FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, November 2, 2022

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நாடகமாடிய 2 திருடர்கள் கைது



01.11.2022 மும்பை, 
வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர் போலீசாரிடம் மாற்றுத்திறனாளியாக நடித்தனர். டாக்டரின் பரிசோதனையில் அவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. 

வீடு புகுந்து திருட்டு 

மும்பை தாதர் அருகே பிரபாதேவியில் நேகா கேலக்சி என்ற கட்டிடத்தில் கடந்த 25-ந்தேதி 2 வாலிபர்கள் நுழைந்தனர். திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடினர். பின்னர் அதேபோல மற்றொரு கட்டிடத்தில் நுழைந்து திருட முயன்றனர். 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதுபற்றி போலீசில் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் 2 பேருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என சைகை மூலம் போலீசாருக்கு தெரிவித்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை நடத்தினர். 

2 பேர் கைது 

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு குறைபாடு எதுவும் இல்லை என தெளிவானது. இதனால் போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கன்னட மொழியில் பதில் தெரிவித்தனர். 

போலீசார் கன்னட மொழி பெயர்ப்பாளர் மூலம் நடத்திய விசாரணையில் சந்து கணேஷ் சென்டு (வயது25), கிரண் முங்கேஷ் குருப்பா (19) என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.