FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, May 9, 2020

காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

07.05.2020
விழுப்புரம்; விழுப்புரம், மந்தக்கரை, புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சேர்க்கை நடக்கிறது.தமிழக அரசின் அனுமதி பெற்ற இந்த பள்ளியில், கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஆகிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், விழுப்புரம், மாம்பழபட்டு ரோடு, இந்திரா நகரில் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் நடக்கிறது.இங்கு, நரிக்குறவர்கள் பிள்ளைகள், கல் அறுக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பிள்ளைகள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, தங்குமிடம், புத்தகம், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலை பள்ளி ஆதரவற்ற சிறுவர்கள் விடுதி திறக்க எந்த தடையும் இல்லை. கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பம் பெற வருவோரை போலீஸ் எந்த தடையும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜெயராஜ், 23, எப், ரஹிம் லே-அவுட், பழைய பஸ் நிலையம் பின்புறம், விழுப்புரம் என்ற முகவரியில் பெறலாம்.இது சம்பந்தமான விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443879401, தொலைபேசி 04146 224417 ஆகிய எண்களிலும், இணையதளம் www.amtti.org. www.stjohnsociety.org தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment