FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, November 2, 2022

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நாடகமாடிய 2 திருடர்கள் கைது



01.11.2022 மும்பை, 
வீடு புகுந்து திருடிய சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர் போலீசாரிடம் மாற்றுத்திறனாளியாக நடித்தனர். டாக்டரின் பரிசோதனையில் அவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. 

வீடு புகுந்து திருட்டு 

மும்பை தாதர் அருகே பிரபாதேவியில் நேகா கேலக்சி என்ற கட்டிடத்தில் கடந்த 25-ந்தேதி 2 வாலிபர்கள் நுழைந்தனர். திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடினர். பின்னர் அதேபோல மற்றொரு கட்டிடத்தில் நுழைந்து திருட முயன்றனர். 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திருடர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனர்.

இதுபற்றி போலீசில் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் 2 பேருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என சைகை மூலம் போலீசாருக்கு தெரிவித்தனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை நடத்தினர். 

2 பேர் கைது 

இந்த பரிசோதனையில் அவர்களுக்கு குறைபாடு எதுவும் இல்லை என தெளிவானது. இதனால் போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் கன்னட மொழியில் பதில் தெரிவித்தனர். 

போலீசார் கன்னட மொழி பெயர்ப்பாளர் மூலம் நடத்திய விசாரணையில் சந்து கணேஷ் சென்டு (வயது25), கிரண் முங்கேஷ் குருப்பா (19) என்பது தெரியவந்தது. 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றவழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment