FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, October 29, 2021

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் காதுகேளாத பேசாத வாலிபர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ராகார நாட்டா மங்கலம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த கோடி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் கொத்தனார் வேலை செய்யும் கூலி தொழிலாளியான இவர் வாய்பேச முடியாது, காது, கேட்காது ஊமையாக உள்ள மணிகண்டன் 3-ம் தேதி இரவு குள்ளம்பட்டி அருகே தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அரசு மதுபான கடையிலிருந்து மதுபாட்டில் வாங்கிகொண்டு அவ்வழியாக குளிப்பட்டி பள்ளக்காடு அருணாசலம், திருமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்டு சாடை செய்த மணிகண்டனை அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது குள்ளம்பட்டி அருகே உள்ள ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், மது அருந்த மரத்துக்கு அடியில் அமர்ந்துள்ளனர். அதற்கு பின்னர் மணிகண்டனை ஓரினசேர்க்கைக்கு இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் மறுத்ததால் மணிகண்டன் மேல் போட்டிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடும் போது மணிகண்டன் ஒத்துழைக்காததால், ஆவேசமடைந்த அருணாச்சலமும், திருமலையும் மதுபாட்டில், கல்லால் குத்தி தலையிலும் வயிற்றிலும் அடித்து நிர்வாண நிலையில் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலமாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் தேடி வரும் திருமலை கடந்த ஆண்டு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment