FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, September 11, 2025

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்!



08.09.2025 
திருப்பத்தூர் காது கேளாதோர் நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்!!

திருப்பத்தூர் செப் 09. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காது கேளா தோர் நலச் சங்கம் 20 வது ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு 10வது மாநில மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது. காது கேளாதோர் நல சங்க தலைவர் தீபக் சிவகங்கை மாவட்ட செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கௌரவ தலைவரும், ராணி வேலு நாச்சியார் அறக்கட்டளை தலைவருமான கோபால்ராஜன் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், சட்ட ஆலோசகர் துரைபாண்டியன், முன்னாள் தலைவர் பழனியப்பன், சேர்மன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆதித்யா சேதுபதி, சிவகங்கை சமஸ்தானம் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் துணைத்தலைவர் அமானுல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டார்.
 
மாதாந்திர உதவித் தொகை 6000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

உள்ளிட்ட 24 கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் காதர் சுல்தான் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கேளாதோர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


No comments:

Post a Comment