FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 10, 2013

போலி அட்டைகளை தடை செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

09.11.2013, திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையே ஊடுருவியுள்ள போலியான மாற்றுத் திறானாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய கோரி நேற்று காலை அம்மையார்குப்பத்தில் மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறானளிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பத்தில், போலியான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வலியுறுத்தி நேற்று காலை மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக அரசு மருத்துவர்களால் போலியாகச் சான்று பெற்றுள்ளவர்களின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூலியாக, மத்திய அரசு நிர்ணயித்த ரூ.148 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பணிதல பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்யாமல், நன்றாக இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பொய்யாக அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாயுதம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுந்தரவேல், ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment