members of the group comes from a film or media background but have learnt the art through their own observation skills.

The movies made by Deaf Rainbow films look very professional but are actually shot with ordinary cameras by members who have no formal training in film making except Mohit who is a qualified Bachelor of Fine Arts in visual communication.

It is not just dreams that remain unfulfilled for this community but life is also full of constraints on a daily basis. Yet, the group leaps right over all obstacles and has created a canvas, a screen, a stage and a showcase for itself. And savours life’s unheard music, the way no one else can.

Saturday, January 14, 2017

மாற்றுத்திறனாளிகள்: வாழ்க்கைத் துணை!

மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
இது குறித்து கல்யாணி கோனா விளக்குகிறார்:
"எட்டு லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாழ்கிறார்கள். இவர்களில் ஐந்து சதவீதத்தினருக்குத்தான் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதர 95 சதவீதத்தினர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று யாரும் கவலைப்படவில்லை.. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் இல்லை.

சமூகம் அவர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. உரிமைகளைத் தருவதில்லை. தர மறுக்கிறது என்பதுதான் சரி.... மாற்றுத்திறனாளிகள் தங்களின் உடல் குறைகளை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. பிறந்துவிட்டதினால் வாழ்ந்தாக வேண்டும் என்ற காரணத்திற்காக உரிமைகளுக்காக சமூகத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் திருமணம் பற்றி அநேக மாற்றுத்திறனாளிகளுக்கு நினைத்துப் பார்க்கவே நேரம் இருப்பதில்லை.

பதினேழு வயதில் பெற்றோர்களிடம் பண உதவி பெறுவதை நிறுத்திவிட்டேன். பிரேசிலில் வாழ்ந்திருக்கிறேன். அங்கே தனியாகப் போனேன். பிரேசிலில் ஆங்கிலம் கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். அங்கே தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் கிடையாது. ஸ்பானிஷ் அரசாங்க மொழி. தெரியாத இடம்... தெரியாத மொழி.. தெரியாத நபர்கள்.. என்னால் திரு திருவென்று விழிக்க மட்டுமே முடிந்தது .

நான் ஆங்கிலத்தில் கேட்பதை - சொல்வதைக் கேட்ட பிரேசில் நாட்டவர்களும் பதிலுக்கு விழித்தார்கள். எனக்குத் தெரிந்த ஆங்கிலம் எனக்குக் கை கொடுக்கவில்லை அவர்கள் மொழி எனக்குத் தெரியாதது ஒரு இயலாமைதானே.. எனது இயலாமைகளினால் நானும் ஒரு மாற்றுத் திறனாளியானேன். அந்த நாட்டு மக்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல், ஸ்பானிஷ் மொழி படித்தேன். கொலம்பியா போனேன். அங்கும் அதே கதைதான். பிறகு கம்போடியா... எல்லா இடத்திலும் என்னை ஒரு மாற்றுத்திறனாளியாகவே உணர்ந்தேன்.. அந்த உணர்வுதான் என்னை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியிருக்க வேண்டும். நான் குஜராத்தைச் சேர்ந்தவள் என்றாலும், படித்தது மும்பையில், வாழுவது டில்லியில்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாக வாழ்க்கைத்துணையைத் தேடித்தரும் திருமண சேவை மையம் இல்லை என்பது தெரியவந்தது. இது இந்தியாவில் மட்டும் உள்ள நிலைமை அல்ல. வெளிநாடுகளிலும் இதே நிலைமைதான். அதனால் இந்தியர்களை இந்த விஷயத்தில் குறை சொல்ல முடியாது. மாற்றுத்திறனாளிகள் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தால் தனியாக இருந்து கொள்ளட்டும். ஜோடியை தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதற்காகத் தனியாக, தனிமையாக யாரும் வாழவேண்டாம். தனியாக வாழவும் விடக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். இந்த முயற்சியில் நாமே முதன் முதலாக இறங்கினால் என்ன என்று தோன்றியது. அந்த முடிவில் உருவானதுதான் "வாண்ட்டட் அம்பரல்லா' (Wanted Umbrella).

ஆன்லைன் சேவை மட்டுமே விரைவாக செயல்படும் என்பதால் ஆன்லைன் சேவை தொடங்க முடிவு செய்தேன். ஆனால் ஆன்லைன் சேவை தொடங்க சுமார் ஐந்து லட்சம் செலவு செய்யவேண்டும். பணத்திற்கு எங்கு போவது. இந்தப் பொருளாதாரத் தேவையை மக்களிடம் முன் வைத்தேன். சுமார் ஆறு லட்சம் திரட்ட முடிந்தது. அதைவிட முக்கியமானது பலர் தந்த யோசனைகள் அறிவுரைகள்.. அவை எனது முயற்சிக்கு புதிய பாதை போட்டுத் தந்தன. அப்படித் தொடங்கப்பட்டதுதான் இன்க்லவ் (Inclov) என்ற நிறுவனம்.

இன்க்லவ், உலகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் செயலி. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், ஸ்க்ரீன் ரீடர், டாக்பேக் வசதிளை உருவாக்கியிருக்கிறோம். இது பாதுகாப்பான செயலி ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது. கூடிய சீக்கிரம், வீடியோ அழைப்பு வசதியையும் உருவாக்க இருக்கிறோம். இதனால், கேட்கும் சக்தி இல்லாதவர்கள், பேச இயலாதவர்கள் சைகை மூலம் பேசிப் புரிந்து கொள்ள முடியும். இப்போதைய செயலி ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்குகிறது. இந்த ஆன்லைன் வசதிக்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்க்லவ்வை 2016 ஜனவரி மாதம் 21-ம் நாள் தொடங்கினேன். இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறு மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இதுவே ஒரு சாதனைதான்.

இன்க்லவ் சேவை தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் அனிஷா - இம்ரான் இந்த சேவையில் பதிவு செய்து, பரஸ்பரம் அறிமுகமாகி பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் . முப்பது வயதாகும் அனிஷா பானு முல்தானி ஆறு ஆண்டுகளாக தனக்கு ஒரு துணை கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தார். அனிஷா போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலி உதவியால் வலம் வருபவர்.

அனிஷா சென்ற ஆண்டில் மிஸ் வீல்சேர் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர். சூரத்தைச் சேர்ந்த அனிஷா இன்க்லவ் சேவை மூலமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கரானா இம்ரான் என்பவருடன் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்ள பரஸ்பரம் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னொருவர் சாகர். பார்வையற்றவர். எந்தக் குறையும் இல்லாத நதியா என்பவரின் அறிமுகம் இன்க்லவ் சேவை மூலம் கிடைக்க ... இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

வணிக ரீதியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கை அமைத்துத் தரும் சேவையிலும் இன்க்லவ் வெற்றி பெற்றுள்ளது. வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த சேவையை சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைய, தொடர்ந்து உழைப்பேன்'' என்கிறார் கல்யாணி.

Wednesday, December 7, 2016

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்

போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை  60 சதவீதம் தவிர்க்க முடியும்.

நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக் கேட்டதும், பலரும் இது ஆண்மை பற்றிய விவகாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான விஷயம். பெண்களுக்கு மட்டுமல்ல, வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்கும் அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதம் பேர், பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.

இதனால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர்க்கோர்ப்பது, குடல் வெளியில் தள்ளி இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை-கால் எலும்புகள் வளராமல் இருப்பது போன்ற குறைகள் குழந்தைகளுக்கு இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது. இந்த குறைகளில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டு பிடிக்கவே முடியாது. அதிலும் காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் குழந்தைகள் வளர வளரத்தான் தெரிய வரும். ஸ்கேன் மூலம் உயிர் பாதிப்பு பிரச்சினைகளை மட்டும் தான் கண்டுகொள்ள முடியும் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, பிறவிக் கோளாறு ஏற்படுவதற்கு, மரபு ரீதியான, சுற்றுச்சூழல் காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இந்த குறைபாடுடன் குழந்தைகள் பிறக்க, போலிக் ஆசிட் குறைவு தான் காரணம். ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம்.

மிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும். இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்திரையுடன் சேர்த்து, போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல் தானே நடக்கிறது.

கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால், பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் போதே போலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் வெளிநாட்டினர் இந்த மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்‘ என்ற பெயரை வைத்தார்கள்.

நமது நாட்டிலும் பெண்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற இந்த நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து கொடுத்து வந்தால், பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும். கரு உருப்பெறும் போதே, போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையோடு, ஆண்களும் தங்கள் மனைவிமார்களுக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.

''மாற்றுத்திறனாளிகளல்ல நாங்கள்- விதியை மாற்றும் திறனாளிகள்''...

