FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, November 15, 2020

செவிப்புலன் தொடர்பில் பள்ளிகளில் பாலர்களுக்கு கூடுதல் ஆதரவு

 
13.11.2020
முதன்­மு­றை­யாக காது கேளாத பிள்­ளை­க­ளுக்கு கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி ஒன்று கூடுதல் ஆத­ரவு வழங்­க­வுள்­ளது.

அடுத்த ஆண்டு முதல் செயல்­ப­டத் தொடங்­கும் இந்­தப் பாலர் பள்­ளி­யில் சைகை மொழி கற்­பிக்­கப்­படும். செவிப்­பு­ல­னில் மித­மான பாதிப்பு முதல் கடும் பாதிப்பு வரை­யி­லான நிலை­யில் உள்ள மாண­வர்­கள் இப்­பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

இளம் வய­தி­லேயே சிங்­கப்­பூர் சைகை மொழி­யில் அடிப்­படை மொழித் தேர்ச்­சி­நி­லையை இவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பது இப்­பு­திய திட்­டத்­தின் இலக்கு.

இந்த ஆத­ரவு கிட்­டு­வ­தால், கேட்­கும் திற­னு­டைய அவர்­க­ளின் நண்­பர்­க­ளைப் போலவே காது கேளாத சிறார்­களும் அதே பாடத்­திட்­டத்­தைக் கற்க முடி­யும்.

இதற்­கா­கவே சைகை மொழி ஆசி­ரி­யர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் பேச்சு, மொழி தொடர்­பில் சிகிச்சை அளிக்­கும் நிபு­ணர்­க­ளின் சேவை­யை­யும் பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்­ளும் வசதி உண்டு.

அங் மோ கியோ­வில் உள்ள மேஃபிளவர் தொடக்­கப்­பள்­ளி­யில் இந்­தப் புதிய பாலர் பள்ளி அமை­ய­வுள்­ளது.

ஆண்­டுக்கு 120 பிள்­ளை­கள் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர். காது கேளாத ஏழு முதல் 10 பிள்­ளை­கள் ஒவ்­வொரு நிலை­யி­லும் 2022ஆம் ஆண்டு முதல் பள்­ளி­யில் சேர்க்­கப்­ப­டு­வர்.

“இத்­த­கைய ஆத­ர­வால் நம் கல்வி அமைப்­பு­ மு­றை­யின்கீழ் மேலும் சிறந்த வழி­யில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்க முடி­யும்,” என்­றார் கல்வி துணை அமைச்­சர் சுன் சூலிங்.


விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

13.11.2020
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் சார்பில் ஆதரவற்றோர் பள்ளிகள், ஆசிரமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி பள்ளியில் வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பாதுகாப்பு மைய முதன்மை செயல் அதிகாரி பானுமதி மணிகண்டராஜன் முன்னிலை வகித்தார். அதில், 45 சிறப்பு மாணவர்களுக்கு பட்டாசு, இனிப்புகள் வழங்கினர்.திருக்கோவிலுார் ஹன்னா ஜான் ஊனமுற்றோர் ஆசிரம், விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் உள்ள சிறுவர் மற்றும் முதியவர்கள் உட்பட75 பேருக்கு இனிப்புகள், பட்டாசுகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டன.

ஆசிரம பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மைய உறுப்பினர்கள் ஸ்டாலின், பார்த்தசாரதி, வினோத் உட்பட பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.