FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Wednesday, June 4, 2025

மாநில அரசு விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு



31.05.2025
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிப்பார். கீழ்காணும் விருதுகள் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழா அன்று வழங்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர், கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதளிக்கப்படும். இந்த விருது பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.6.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.6.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


“காது கேட்காத வாய் பேச தெரியாத 22 வயது பெண்ணை வீடு புகுந்து”… தோளில் சுமந்து கடத்தி சென்ற நபர்.. சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்…!!!


04.06.2025
டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார்.

அந்த பெண்ணிடம் பேசவும், கேட்கவும் முடியாத நிலை இருந்ததாக போலீசார் பதிவு செய்தனர். அந்த பெண் கடத்தப்பட்ட அதே நாளில், அதே தெருவில் ஒரு காலியான சேரியில் அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பின், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ராஜ்பால் என்பவர் அந்த பெண்ணின் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில், தனது தோளில் தூக்கிச் செல்வது போல் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை குழு அமைத்து, குற்றவாளியை வலைவீசி தேடினர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த என்கவுண்டரில், ராஜ்பால் தப்பிக்க முயன்ற போலீசாரை நோக்கி இரு சுற்றுப் பயணம் துப்பாக்கியால் சுட்டார். இதனால் தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதில் அவரது வலது கால் காயம் அடைந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முதற்கட்ட தகவல்கள், கழுத்தை நெரித்ததால் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

போலீசார் கொலை மற்றும் கடத்தல் வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜ்பாலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் குற்றம் நடந்தபோது அவர் அணிந்திருந்த உடைகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன செய்யப்பட்டன செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆகஸ்ட் இறுதி வரை மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி




03.06.2025
மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி, சமூக மறுவாழ்வு பணியாளா்கள் மற்றும் சமூக வழி நடத்துநா் மூலம் ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகளை கணக்கெடுக்க வருபவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை இல்லாதவா்கள் என அனைவரும் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 94999 33471, 86674 80186 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, June 3, 2025

ஹேப்பி நியூஸ்! மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவு




31.05.2025
1. மூத்த குடிமக்கள்


மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்த பாஜ அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த விவரங்களை முழுமையாக பார்ப்போம்.

2. மூத்த குடிமக்களுக்கும் மாதம் ஓய்வூதியம்

டெல்லியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளி அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 4.6 லட்சம் மூத்த குடிமக்கள் இந்த மாதந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். அதேபோல சுமார் 1.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

3. ஓய்வூதியத் தொகையை உயர்த்துவோம் -பாஜ வாக்குறுதி

டெல்லியில் பிப்ரவரியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, ​​'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத்தை உயர்த்துவோம்' என பாஜ வாக்குறுதி அளித்தது. அதன்படி தற்போது, ​​மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தப்பட்ட பாஜ அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது.

4. ஓய்வூதியத் தொகை எப்பொழுது உயரும்?

இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர், "டெல்லி அரசின் சமூக நலத்துறை ஏற்கனவே அதற்கான திட்டத்தை தயாரித்து நிதித்துறைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்தது, இந்த திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்த ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும்."

5. ஓய்வூதிய பயனாளிகள் குறித்து ஆய்வுக்கு

முன்பாக, தகுதியற்றவர்கள் சலுகைகளைப் பெறுவதைத் தடுக்க, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் அனைத்து பயனாளிகளையும் சரிபார்க்கும் பணி விரைவில் தொடங்கும்.

6. பெண்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

குடும்ப தகராறு, நிதி மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலனை வருகிறது அதிகாரிகள்.

7. யார், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கிறது?

தற்போது 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2,000-ம், 70 வயதுக்கு மேல் முதியவர்களுக்கு மாதம் ரூ.2,500-ம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதே போல மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

8. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால் யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

டெல்லி அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, 60-69 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும் ஓய்வூதியம் ரூ.3,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதே போல மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயரும்.

9. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

முதியோர் ஓய்வூதியம் பெற, ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக டெல்லியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

10. குடும்ப வருமானம்

ஓய்வூதியம் பெற குடும்ப வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

11. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன? 40% மற்றும் அதற்கு மேற்பட்ட ஊனமுற்றோர், குறைந்தது 5 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருபவர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த பிரிவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது வரம்பு இல்லை.




