FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, September 7, 2025

செப். 9, 16, 23-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை



06.08.2025
தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 9, 16, 23 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பா் 9 ஆம் தேதியும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் 16 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் 23 ஆம் தேதியும் இம்முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.


Saturday, September 6, 2025

Centre explores collaboration between AIISH and AIIMS for speech and hearing disorders


03.09.2025
Mysuru: The Union minister of state for health and family welfare, Anupriya Patel, on Monday announced that the Union govt is exploring collaboration between the AIISH and AIIMS for speech and hearing disorders. She also announced plans to set up additional AIISH-like institutes in the country.

Speaking at the diamond jubilee celebrations of AIISH, she stated that AIISH is the global centre for compassionate care. She assured continued support from the Union govt.

Chief minister Siddaramaiah stated that detecting speech and hearing problems in children even while they are in the womb is indeed a remarkable achievement. He added that it is only through such premier institutions that technologies to identify communication disorders during the foetal stage have become possible. To further expand the institute's clinical and rehabilitation work, the govt has granted 10 acres of land free of cost at Varuna on the outskirts of the city.

Governor Thawar Chand Gehlot said that sign language is an effective medium of communication for people with speech and hearing impairments. He stressed the need for its development at the national and international levels.

"In this era of technological progress, we are faced with new challenges and opportunities. There are new possibilities in fields like artificial intelligence, digital therapy, and tele-audiology. More efforts are required in this direction," the Governor said.


Friday, September 5, 2025

Assam’s Rupa Nirola wins Miss Deaf India 2025 title


Guwahati: Rupa Nirola, a young talent from Suklai in Udalguri district, brought pride to Assam by clinching the Miss Deaf India 2025 crown at the 12th Miss and Mr Deaf India contest held in Punjab from August 30 to September 1.

Daughter of Dharma Nirola and Lata Nirola, Rupa is currently studying at the North East Degree College for the Hearing Impaired at Birubari in Assam’s Guwahati.

The institution operates under the Assam Association of the Deaf, which provides inclusive education and encourages differently-abled students to engage in both cultural and skill-based activities at national and international platforms.

Celebrating her win, the Assam Association of the Deaf expressed pride in Rupa’s accomplishment and reiterated its commitment to creating opportunities that empower differently-abled students to showcase their talents across various domains.

Rupa’s victory stands as a shining example of resilience and determination, inspiring many others to break barriers and follow their dreams.



Cochlear Treatment: அதி நவீன சிகிச்சையில் சாதனை!! நெகிழ வைத்த அரசு மருத்துவரின் அன்பு உள்ளம்...


02.09.2025 
Cochlear Treatment| காக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை மூலம் பலருக்கு கேட்கும் திறனை மீட்டெடுத்த சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை தலைவர்.

காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் 140 பேருக்கு நவீன காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அசத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 140 காது கேளாத, வாய் பேச இயலாத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அதி நவீன சிகிச்சை செய்து மருத்துவத்துறை தலைவர் அசத்தியுள்ளார். யார் அந்த மருத்துவர் ஓய்வு பெறும் நேரத்தில் அவர் செய்த சாதனை என்ன என்பதுகுறித்து பார்க்கலாம்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் நாகசுப்ரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை காது கேட்காத, வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட 140 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அதிநவீன சிகிச்சையான காக்ளியர் இம்ப்ளாண்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கான குறையை சரி செய்துள்ளதுடன் அவர்களுக்கு முழுமையான காது கேட்கும் சக்தி மற்றும் வாய் பேசும் திறனை திரும்ப பெற்று தந்துள்ளார்.


மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி

04.09.2025 
சிவகங்கை:மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த 160 கள பணியாளர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

மாவட்ட அளவில் வீடு தோறும் ஆய்வுக்கு சென்று, அங்கு மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களுக்கு அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, உப கரணங்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் மாற்றுத் திறனாளியாக இருந்து பதிவு செய்யாமல் விட்டு போனவர்கள் குறித்த விபரங்களை கையடக்க கணினியில் சேகரித்து, அவர்களுக்கு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான கருவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட அளவில் 160 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தின் கீழ் வீடு தோறும் சென்று அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

விழாவில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட திட்ட அலுவலர் (மாற்றுத்திறனாளி உரிமை திட்டம்) அழகுமன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


காது கேளாதோருக்கான சிகிச்சை மையம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு



02.09.2025 மைசூரு : ''காது கேளாத, வாய் பேச முடியாத பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தை நிர்வகித்து வரும் மகளிரின் சேவை பாராட்டுக்குரியது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

மைசூரு மானச கங்கோத்ரி கல்வி வளாகம் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையத்தின் வைர விழாவை நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சியில் தொடர்ந்து சேவை செய்து வரும் ஏ.ஐ.ஐ.எஸ்.எச்., மையம், நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. 1965ல் துவக்கப்பட்ட இம்மையம், 60 ஆண்டுகளாக இத்துறையில் சாதனை படைத்து வருகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தை பல ஆண்டுகளாக பெண்களே நிர்வகித்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். இம்மையத்தின் இன்றைய இயக்குநர் புஷ்பலதாவின் சேவை பாராட்டத்தக்கது.

இம்மையம் துவங்க காரணமான அன்றைய மன்னர் ஜெய சாமராஜேந்திர உடையார், நிலம் வழங்கியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று அவரது குடும்பத்தின் வாரிசு யதுவீர் உடையார், விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

புள்ளி விபரங்கள்படி, 2023ல் இந்தியாவில் 6 கோடி பேர் வாய் பேச முடியாமல், காது கேட்காத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தொழில்நுட்ப உலகில் இவர்கள் நவீன கருவிகளை பயன்படுத்தி, தங்களின் பிரச்னையை தீர்க்கலாம்.

காது கேட்கும் கருவிகளை தயாரிப்பதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக செய்கை மொழி தினத்தை ஆண்டுதோறும் செப்., 23ம் தேதி கடைபிடித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.


Sunday, August 31, 2025

Summer Deaflympics 2025 Japan: MP’s Shuttler Gauranshi Sharma To Represent Indian Team


30.08.2025
Hearing-impaired Gauranshi Sharma is only player selected for the Deaflympics in women's singles from state

Bhopal (Madhya Pradesh): A hearing-impaired shuttler player Gauranshi Sharma from Madhya Pradesh will represent the Indian team in the 25th Summer Deaflympics to be held in Tokyo, Japan in November.

Gauranshi performed brilliantly in the national selection trials held recently at Gujarat Sports Authority Khokhara, Ahmedabad, due to which she has been selected for the Deaflympics. Gauranshi is the only player who has been selected for the Deaflympics in women's singles from the state.

Gauranshi has so far brought pride to India by winning a total of 6 medals including 2 gold, 1 silver and 3 bronze in international contests. She has won a total of 13 medals for Madhya Pradesh including 2 gold, 6 silver and 5 bronze in national competitions.

She also brought laurels to the country by winning team gold at the 24th Summer Deaflympics 2022 (Brazil). Apart from this, she won team gold at the 6th World Badminton Championship 2023 (Brazil) and team silver at the 10th Asia Pacific Deaf Games, 2024 (Malaysia).



Wednesday, August 27, 2025

வாய் பேசாத நாடோடி கொலை பெண், மூன்று பேர் கைது

21.08.2025 
கிரேட்டர் கைலாஷ்: வாய் பேச முடியாத நாடோடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நால்வரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13ம் தேதி அதிகாலை, தென்கிழக்கு டில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் நாடோடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் இஸ்கான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த நாடோடி குங்கா என்பதும் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.

ராஜா திர் மார்க் பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

சம்பவம் நடந்த, 13ம் தேதி அதிகாலை 12:40 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி பூங்காவுக்குள் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாடோடி கொலை வழக்கில் துப்பு துலங்கியது.

சம்பவ தினத்தன்று அந்த கும்பலை குங்கா பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூவரும், குங்காவிடம் விசாரித்துள்ளனர். அவர் பதில் கூறாததால், ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ஸ்ரீனிவாஸ்புரியில் வசிக்கும் ரஹானா, 44, என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


உ.பி.யில் அவலம்: கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் தற்கொலை



21.08.2025 
காசியாபாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் மாவட்டத்தில் 23 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 18-ந்தேதி கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது.

இதில் பலத்த பாதிப்படைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை நிறைவடைந்து அவர் நேற்றிரவு ஊருக்கு திரும்பினார்.

அப்போது அவர், லோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில், வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இதுபற்றி டி.சி.பி. சுரேந்திர நாத் திவாரி கூறும்போது. கம்பளி விற்கும் நபரின் மகளான அவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தை புகார் தெரிவித்து உள்ளார். இதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சம்பவம் தொடர்ச்சியாக ரோகித் (வயது 23) மற்றும் போலா (வயது 45) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய 3-வது குற்றவாளியை பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லோனி காவல் நிலையத்திற்கு முன்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் பல்வேறு ஆர்வலர்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதியளித்தனர்.

கடந்த 14-ந்தேதி உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், மாமா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார்.

அப்போது, இரவில் அவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது. அதற்கடுத்த 4 நாட்களில் நடந்த இந்த சம்பவத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.