FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, May 9, 2020

காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது

07.05.2020
விழுப்புரம்; விழுப்புரம், மந்தக்கரை, புதுத்தெருவில் உள்ள செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சேர்க்கை நடக்கிறது.தமிழக அரசின் அனுமதி பெற்ற இந்த பள்ளியில், கை, கால் ஊனம், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் ஆகிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், விழுப்புரம், மாம்பழபட்டு ரோடு, இந்திரா நகரில் ஆதரவற்ற சிறுவர்கள் காப்பகம் நடக்கிறது.இங்கு, நரிக்குறவர்கள் பிள்ளைகள், கல் அறுக்கும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பிள்ளைகள், தாய், தகப்பனை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருந்தும் படிக்க வைக்க முடியாதோர் பிள்ளைகள் ஆகிய மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.கல்வி, உணவு, தங்குமிடம், புத்தகம், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி, மாற்றுத் திறனாளிகள் நல மேல்நிலை பள்ளி ஆதரவற்ற சிறுவர்கள் விடுதி திறக்க எந்த தடையும் இல்லை. கடந்த ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பம் பெற வருவோரை போலீஸ் எந்த தடையும் இல்லாமல் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜெயராஜ், 23, எப், ரஹிம் லே-அவுட், பழைய பஸ் நிலையம் பின்புறம், விழுப்புரம் என்ற முகவரியில் பெறலாம்.இது சம்பந்தமான விபரங்கள் தேவைப்படுவோர் மொபைல் 9443879401, தொலைபேசி 04146 224417 ஆகிய எண்களிலும், இணையதளம் www.amtti.org. www.stjohnsociety.org தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment