FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, May 9, 2020

காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

07.05.2020
விழுப்புரம்; விழுப்புரம், மந்தக்கரை, புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சேர்க்கை நடக்கிறது.தமிழக அரசின் அனுமதி பெற்ற இந்த பள்ளியில், கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஆகிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், விழுப்புரம், மாம்பழபட்டு ரோடு, இந்திரா நகரில் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் நடக்கிறது.இங்கு, நரிக்குறவர்கள் பிள்ளைகள், கல் அறுக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பிள்ளைகள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, தங்குமிடம், புத்தகம், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலை பள்ளி ஆதரவற்ற சிறுவர்கள் விடுதி திறக்க எந்த தடையும் இல்லை. கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பம் பெற வருவோரை போலீஸ் எந்த தடையும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜெயராஜ், 23, எப், ரஹிம் லே-அவுட், பழைய பஸ் நிலையம் பின்புறம், விழுப்புரம் என்ற முகவரியில் பெறலாம்.இது சம்பந்தமான விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443879401, தொலைபேசி 04146 224417 ஆகிய எண்களிலும், இணையதளம் www.amtti.org. www.stjohnsociety.org தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment