FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, January 20, 2026

பேச முடியாத மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு


20.01.2026
கோவை: கோவையில் பேச முடியாத மாற்றுத் திறனாளி நள்ளிரவில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையம் கணபதியப்பன் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (49). இவரது மனைவி சுமதி. இவா்கள் இருவரும் காது மற்றும் வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இந்தத் தம்பதி வேலை பாா்த்து வந்தனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த ரங்கநாதன் அந்தப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.



மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் இருக்கை ஒதுக்கீடு குறித்து ஆய்வு: ஐகோர்ட் உத்தரவு


19.01.2026
சென்னை: மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு, முறையாக அமல்படுத்தப்படுகிறதா என திடீர் சோதனைகள் நடத்த, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் தரப்பில், ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகளின் அருகில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் எவரும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வந்தால் எழுந்து இடம் வழங்குவதில்லை. அதனால், பெண்களுக்கு என தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி பெட்டி ஒதுக்கீடு செய்வது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதனால், மனுதாரரின் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அவ்வப்போதைக்கு திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் எனவும், இருக்கைகள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாட்களில் வகுக்க வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு விட்டுத்தர மறுக்கும்பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7% இடஒதுக்கீடு கோரி மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு




19.01.2026
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கே.மணிவண்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கியும் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினேன். அதற்கு தோ்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தொகுதி மறுவரையறை சட்டத்தில் வழிவகை இல்லை என பதிலளித்துள்ளது. எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.


Saturday, January 17, 2026

பணி நிரந்தரம் செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்



16.01.2026 
சென்னை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலீல் முகைதீன் தலைமை வகித்தார். போராட்டத்தில், குடும்பத்துடன் பங்கேற்ற மாற்றத்திறனாளிகள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டம் குறித்து, ஜலீன் முகைதீன் கூறியதாவது:

அரசு துறையில் தற் காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை, பணி நிரந்தரம் செய்யும் வகையில், கடந்த 2008ல் அரசாணை எண் 151ஐ அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, அரசு துறையில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய முறையில், இரண்டு ஆண்டுகள் பணி செய்த, 1,077 பேர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆனால், பணி நிரந்தரம் செய்யவில்லை.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த நவம்பரில், அரசு துறைக ளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டி தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கும் வகையில், அரசாணை 24ஐ வெளியிட்டு, அதிகாரி கள் பழைய அரசாணை 151ஐ ரத்து செய்துள்ளனர்.

இதனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் வேண்டி காத்திருக்கும் நாங்கள், மி குந்த மன வேதனையில் உள்ளோம்.

எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த அரசாணை 151ஐ மீண்டும் செயல்படுத்தி, அதன்படி நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இதை அதிகாரிகள் செயல்படுத்தும் வரை, காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


மாற்றுதிறனாளிகள் இலவச பஸ் பாஸ் வேண்டுமா? சிறப்பு முகாம்கள் தொடக்கம்...விண்ணப்பிப்பது எப்படி?


தமிழ்நாடு முழுவதும் மாற்றுதிறனாளிகள் இலவச பஸ்பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

16.01.2026 
வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற 31.01.2026 வரை சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற ஏதுவாக, சிறப்பு முகாம் மூலம் ஆன்லைனில் பஸ் பாஸ் விண்ணப்பித்து பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 31-ம்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் (அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து) சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நடக்கிறது. இந்த கார்டை பெற இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள (பின்புறம் இ-சேவை அருகில்) வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தென் சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலை நாட்களில் மட்டும் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தென்சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள், தகுதிகள் :

இதனை விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, யுடிஐடிஅட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மருத்துவ சான்று, கல்வி பயில்வதற்கான சான்று, பணியிடச் சான்று ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.

தனியார் நிறுவனப் பணியாளர்கள், மாணவர்கள், சிறப்புப் பள்ளி மாணவர்கள், பயண வரம்புகள் மற்றும் பிரிவுகள், பார்வைக் குறைபாடுடையோர், கை, கால் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதவர்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி எடுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.



