FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, October 29, 2021

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் காதுகேளாத பேசாத வாலிபர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ராகார நாட்டா மங்கலம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த கோடி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் கொத்தனார் வேலை செய்யும் கூலி தொழிலாளியான இவர் வாய்பேச முடியாது, காது, கேட்காது ஊமையாக உள்ள மணிகண்டன் 3-ம் தேதி இரவு குள்ளம்பட்டி அருகே தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அரசு மதுபான கடையிலிருந்து மதுபாட்டில் வாங்கிகொண்டு அவ்வழியாக குளிப்பட்டி பள்ளக்காடு அருணாசலம், திருமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்டு சாடை செய்த மணிகண்டனை அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது குள்ளம்பட்டி அருகே உள்ள ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், மது அருந்த மரத்துக்கு அடியில் அமர்ந்துள்ளனர். அதற்கு பின்னர் மணிகண்டனை ஓரினசேர்க்கைக்கு இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் மறுத்ததால் மணிகண்டன் மேல் போட்டிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடும் போது மணிகண்டன் ஒத்துழைக்காததால், ஆவேசமடைந்த அருணாச்சலமும், திருமலையும் மதுபாட்டில், கல்லால் குத்தி தலையிலும் வயிற்றிலும் அடித்து நிர்வாண நிலையில் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலமாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் தேடி வரும் திருமலை கடந்த ஆண்டு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment