FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, November 2, 2021

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்.. முதியவருக்கு ஆயுள் தண்டனை.. கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

22.10.2021
கடலூர்: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.ரங்கநாதன்(59),

இவரது வீட்டின் அருகே 47 வயதுடைய காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்தார். பெற்றோர் இறந்து விட்டதால் அந்த பெண் தனது உறவினருடன் வசித்து வந்தார். உறவினர் பெண்ணும், அவரது கணவரும் மாற்றுத்திறனாளி பெண்ணை கவனித்து வந்தன

பாலியல் பலாத்காரம்

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி உறவினர் பெண்ணும், அவரது கணவரும் வேலைக்கு சென்று விட்டதால் மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரங்கநாதன், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஓடி விட்டார். வாய் பேச முடியாத முடியாதவர் என்பதால் மாற்றுத்திறனாளி பெண்ணால் சத்தம் போட முடியவில்லை.

போலீசில் புகார்

உறவினர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது மாற்றுத்திறனாளி பெண் நடந்த சம்பவத்தை உறவினரிடம் தெரிவித்தார். அவரது உறவினர் இது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரங்கநாதனை கைது செய்தனர்.

கைது செய்தனர்

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) மற்றும் 376 (2) (எல்) (மனநிலை அல்லது உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். இயற்கை மரணம் அடையும் வரை ரங்கநாதன் சிறையில் இருக்க அவர் உத்தரவிட்டார்.. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி ரங்கநாதனுக்கு ரூ.30,00 அபராதம் விதித்து உத்தரவிட்டார். குற்றம் நடந்த மாதத்தில் அதே தேதியில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



TNPSC, SSC போட்டி தேர்வுகள்…. அக்டோபர் 20 முதல் இலவச பயிற்சி…. அதிரடி அறிவிப்பு….!!!!


16.10.2021
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனால் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க படாததால் அவர்களது உழைப்பும் முயற்சியும் வீணாகி விடுகின்றது.

மேலும் தற்போது நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் முறையான பயிற்சி இல்லாததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் இந்திய அளவில் 750 வது இடத்தைப் பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வில் தமிழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ பொறியாளர் ஆகிய பணிகளுக்கு 3,261 பணியிடங்களை நிரப்புவதற்காக எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தத் தேர்வுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி முதல் எஸ்எஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று பார்க்கவும் அல்லது 0436-6224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்காக இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் தங்கள் விவரங்களை பதிவு செய்து அதில் பதிவேற்றம் செய்துள்ள பாட குறிப்புகள் மாதிரி வினாக்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-Seithi Solai