அரசு மருத்துவமனை இ.என்.டி, பிரிவில் காது கேட்கும் கருவி வழங்கல்



16.01.2026 
புதுச்சேரி: மத்திய அரசின் ராஷ்டிரிய வயோ யோஜனா திட்டத்தின் சார்பில், 43 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவு ஏற்பாட்டின் மூலம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய வயோ யோஜனா மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகள் 43 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்வு அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி அரசின் சுகாதார துறை கீழ் இயங்கும், தேசிய சுகாதார இயக்கம் காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 150 பயனாளிகளுக்கு அதிநவீன காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிகப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் காது கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என, புதுச்சேரி மாநில திட்ட அலுவலர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம், செயற்கை உறுப்பு மற்றும் எலும்பு மூட்டு ஆதரவு சாதனங்கள் தென்னிந்திய அலுவலர் கிரிதரி நாயக் குழுவினர் மூலம் உபகரணங்கள் பொருத்தப்பட்டது.



வாய் பேசாத, காது கேட்காத ஊழியர் மீது ரசாயன நீரைத் தெளித்ததாக மேற்பார்வையாளர் மீது குற்றச்சாட்டு



சிங்கப்பூர்:
துப்புரவு ஊழியர் ஒருவர் மீது ரசாயனம் கலந்த நீரைத் தெளித்ததாக அவரது மேற்பார்வையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
சம்பவத்தால் அந்த ஊழியரின் பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏற்கனவே அவருக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது.

மேற்பார்வையாளரான 36 வயது பிரியா ராமசந்திரன் மீது வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி Dulwich College வளாகத்தில் நடந்ததாகக் கூறப்பட்டது.

மின்தூக்கியில் பிரியா அந்தப் பெண் மீது ரசாயன நீரைத் தெளித்ததாக இன்னோர் ஊழியர் நீதிமன்றத்தில் கூறினார்.

அன்றைய தினம் இருவருக்கும் இடையில் சண்டை எதுவும் நடந்ததா என்பது தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வேறு இரு தருணங்களில் பிரியா பாதிக்கப்பட்டவரின் தோளையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்துக் காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை, அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



சைகை மொழி பதிவில் குறைபாடு: மாற்றுத் திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

Chennai High Court: பாதிக்கப்பட்ட பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Photograph: (AI Generated Image)

14.01.2026
Deaf mute survivor case: 2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம். நிர்மல் குமார் விசாரித்தார்.

Chennai High Court Latest Judgment: காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் 'ஏமாற்றுதல்' என்று மாற்றியமைத்தது. பெண்ணின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த மொழிபெயர்ப்பாளர், அவர் செய்த குறிப்பிட்ட சைகைகள் மற்றும் அடையாளங்களை விவரிக்கத் தவறியதுடன், மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்து வைப்பது உள்ளிட்ட கட்டாய நடைமுறைப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனித்தது.

2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார். அவர் பாலியல் வன்கொடுமை குற்றத்தை 'ஏமாற்றுதல்' என்ற குற்றமாக மாற்றியதோடு தண்டனையையும் குறைத்தார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் எதிலும், அவர் செய்த சைகைகள் மற்றும் அடையாளங்கள் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இது ஒரு முக்கியமான காரணியாகும்” என்று ஜனவரி 12-ம் தேதியிட்ட உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு எத்தகைய தண்டனையும் வழங்க முடியாது என்றும் சேர்த்துக் கூறியது.

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. Photograph: (AI Generated Image)

கண்டறிதல்கள்(Findings)

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல.

மேல்முறையீட்டாளருக்கு பாலியல் வன்கொடுமைக்காக விதிக்கப்பட்ட தண்டனை 'ஏமாற்றுதல்' என மாற்றப்பட்டு, தண்டனையானது அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், அந்தப் பெண்ணிற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை.

இந்த வழக்கில், நிகழ்வுகளின் சங்கிலித்தொடர் முழுமையாகவும் சீராகவும் இல்லை.

சூழல்களை வைத்துப் பார்க்கும்போது, அங்கு எந்தப் பலப்பிரயோகமும் (பலாத்காரம்) நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது குறித்த ஆலோசனையை மேல்முறையீட்டாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஏதோ ஒரு தொடர்பு அல்லது அடிப்படை இல்லாமல் ஒரு நாளில் நடந்த விஷயமாக இருக்க முடியாது.

புகார் மனுவை எழுதிய நபர் விசாரிக்கப்படவில்லை.

தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாய் பேச முடியாத சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கையாளும் போது, சாட்சியச் சட்டத்தின் பிரிவு 119-ஐப் பின்பற்றுவது விருப்பத்திற்குரியது அல்ல, அது கட்டாயமானது.

மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் பயன்படுத்தப்படும்போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 119-ன் விதிமுறை வலியுறுத்துகிறது.

இந்த வழக்கில், வீடியோ பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

எனவே, வாய் பேச இயலாத நபரின் சாட்சியத்தைக் கருத்தில் கொள்வதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னதாகப் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் இங்கு பின்பற்றப்படவில்லை.

இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கும், சட்டப்படி வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சம்பவம் நவம்பர் 18, 2015-ல் நடந்ததா அல்லது நவம்பர் 27, 2015-ல் நடந்ததா என்ற முரண்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இது வழக்கின் ஆரம்பத்தையே சந்தேகத்திற்குரியதாக மாற்றுகிறது.

திருமணம் குறித்த ஆலோசனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட சுற்றியுள்ள சூழல்கள், பலப்பிரயோகம் செய்யப்பட்டதற்கான காரணி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது.

குற்றச்சாட்டுகள்

நவம்பர் 18, 2015-ல், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிறகு, நவம்பர் 28, 2015-ல் தான் இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஆரம்பத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) கீழ் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு டிசம்பர் 11, 2018-ல் விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

வாதங்கள்

எதிர்தரப்பு


மேல்முறையீட்டாளருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. சீனிவாசன், அரசுத் தரப்பு வழக்கு முழுவதும் அந்தப் பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே நம்பியுள்ளது என்றும், வாய் பேச முடியாதவர்களின் சாட்சியங்களைக் கையாளும் இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119-ல் ஏற்பட்டுள்ள பெரும் விதிமீறல்களால் இது சட்டப்படி நம்பகத்தன்மையற்றது என்றும் வாதிட்டார்.

இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119, "வாய் பேச இயலாதவர்களின் சாட்சிகள்" (dumb witness) அளிக்கும் சாட்சியங்களைக் கையாள்கிறது.

இது போன்ற சாட்சிகள் திறந்த நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ சாட்சியம் அளிக்க அனுமதிக்கிறது. இது வாய்மொழிச் சாட்சியமாகவே கருதப்படும். பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நீதிமன்றங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தும்.

போலீஸ் விசாரணை, பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் விசாரணையின் போது எனப் பல கட்டங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவர்களில் யாருக்கும் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், அந்த வாக்குமூலங்கள் வீடியோ பதிவு செய்யப்படவில்லை, பாதிக்கப்பட்ட பெண் பயன்படுத்திய சைகைகள் மற்றும் அடையாளங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை.

சம்பவம் நடந்த தேதி குறித்து அரசுத் தரப்பு வழக்கில் உள்ள முரண்பாடுகளையும் எதிர்தரப்பு சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு தெளிவான தேதியைக் குறிப்பிடவில்லை என்றும், அவரது தாய் அந்தத் தகவல் நவம்பர் 18 அல்லது நவம்பர் 27 அன்று தெரியவந்ததாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளார் என்றும் வாதிடப்பட்டது.

கூடுதலாக, ரத்தக்கசிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மருத்துவ அறிக்கையில் அத்தகைய காயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு

கூடுதல் அரசுத் தரப்பு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம், பெண்ணின் சாட்சியம் நிலையானதாக இருப்பதாகவும், உடலுறவு நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் அதை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார்.

புகார் அளிக்க ஏற்பட்ட தாமதம் இயற்கையானது என்றும், தாய் ஊரில் இல்லாததால் அது சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

மேலும், சாட்சியச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்தது என்றும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட எளிய நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிறு நடைமுறைத் தவறுகள் நீதியைத் தடுத்துவிடக் கூடாது என்றும் சமர்ப்பிக்கப்பட்டது.


Friday, January 16, 2026

செவித்திறன் குறைபாடு உடையோர் பள்ளியில் விளையாட்டு பூங்கா திறப்பு



13.01.2026
சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்-பட்ட விளையாட்டு பூங்காவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: இப்பள்ளி, விடுதி கட்டடங்-களை, 2024 ஜன., 18ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6.70 கோடி ரூபாய் மதிப்பில், 100 மாணவ, மாண-வியர் தங்கி படிக்கும்படி, பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது. இங்கு குமரன் அப்புசாமி நினைவு விளை-யாட்டு பூங்கா, தற்போது திறக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் விளையாடும்படி, பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு, செஸ், கேரம் போர்டு, டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்-சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.