அமெரிக்கா முதல் அமைந்தகரை வரை…

சமீபத்தில் காதில் விழுந்த இரு வேறு முக்கியமான அரசியல்வாதிகளின் பேச்சும் அவர்களது நடவடிக்கையும்தான் இக்கட்டுரை எழுதுவதற்கு முக்கிய காரணம். அந்த இருவரில் ஒருவர் அமெரிக்கர். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

முதலாமவர் யார் தெரியுமா? அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்! தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபரைபோல் அவர் மேடையில் நடித்துக் காட்டியது அமெரிக்க ஊடகங்களில் பெரிய சர்ச்சையானது.

ஏன் ஒரு மேடைப்பேச்சு சர்ச்சையாக மாறியது?

இந்த சர்ச்சைக்கான காரணம், இப்பத்திரிகையின் செய்தியாளர் செர்ஜ் கோவலெஸ்கி மாற்றுத்திறனாளி என்பதாலும் அவரின் அங்க அசைவுகளைப் போல் மேடையிருந்தவாறே ட்ரம்ப் கிண்டலடித்ததும்தான். இதுபோன்ற நிகழ்வுகள், கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்து பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் செயல்பாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வை எப்படி இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுக்கள்தாம்.

இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பல தருணங்களிலும் இப்படி ஊனத்தையும், மாற்றுத் திறனாளிகளையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஊனம் என்பது குறைபாடு அல்ல, மாறாக அதுவும் இயற்கையே என்பதை இச்சமூகம் ஏற்க மறுத்து வருகிறது.

ஊனம் என்பது இயற்கையின் பலவிதமான கூறுகளில் ஒன்றுதான் என்கின்ற பார்வை, நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல முன்னேறிய நாடுகளில்கூட உருவாகவில்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் நிகழ்ந்தது போல, நம் நாட்டு அரசியல்வாதிகளும் மாற்றுத்திறனாளிகளை கேலி கிண்டலுக்கு உள்ளாக்குவது தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய சமூகத்தில் அரசியல் மேடைகளில், தொலைக்காட்சி விவாதங்களில் ஏறத்தாழ தொடர் நிகழ்வுகளாகவே மாறி போயிருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சகட்டம்.

சுயமரியாதையையும் முற்போக்கு சிந்தனையையும் அடிநாதமாகக் கொண்ட தமிழக அரசியல் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் போட்டி சட்டமன்றம் நடத்திய பொழுது, 'அணையில்லாத ஊருக்கு அணைக்கரை என்று பெயர் வைத்துவிட்டார்' என்ற கூற்றுக்கு மறுமொழி கூறும் பொழுது, 'நொண்டிக்கு நடராசன் என்றும், குருடனுக்கு கமலக்கண்ணன் என்றும் பெயர் வைப்பதில்லையா, அதுபோன்றுதான் இதுவும்' (சட்டமன்ற உறுப்பினரின் வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன) என்று சொல்ல, அங்கு கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களும் வாய்விட்டு சிரித்தனர். அவர்களுக்கு இது சிரிப்பாக இருக்கலாம். அதனைத் தொலைக்காட்சியில் பார்த்த எங்களைப்போன்றவர்களுக்கு எவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஒருநிமிடம் இவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படம் ஒன்றில் வளர்ச்சிக் குறைபாடு உள்ள கதாபாத்திரத்தின் தாய் கதாபாத்திரம் 'உங்கள் மகள் என் மகனைப் போன்ற ஊனமுற்றவரையா காதலித்திருக்கிறாள்?' என்று சொல்ல, அதனைக் கேட்ட மாற்றுத்திறனாளி மகன், 'தன் அம்மாவே இப்படி கூறிவிட்டாரே' என்று மிகவும் மனம் வருந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

பழைய தமிழ் சொலவடைகளை வைத்து ஊனத்தையும், மாற்றுத் திறனாளியையும் காட்டி, உவமையாக சித்தரித்து, எள்ளி நகையாடிய அரசியல் தலைவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டால், 'நான் ஊனமுற்றவர்களை கேவலப்படுத்துவதற்காக சொல்லவில்லை அது தவறான புரிந்து கொள்ளப்பட்டது' என்ற வழக்கமான பதில்தான் வரும்.

நான் மேலே குறிப்பிட்ட திரைப்படத்தின் தாய் கதாபாத்திரத்தின் அமைப்பு அவர் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை அறியாமல் கூறுவதுபோன்று, திரைப்படத்தின் இயக்குநர் அமைந்திருப்பார். அதுவே, அத்தனை தூரம் மாற்றுத்தினாளிகளுக்கு மன வருத்தத்தையும், மன உளைச்சலுக்கும் உட்படுத்தி, தற்கொலைக்கு தூண்டும்வண்ணம் அமைந்திருக்கிறதென்றால், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற குத்துப் பேச்சுகளும், கேலி கிண்டல்களும், தொலைக்காட்சி விவாதம் மற்றும் அரசியல் மேடை அவமானங்களும் மாற்றுத் திறனாளிகளின் உள்ளங்களை எத்தனை தூரம் காயப்படுத்துகின்றன என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது ஏதோ, ஒரு கட்சியை சார்ந்தவர் மாத்திரம் இப்படி கூறியதாக வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

2014ல் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர், பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்கட்சி வேட்பாளர்களைப் பார்த்து ஹிந்தியில் 'நொண்டி', 'குருடன்' என்று பொருள்படும்படி பேசியிருக்கிறார். அதுவும் அத்தனை ஊடகங்களினுடைய பார்வையும் தன் பேச்சின் மீது இருக்கின்றது என்று தெரிந்தும்.

இவர்களின் மனோபாவம், கவிஞர் வைரமுத்துவின் முரண்பாடு என்று தலைப்பிட்ட கவிதையை நினைவூட்டுகிறது. அதில் , 'ஜனநாயகம் முக்கியம், மக்களை கொன்றுவிடு' என்ற வரிகள்தாம் என் மனதில் நிழலாடுகின்றன.

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி, எளிய மனிதர்களின் விஷயத்தில் இப்படியா நடந்துகொள்ள வேண்டும்? பண்டைய இதிகாசமான ராமாயணத்தில் சரிநிகர் ஆசனம் மறுக்கப்பட்டதை அடுத்து, தன் வாலால் தனக்கு ஆசனம் அமைத்துக் கொண்டார் அனுமன். அதனைக்கண்டு வெகுண்ட ராவணன், அவரது வாலுக்குத் தீயிட்டதாகவும், அத்தீயைக் கொண்டு அதிர் நிகழ்வாக, இலங்கை பட்டினத்தையும் எரித்து, தம் வாலும் எரிந்த நிலையில் கிஷ்கிந்தைக்கு திரும்பிய அனுமனைக் கண்ட மற்ற வானரங்கள், வாலறுந்த அனுமனைப் பார்த்து எள்ளி நகையாடி அவரை ஒதுக்கி வைத்தனவாம்.

இன்று மாற்றுத் திறனாளிகளை எள்ளி நகையாடுவோரின் மனோபாவத்துக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை. அரசியல் தளங்களில் மட்டுமல்லாமல், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்வது தொடர்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான அரசு எந்திரங்களின் சுவிட்ச்களை எங்களைப்போன்றவர்கள் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

நமது இந்திய நாட்டில் மாற்றுத்திறனாளியை எப்படி அழைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இல்லை, எப்படி அழைக்கக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதலும் இல்லை. இழிவான வார்த்தைகளோ அல்லது பல வார்த்தை பிரயோகங்களோ, மாற்றுத்திறனாளியைக் கிண்டல் செய்யும் வசனங்கள், அவர்களை உடல் ரீதியில் துன்புறுத்தும் செயல்கள், ட்ரம்ப் செய்ததுபோன்ற அங்க அசைவுகள் போன்றவற்றைக் குற்றமாக நம் சட்டம் இன்றளவும் அறிவிக்கத் தயாராக இல்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கெதிரான இழி சொற்களை பயன்படுத்துதல் தண்டனைக்கான குற்றம் என்று வரையறுத்தும்கூட இன்றளவும் அக்குற்றங்கள் அரங்கேறுகின்றன. அவற்றுக்கெதிரான குற்ற வழக்குகள் பதியப்படாததும் நடக்கிறது.

ஆக, சட்டப்பாதுகாப்பு உள்ள ஒரு விஷயத்திலேயே இவ்வளவு மீறல்கள் நடக்கின்றபோது, சட்டப்பாதுகாப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருக்கெதிரான கேலி,கிண்டல்களும், இழிவுபடுத்துவது தொடர்வதில் ஆச்சர்யமில்லை. உலகம் அறியாத ஒரு எளிய மனிதன் இவற்றைச் செய்வதை விடுங்கள், சட்டமியற்றும் அதிகாரம் பலமுறை வாய்க்கப்பெற்ற, இனியும் வாய்ப்புகள் உள்ள அரசியல்வாதிகள் மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாடுவது 'வேலியே பயிரை மேய்வ'தல்லாமல் வேறென்ன?

திரைப்படங்களையும் தமிழர் வாழ்வையும் பிரித்துப்பார்க்க முடியாது. அதேபோல தமிழக அரசியலையும் தமிழ் சினிமாவிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பிரபலங்கள் இடம்பெயர்வது வெகு இயல்பானது. எனவே, திரைப்படத்தின் மூலமாக செல்லும் செய்தி, மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளைப்பற்றிய சித்தரிப்பு எந்த 'அழகில்' இருக்கிறது என்பதை நீங்களும் நானும் அறிவோம்.

திரைப்படங்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சினிமாட்டோகிராஃபி சட்டம், பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான, வார்த்தை பிரயோகத்திற்கோ அல்லது காட்சி அமைப்பிற்கோ கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை.

மேலும், தொலைக்காட்சி தொடர்களை நெறிப்படுத்துவதற்கான சட்டமும் தற்போது அரசால் கொண்டுவர முடியாத, செயலற்ற அரசாகவே, மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன. திரைப்படத் தணிக்கை குழுவில் மாற்றுத் திறனாளி (அ) ஊனமுற்ற பிரநிதிகளுக்கு உறுப்பினர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற எங்களின் குரல் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய ஆணையர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்பு கூட அமல்படுத்தாமல் இருப்பது 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற கூற்றைத்தான் நிரூபித்திருக்கிறது.

மற்றவர்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற, எங்களின் தொடர் கோரிக்கைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடமில்லை என்பது தான் உச்சகட்ட வேதனையாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாகுபாட்டிற்கெதிரான சரத்தில் இனம், மொழி, பாலினம் மற்றும் இதர விடயங்களுக்காக பாகுபாடு பின்பற்றக்கூடாது என்ற கூறியிருக்கும் அரசியல் சாசனம் ஊனம் காட்டி, பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்ல தவறியிருக்கிறது. இதன் விளைவாக, சமத்துவம் என்ற ஒவ்வொரு குடிமகனின் / குடிமகளின் அடிப்படை உரிமை மாற்றுத்திறனாளியைப் பொறுத்தவரையில், ஊனம் என்ற பார்வையின் வழியாக கொடுக்கப்படவில்லை என்பது தான் எங்களுக்கு இருக்கும் சட்ட சிக்கல்.

அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பொழுதும் சரி, இன்றளவும் சரி, பங்கேற்பு என்ற கோட்பாடு பின்பற்றப்படாததனால், அன்றைக்கு சமத்துவத்தை இழந்தோம். இன்று சாதாரண மனிதனுக்கான சுயமரியாதையும் இழந்திருக்கிறோம்.

2 ஆண்டுகளுக்கு முன் மாற்றுத்திறனாளியான பேராசிரியர் ஜி.ஜா. கோஸ் என்பவரை, அவர் ஊனத்தைச் சுட்டிக்காட்டி, விமானத்தை இயக்க மறுத்து கீழிறக்கிவிட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறன் அல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகளை புரிந்துகொள்ள தொடர்ச்சியாக மறத்துள்ளார்கள் என்ற கண்டனத்தை தெரிவித்து, அவ்விமான நிறுவனத்துக்கெதிரான ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

இதுபோன்ற பல உயர் நீதிமன்ற மற்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்பும் கூட, நிர்வாகத் துறையினரும், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் காணமுடியவில்லை என்பது சமூகத்தின் அடிப்படையில் கோளாறு இருப்பதைத்தான் காட்டுகிறது. சமூகம் தானாக மாறும் என்று காத்திருப்பது நாளை இலவு காத்த கிளி போல் எங்கள் சமூகம் மாறிவிடுமோ என்ற அச்சத்தை எங்களுக்குள் விதைக்கிறது. ஆட்சி அதிகாரம் என்ற அம்பலத்திற்குள் எங்கள் சொல் ஏறினால் தான் அரசியல் அழுத்தம் உருவாகி இந்நிலையில் மாற்றம் எற்படும் என்ற கட்டத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கிறது. இச்சமூகம் ஊனம் எங்களுக்கா, சமூகத்திற்கா என்று பார்த்தால், சமூகம் தான் ஊனமுற்றிருக்கிறது என்பதை நாங்கள் தெள்ளத் தெளிவாக அறிகிறோம்.

எங்கள் சொல் அம்பலம் ஏற்வதற்கு, அரசியல் பங்கேற்பு என்பது ஒரு முக்கியமான யுக்தியாக அமையும் என்றால், ஏன் நாங்கள் அதை நோக்கிய பயணத்தை நாங்கள் தொடங்கக்கூடாது? இந்தியாவின் அரசியல் சாசனத்தில் தேர்தலுக்கு வராமல், மக்களைச் சந்திக்காமல் மக்கள் தொண்டு என்பதை அறவே செய்யாமல், எத்தனை பேர் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் நியமன உறுப்பினர்களாக மாறும் நிலையில், மண்ணின் மைந்தர்கள், மாற்றுத்திறனாளிகள் நாங்கள், மண்ணின் மானத்தைக் காக்கும் மாரியப்பனாகவும் நாங்கள் எங்கள் பிரச்சினைகளைத் தாண்டி, சர்வதேச அரங்கில் சாதிக்க முடிந்த எங்களுக்கு, சட்ட மன்றத்தில் இடம் அளிக்காமலா போகும் காலம்?

வெகுஜனம் மட்டுமல்ல, அறிவுசார் சமூகமும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்:

''மாற்றுத்திறனாளிகளல்ல நாங்கள்- விதியை மாற்றும் திறனாளிகள்''...

- தீபக், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர்.

Monday, November 28, 2016

நச்சுகளை சுவாசிப்பதால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு: முதன்மைச் செயலர் நசீமுதீன்

 26.11.2016
காற்றில் கலந்துள்ள நச்சுகளை கர்ப்பிணி சுவாசித்தால், கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவும் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.
மதுரம் நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கான மையத்தின் 5-ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் 13-ஆவது தேசிய பயிலரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் நசீமுதீன் பேசியது:

மருத்துவத் துறையில் நாம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் உடல்நலக் குறைபாடு, மனநலக் குறைபாடு போன்ற மாற்றுத்திறனோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு கருவில் உள்ள குழந்தை காற்றில் கலந்துள்ள நச்சுகளை சுவாசிப்பது, வாழ்க்கை முறை மாற்றம், சிறுவயதுத் திருமணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் தமிழகத்தில் பருவ வயதில் உள்ள சிறுமிகளில் பெரும்பாலானோர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதும் பிறவிலேயே குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

உடல் ஊனம் உள்ளிட்ட பிரச்னைகளை கருவிலேயே கண்டறியப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
மேலும் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகள், அதற்கான காரணங்கள், கருவுற்ற பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எளிய விளக்கக் கையேடு தமிழில் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களில் 60 சதவீதம் பேரால் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, எளிய தமிழில் இதுதொடர்பான கையேடு வெளியிடப்பட வேண்டும்.
தமிழகத்தில் 2010-2011-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.112 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

"விரைவில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி'
மாற்றுத்திறனாளிகளைக் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ளது என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முதன்மைச் செயலர் நசீமுதீன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் திட்டப்படி, சென்னை, கோவை மாநகரங்களில் மொத்தம் 25 கட்டடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், சாய்தளம் உள்ளிட்டவை அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளளது. ரூ.20 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, ரூ.3.80 கோடி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

Friday, June 26, 2015

TAKE CARE EYE


VID-20150625-WA0002.mp4
Mobile but
Posted by Hai Hello on Thursday, June 25, 2015

Friday, June 5, 2015

மரங்களில் மாற்றுத்திறனாளி போன்சாய்!

போன்சாய் மரங்கள்- இயற்கையாக வளரக் கூடிய மரங்களை குறுகிய தொட்டிக்குள் திணித்து அவற்றை வேர்களை வெட்டி கிளைகளை நாம் விரும்பு திசைகளுக்கு திருப்பி ஒரு மரம் எப்படி இருக்குமோ அதே மாதியாகவே பூ, காய் விழுதுகள் கொடுக்கக் கூடிய மரங்களின் மினியேச்சரைதான் போன்சாய் என்கிறோம்.

சில வருடங்களாக இவை வணிக ரீதியாக அழகுக்காகவும் வாஸ்து உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மக்களிடையே பரவலாக விற்பனையாகின்றன. எந்த தட்ப வெப்ப நிலையிலும் சிறிய அளவிலான தொட்டியில் கூட இந்த மரங்களை வளர்க்க முடியும் என்பதே மக்கள் இந்த வகையான மரங்களை விரும்ப காரணம். பல தலைமுறைகள் வாழக்கூடிய ஆலமரம், அரச மரம் முதலான மரங்களை கூட போன்சாய் மரங்களாக மாற்ற முடியும்.



