FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 10, 2013

போலி அட்டைகளை தடை செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

09.11.2013, திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையே ஊடுருவியுள்ள போலியான மாற்றுத் திறானாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய கோரி நேற்று காலை அம்மையார்குப்பத்தில் மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறானளிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பத்தில், போலியான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வலியுறுத்தி நேற்று காலை மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக அரசு மருத்துவர்களால் போலியாகச் சான்று பெற்றுள்ளவர்களின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூலியாக, மத்திய அரசு நிர்ணயித்த ரூ.148 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பணிதல பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்யாமல், நன்றாக இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பொய்யாக அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாயுதம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுந்தரவேல், ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment