FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 15, 2020

செவிப்புலன் தொடர்பில் பள்ளிகளில் பாலர்களுக்கு கூடுதல் ஆதரவு

 
13.11.2020
முதன்­மு­றை­யாக காது கேளாத பிள்­ளை­க­ளுக்கு கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆத­ரவு வழங்­க­வுள்­ளது.

அடுத்த ஆண்டு முதல் செயல்­ப­டத் தொடங்­கும் இந்­தப் பாலர் பள்­ளி­யில் சைகை மொழி கற்­பிக்­கப்­படும். செவிப்­பு­ல­னில் மித­மான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரை­யி­லான நிலை­யில் உள்ள மாண­வர்­கள் இப்­பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

இளம் வய­தி­லேயே சிங்­கப்­பூர் சைகை மொழி­யில் அடிப்­படை மொழித் தேர்ச்­சி­நி­லையை இவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பது இப்­பு­திய திட்­டத்­தின் இலக்கு.

இந்த ஆத­ரவு கிட்­டு­வ­தால், கேட்­கும் திற­னு­டைய அவர்­க­ளின் நண்­பர்­க­ளைப் போலவே காது கேளாத சிறார்­களும் அதே பாடத்­திட்­டத்­தைக் கற்க முடி­யும்.

இதற்­கா­கவே சைகை மொழி ஆசி­ரி­யர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பேச்சு, மொழி தொடர்­பில் சிகிச்சை அளிக்­கும் நிபு­ணர்­க­ளின் சேவை­யை­யும் பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்­ளும் வசதி உண்டு.

அங் மோ கியோ­வில் உள்ள மேஃபிளவர் தொடக்­கப்­பள்­ளி­யில் இந்­தப் புதிய பாலர் பள்ளி அமை­ய­வுள்­ளது.

ஆண்­டுக்கு 120 பிள்­ளை­கள் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்­ளை­கள் ஒவ்­வொரு நிலை­யி­லும் 2022ஆம் ஆண்டு முதல் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

“இத்­த­கைய ஆத­ர­வால் நம் கல்வி அமைப்­பு­ மு­றை­யின்கீழ் மேலும் சிறந்த வழி­யில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்க முடி­யும்,” என்­றார் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங்.


விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

13.11.2020
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பில் ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மைய முதன்மை செயல் அதிகாரி பானுமதி மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். அதில், 45 சிறப்பு மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினர்.திருக்கோவிலுார் ஹன்னா ஜான் ஊனமுற்றோர் ஆசிரம், விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் உள்ள சிறுவர் மற்றும் முதியவர்கள் உட்பட75 பேருக்கு இனிப்புகள், பட்டாசுகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டன.

ஆசிரம பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மைய உறுப்பினர்கள் ஸ்டாலின், பார்த்தசாரதி, வினோத் உட்பட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.