FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, November 2, 2022

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நாடகமாடிய 2 திருடர்கள் கைது



01.11.2022 மும்பை, 
வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர் போலீசாரிடம் மாற்றுத்திறனாளியாக நடித்தனர். டாக்டரின் பரிசோதனையில் அவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. 

வீடு புகுந்து திருட்டு 

மும்பை தாதர் அருகே பிரபாதேவியில் நேகா கேலக்சி என்ற கட்டிடத்தில் கடந்த 25-ந்தேதி 2 வாலிபர்கள் நுழைந்தனர். திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடினர். பின்னர் அதேபோல மற்றொரு கட்டிடத்தில் நுழைந்து திருட முயன்றனர். 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதுபற்றி போலீசில் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் 2 பேருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என சைகை மூலம் போலீசாருக்கு தெரிவித்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை நடத்தினர். 

2 பேர் கைது 

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு குறைபாடு எதுவும் இல்லை என தெளிவானது. இதனால் போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கன்னட மொழியில் பதில் தெரிவித்தனர். 

போலீசார் கன்னட மொழி பெயர்ப்பாளர் மூலம் நடத்திய விசாரணையில் சந்து கணேஷ் சென்டு (வயது25), கிரண் முங்கேஷ் குருப்பா (19) என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.