இப்போது செய்தி இதுவல்ல.சில திருமணங்களிலும், பள்ளிகளிலும் போன்சாய் மரங்களை பரிசுப் பொருட் களாக கொடுத்து அனுப்புகிறார்கள். இயற்கைக்கு மாற்றான இந்த போன்சாய் மரங்களை குழந்தைகளிடம் கொடுத்து ஊக்கப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்? என்பதை சூழலியலாளர் ரமேஷ் கருப்பையாவிடம் கேட்டோம்.

‘’தாவரங்களைப் பொறுத்தவரை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தட்ப வெப்பநிலை, காற்று, மண் நீர் இவற்றை சார்ந்து வளரும். அதனை இயற்கைக்கு மாற்றாக நம்முடைய விருப்பத்திற்காக அதன் இயல்புத் தன்மையை அடக்கி ஒடுக்கி சுருக்குவதே ஒரு தவறான செயல்தான். விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இயற்கையை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். இயற்கையின் கூறுகளை வேண்டுமானால் விஞ்ஞானத்தின் உதவியால் தெரிந்து கொள்ளலாம்.



பூகம்பம் ஏன் வருகிறது? வானிலை அறிக்கை என்ன, பாலைவனங்கள் எதனால் உருவாகின்றன என இயற் கையை அறிந்து கொள்ளவே நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டுமே தவிர, இயற்கைக்கு புறம்பான ஒன்றை செய்ய பயன்படுத்துவதும், அதனால் விளைந்த ஒன்றை குழந்தைகளுக்குப் பரிசளிப்பதும் அதை ஊக்கப்படுத்துவதுமே தவறான செயலாகும்.

மண்ணில் விதை விதைக்கிறோம். விதை முளைக்கிறது, பின்பு செடியாகிறது, பின்பு மரமாகிறது, பூ பூக் கிறது, காய் கனியாகிறது, பூக்களைத் தேடி வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் வருகின்றன.

இயற்கையாய் நிகழும் நிகழும் நிகழ்வுகளை குழந்தைகளுக்கு முன் உதாரணம் காட்டலாமே தவிர, இயற் கையை அடக்கி ஆளும் செய்கையை செய்யவே கூடாது. மரக் கன்றுக்களை பரிசளிப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமோ அதேபோல் போன்சாய் மரங்களை தராமல் இருப்பதும் நல்லது. சுற்றுச் சூழலுக்கு நன்மை தரும் வகையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் கல்வாழை செடிகள், வெட்டிவேர் இவற்றையும் பரிசாக கொடுக்கலாமே.

வீட்டை சுற்றிலும் காற்றை சுத்திகரிக்கும் மூங்கில் செடிகள், வேப்ப மரங்கள், மூலிகைச்செடிகள் இவைகளை வைப்பதால் நல்ல காற்றை பெறுவதுடன் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதை விடுத்து மரங்களை அணு அணுவாய் சிதைக்கும் குரூரத்தை செய்வது சரியா..? இயற்கையோடு இணைந்திருப்போமே’’ என்றார் அக்கறையுடன்.
-பொன்.விமலா

Friday, February 13, 2015

ASL Storytelling - Love You Forever Books English



Monday, May 5, 2014

நம்மால் முடியாதா?

கடந்த சில காலங்களாகவே மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதை நாம் கவனித்து வருகிறோம்.

இதனை இந்த உலகும் நன்கு உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலைமையையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக சுமார் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை போட்டு, அதனில் கிடைக்கும் தண்ணீரில் சில இரசாயண கலவைகளை கலந்து இன்று ஒரு கேன் தண்ணீர்  சுமார் ரூ.20லிந்து அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விற்பனை செய்வதையும் நாம் பார்த்து

Tuesday, March 25, 2014

ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி..

23 March 2014
ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி...- குமரன் கே.; பக்.132; ரூ. 250; கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை-83; )044-2489 5734.

23 வயதே நிறைவடைந்த, மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்ய விரும்புவதையும் சுயசரிதை நூலாக

Thursday, February 13, 2014

பார்வையற்றோரை வஞ்சிக்காதீர்கள்- மனோகரன்

13.02.2014,
இந்தியா முழுக்கச் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 17 லட்சம் பேர் என்கிறது ஒரு கணக்கீடு. இன்னொரு கணக்கீடு, 22 லட்சம் என்கிறது. அதில் ஒன்பதரை லட்சம் பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். 1970-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் தேசியப் பாதுகாப்புப் பார்வையற்றோர் இணையத்தில் மட்டும், நாடு முழுக்க 50 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் ஏழாயிரம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமீபத்தில் நமது நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகள் வரைவு மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க எங்கள் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கிற மாதிரியான குளறுபடிகளை உள்ளடக்கியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யுமாறு தொடர்ந்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்திவந்தோம். உதாரணமாக, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்படும் வகையில் சட்டம் உள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், இந்த மசோதாவில் 10 ஆண்டுகளாக இருந்ததை 5 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்கள். ஏற்கெனவே, மாற்றுத் திறனாளிகள் பன்மடங்கு வேலைவாய்ப்புப் பெறாமல் இருக்கும் நிலையில், அவர்களை மேலும் வேலையில்லாதவர்களாக ஆக்கும் முயற்சியே இது. அதேசமயம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே இருந்த 3% இட ஒதுக்கீட்டை 6%-ஆக ஆக்குமாறு கேட்டிருந்தோம். இந்த மசோதாவில் 5% ஆக ஆக்கப்பட்டிருக்கிறது. அதில் முழுமையாகப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும், ஓரளவு பார்வை தெரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும் பிரித்து உள்ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் ஆணையம்
முந்தைய சட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு இருந்ததையே இப்படிப் பிரித்துப் போட்டிருப்பது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வஞ்சிப்பதாகும். மாற்றுத் திறனாளிகளின் முறையீடுகளைக் கேட்கவும், பேசவும் பிரச்சினைகளை அரசின் முன் வைக்கவும் மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைப்பதாக அதில் உள்ளது. ஒரு மகளிர் ஆணையம் என்றாலோ, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்றாலோ மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்டோரில் ஒருவரைத்தான் ஆணையராக நியமிப்பது வழக்கம்.

அதுபோல மாற்றுத் திறனாளி ஆணையத்தின் ஆணையராக மாற்றுத் திறனாளி ஒருவரையே நியமிக்கச் சட்டத்தில் வழிவகைசெய்யக் கேட்டிருந்தோம். அதைச் செய்யவில்லை. இப்படி இந்த மசோதாவில் உள்ள 20 அம்ச சட்டத்திருத்தங்களும் ஏகப்பட்ட குளறுபடிகளுடன்தான் இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் சீர்செய்யாமல் சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று சட்ட அமைச்சர் கபில் சிபலைச் சந்தித்தோம். ரயில்வே மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனைப் பார்த்துப் பேசினோம். எங்கள் திருத்தங்களை அவர்களிடம் மனுவாகக் கொடுத்தோம்.

ஆனால், அவர்களோ கொண்டுவந்திருக்கும் சட்டமசோதவை அப்படியே சட்டமாக்க முடிவு செய்து உள்ளார்கள். மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் போதிய அனுபவம் இல்லாத, மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள் கமிட்டியில் இடம்பெற்றுத்தான் மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்துகொள்ளாத இத்தகைய ஒரு சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியிருக்க முடியும். எங்கள் பொதுச்செயலாளர் எஸ்.கே. ரூட்டா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிதான். அவரைப் போல் முதிர்ச்சியுள்ள மூத்த மாற்றுத் திறனாளிகள் எத்தனையோ பேர் நாட்டில் உள்ளனர். அவர்களையெல்லாம் கலந்தாலோசித்து வரைவு மசோதா தயாரித்திருந்தால், இந்தப் பிரச்சினையே வந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் சொல்லியாக வேண்டும்

எனவே, எங்களுக்கு எதிரான இந்த மசோதாவை எங்கள் எதிர்ப்பை மீறியும் சட்டமாக்கினால், நாங்கள் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இதுவரை நாங்கள் எந்த இடத்திலும் அரசியல்ரீதியாக ஒன்றுசேர்ந்ததில்லை. அரசியல் கண்ணோட்டத்தோடு பிரச்சாரமும் செய்ததுமில்லை. ஆனால், இந்த முறை நாடு முழுக்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அதேபோல் 18 வயது எட்டியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு ரூ.1,000 உதவித்தொகை வழங்கிவருகிறது. என்ன காரணமோ, நான்கு மாதங்களாக இந்த உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி யாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
Thanks to