FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, October 29, 2021

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் காதுகேளாத பேசாத வாலிபர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அக்ராகார நாட்டா மங்கலம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த கோடி மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் கொத்தனார் வேலை செய்யும் கூலி தொழிலாளியான இவர் வாய்பேச முடியாது, காது, கேட்காது ஊமையாக உள்ள மணிகண்டன் 3-ம் தேதி இரவு குள்ளம்பட்டி அருகே தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அரசு மதுபான கடையிலிருந்து மதுபாட்டில் வாங்கிகொண்டு அவ்வழியாக குளிப்பட்டி பள்ளக்காடு அருணாசலம், திருமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்களிடம் லிப்ட் கேட்டு சாடை செய்த மணிகண்டனை அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது குள்ளம்பட்டி அருகே உள்ள ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள், மது அருந்த மரத்துக்கு அடியில் அமர்ந்துள்ளனர். அதற்கு பின்னர் மணிகண்டனை ஓரினசேர்க்கைக்கு இருவரும் அழைத்துள்ளனர். ஆனால் மறுத்ததால் மணிகண்டன் மேல் போட்டிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டு சில்மிஷத்தில் ஈடுபடும் போது மணிகண்டன் ஒத்துழைக்காததால், ஆவேசமடைந்த அருணாச்சலமும், திருமலையும் மதுபாட்டில், கல்லால் குத்தி தலையிலும் வயிற்றிலும் அடித்து நிர்வாண நிலையில் கொலை செய்துள்ளனர்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் மூலமாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை வலைவீசி தேடிவருகின்றனர். போலீஸார் தேடி வரும் திருமலை கடந்த ஆண்டு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment