FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, November 10, 2013

போலி அட்டைகளை தடை செய்ய மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

09.11.2013, திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டத்தில் உண்மையான மாற்றுத் திறனாளிகளுக்கு இடையே ஊடுருவியுள்ள போலியான மாற்றுத் திறானாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய கோரி நேற்று காலை அம்மையார்குப்பத்தில் மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறானளிகள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அம்மையார்குப்பத்தில், போலியான மாற்றுத் திறனாளிகளின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வலியுறுத்தி நேற்று காலை மாநில மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக அரசு மருத்துவர்களால் போலியாகச் சான்று பெற்றுள்ளவர்களின் அடையாள அட்டைகளைத் தடை செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூலியாக, மத்திய அரசு நிர்ணயித்த ரூ.148 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பணிதல பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்யாமல், நன்றாக இருப்பவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று பொய்யாக அடையாள அட்டை வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலாயுதம், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுந்தரவேல், ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Thanks to

No comments:

Post a Comment