திமுகவில் மாற்றுத்திறனாளிகள், கல்வியாளர்கள் அணி உருவாக்கம்!


03.06.2025
திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 3,400 பேர் உள்ளிட்ட 6,000 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், என்.சங்கரையா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

இந்த பொதுக்குழுவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே உள்ள அணிகளுடன் புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி உருவாக்க இருப்பதாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று (மே 31) செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி என இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளி, நலிவடைந்த பிரிவினர் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு


03.06.2025
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வண்ணம் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்புகள் குறித்து ஓர் ஆய்வு.

1995-ஆம் ஆண்டு நம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வண்ணம் மத்திய அளவில் நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 1990-களின் முற்பகுதியில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக பணியாற்றினார். அது உலகமயமாக்கலின் பொற்காலம். மனித உரிமைகளுக்கும் அது பொற்காலம் என்றே கருதப்பட வேண்டும்.

காரணம், இன்றைக்கு மனித உரிமைகள் என்று நாம் சொல்லக் கூடிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்எச்ஆர்சி) நிறுவுவதற்கான மனித உரிமைகள் சட்டம், 1993-லும், அதேபோல், மகளிர் ஆணையச் சட்டம் (1990), சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம்(1992), துப்புரவு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கையால் துப்புரவு செய்பவர்களை பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் (தடை) சட்டம் (1993) இயற்றப்பட்டன.

அந்த வகையில்தான் கடைசியாக 1995-ல் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாகும். உபாதயா என்கிற ஒரு மாற்றுத்திறனாளி தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, ஒரு உத்தரவை 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மேற்சொன்ன இந்த சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் மத்திய, மாநில அரசுகள் அதனை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பாக இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தாமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ‘‘பின்தேதியிட்டு, கணக்கிட்டு அந்த இட ஒதுக்கீட்டினை அனைத்து மத்திய, மாநில அரசுகள், அரசு சார் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் என்று பல நிறுவனங்கள் இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த தவறும்போது அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும், செயல்படுத்துவதற்கு தடையாக இருக்கின்ற துறை தலைவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதன் பிறகே பல ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டனர் என்பது இங்கே பாராட்டுதலுக்கு உரிய அம்சமாகும். அதனை தொடர்ந்து தேசிய பார்வையற்றோர் சமேளனம் தொடுத்த ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட ஒரு அரசியலமைப்பு தீர்ப்பாயம்/ அமர்வானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

அது மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது அடிப்படை நியமனத்துக்கு மட்டும் பொருந்தாது, அது பதவி உயர்வுக்கும் பொருந்தும் என தீர்ப்பினை அளித்தது. அந்த வரிசையில் விக்காஷ் குமார், ராசுவ் ராத்திரி மாற்றுத்திறனாளிகள் நலக் குழு போன்ற வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வரிசையில் சமீபத்தில் 2 அதிமுக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பினை வழங்கியது ஒரே அமர்வாகும். நமது தமிழ்நாட்டை சார்ந்த நீதிபதி மகாதேவன், ஜே.டி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுதான் இந்த தீர்ப்பினை வழங்கியது.

ஒன்று இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றால் இவர்கள் மூன்று துறைகளிலும் பங்கு பெற வேண்டும், அதாவது, சட்டம் இயற்றுதல். செயல்படுத்துதல், நீதித் துறை ஆகிய‌ அரசின் மூன்று முக்கியமான உறுப்புகளில் பங்கு பெற வேண்டும். அதில் நீதித்துறை நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் தடையினை அறவே தகர்த்தெறிந்தது இந்த அமர்வினுடைய தீர்ப்பாகும். அதாவது மத்திய பிரதேசத்தினுடைய நீதிமன்ற நியமன விதிகளில் 6எ என்ற விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது என்றும், அதனை செல்லாது என்றும் அறிவித்து, அதனை நீக்கவும் செய்தது.

அது மாத்திரமல்ல, அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய நீதித்துறை நியமன விதிகளில் தக்க மாற்றத்தினை ஏற்படுத்த விரைவில் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும், நீதித்துறையில் பணியாற்றுகின்ற வாய்ப்பினை வழங்க வேண்டும். குறிப்பாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அந்த வரிசையில் சமீபத்திய ஒரு தீர்ப்பு அதாவது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வழங்கப்பட்டது. இதே அமர்வுதான் அந்த தீர்ப்பையும் வழங்கியது. இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், அமில வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமையாக பார்வை இழந்தவர்கள், அது மாத்திரமல்ல, நலிவடைந்த பிரிவினர், கிராமத்தில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று இந்த தீர்ப்பினால் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்றைய நாட்களில் எதற்கெடுத்தாலும் கே.ஒய்.சி (KYC) என்பது மிக சாதாரணமாகிவிட்டது. கே.ஒய்.சி என்றால் என்ன? உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், Know Your Customer என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒரு புதிய சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலும், இந்த செயலினை எல்லோரும் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதில் இவர்களுக்கு எந்த விதிவிலக்கும் அளிக்கப்படுவது இல்லை. குறிப்பாக அமில வீச்சு தாக்குதலுக்கு உட்பட்டவர்களுக்கும், முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கும், இந்த KYC-யில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் இருந்து வருகின்றன.

அவற்றை களையும் வண்ணமாக இந்த தீர்ப்பானது அமைகின்றது. அதாவது, Life Photograph என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது, உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு புகைப்படத்தை, எடுக்க வேண்டும். அதாவது, விழி அசைவுகள், முகத்தினை ஒரு குறிப்பிட்ட பாவனையில் வைத்திருத்தல், திரையில் கையெழுத்து இடுதல், திரையில் தோன்றும் குறுஞ்செய்திக்கு 30 வினாடிகளுக்குள் பதில் அளித்தல் போன்றவை ஆகும்.

இவற்றை எல்லாம் பார்வையற்றவர்களாலும் அல்லது அமில வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாலும் செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இதற்கு தக்க மாற்றங்களைச் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் இந்த விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது மாற்றுத்திறனாளிகளுக்குகான நலச்சட்டம் என்பது ஒரு சாதாரண சட்டமல்ல.

அது அரசியலமைப்புக்கு ஒப்பான ஒரு சட்டமாகும் என்கிற அதிமுக்கிய தீர்ப்பினை நீதிபதி வழங்கியிருக்கிறார். ஆகையினால், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்கு சொல்லப்பட்டுள்ள எல்லாமே இனி அடிப்படை உரிமைக்கு சமமாக கருதப்படும் என்கிற ஒரு முக்கியமான அம்சத்தையும் நீதிபதி இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது நாம் வாழும் காலமும், வரும் காலமும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் என்று கருதப்படும் AI-ஆல் நிர்மாணிக்கப்பட்ட இருக்கிறது. இதில் எல்லாமே தானியங்கி அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். ஆகையால் பல தவறுகள் நிகழக்கூடும் என்பதை அறிந்த இந்த நீதிமன்ற அமர்வானது மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

அதாவது Human Reviewers, மனிதனை கொண்டு சீர் ஆய்வு செய்கின்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு நபரினுடைய வழக்கினை அடிப்படையாகக் கொண்டு அவர் அவருக்கு என்று பிரத்தியேகமாக இந்த சீராய்வு அமைய வேண்டும். தானியங்கி அடிப்படையில் செயல்பட கூடிய தவறுகளை களையும் வண்ணம் அந்த மனித அலுவலர் செயல்பட வேண்டும். பிரத்தியேகமாக ஒரு சேவை அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்‌. ஒரு சேவை அமைப்பு (Help Line) உருவாக்கப்பட வேண்டும். அது மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வண்ணம் பணியாற்றுகின்ற வகையிலே இருக்க வேண்டும். இந்த தீர்ப்பு குறித்து அனைவருக்கும் எடுத்து இயம்புதல் வேண்டும். அதாவது, விளம்பரம் செய்தல் வேண்டும்.

அவர்கள் உரிமையினை பாதுகாக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை இந்த தீர்ப்பில் நீதிபதி வழங்கி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக Digital Divide என்று சொல்கிறார்கள், அதாவது, இணைய வழி சேவையினை பெறுபவர்கள், பெறாதவர்கள் என்கிற ஏற்றத்தாழ்வு இனிமேல் கொள்கை முழக்கமாக மட்டுமே இருக்கக்கூடாது, அவற்றினை சரி செய்யக்கூடிய அரசியலமைப்பு சாசனக் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்த சேவையினை தடையின்றி பெறக்கூடிய உரிமை அனைத்து குடிமக்களுக்கும் இருக்கிறது.

இந்த உரிமை அனைவரையும் உள்ளடக்கிய உரிமையாக இருக்க வேண்டும். Inclusive Digital Eco system என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ஷரத்து 21-ல் உயிர் வாழ்வதற்கான ஓர் இன்றியமையாத அங்கமாகும் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிபதி வழங்கி இருந்தார். இந்த தீர்ப்பானது மிக சாதகமான தாக்கத்தினை மாற்றுத்திறனாளிகள், அமில வீச்சு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள்! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்


03.06.2025
சென்னை: நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த 2 சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்த போகிறோம். இந்த துறைக்கென நிதி ஒதுக்கீடு ரூ 667 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ 1,432 கோடியாக உயருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிக்க, குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு மாதம் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் சூட்டும் வகையில் சட்டமசோதா நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இரு சட்ட மசோதாக்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துவிட்டார்.

தற்போது உள்ளாட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.


Sunday, June 1, 2025

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு




28.05.2025 
புதுச்சேரி:தென் மாவட்ட அளவிலான காது கேளாதோர் கைப்பந்து, கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், 5வது தென் மாவட்ட அளவிலான காது கேளாதோர் ஆண்கள் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாதோர் அணிகள் பங்கேற்றன.கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விழுப்புரம் அணி முதலிடம், கடலூர் அணி இரண்டாமிடம் பெற்றன.

கூடைப்பந்து போட்டியில் நெய்வேலி அணி முதலிடம், விழுப்புரம் அணி இரண்டாமிடம், புதுச்சேரி அணி மூன்றாம் இடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் செயலாளர் பாசித், தலைவர் அய்யப்பன், அமைப்பு செயலாளர் சத்தியபுவனம் ஆகியோர் தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் சுந்தரேசன், விளையாட்டுத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர் அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினர்.

விழாவில், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் அகரம் தலைவர் சதீஷ்பாபு, ஜிஞ்சர் ஹோட்டலின் மேலாளர் ராஜேஷ், சட்ட ஆலோசகர் சரவணன், பொருளாளர் அஜித்குமார், கோபு, ஹபிலா சைகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வென்றவர்கள், வரும் ஜூலை மாதம் திருப்பதியில் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின


Woman kills husband for raping deaf-mute daughter in Rajkot

01.06.2025
RAJKOT: Police have filed a complaint of murder against a 45-year-old woman for killing her 56-year-old husband, ostensibly because he had raped her daughter, who is hearing- and speech-impaired.

The daughter, who is 24 years old, was from a previous marriage. The 45-year-old woman had married the victim about 15 years ago.

According to the FIR filed by the victim's brother at Morbi Taluka police station, police called him to the hospital on Thursday night, where he met his sister-in-law.

She told him that she had returned home from work that evening and saw blood inside their room, with the victim's clothes lying around and her daughter nowhere to be found.

She suspected sexual assault, as her husband had molested her daughter earlier. She flew into a rage, pushed her husband to the ground and kept kicking him in the chest till he lost consciousness.

She then went looking for her daughter. A Gram Rakshak Dal (GRD) jawan she met helped in her search. She finally found her daughter cowering under a tractor trolley in the factory compound, terrified and covered in blood. Her daughter told her in sign language that the deceased had raped her at knifepoint.

The GRD jawan then called the police. Police arrived and found that the man had died. They sent the body for a postmortem and took the 24-year-old woman for a medical examination.

SK Charol, inspector of Morbi Taluka police station, said, "We are yet to arrest the accused. We are gathering evidence and medical reports and have started the investigation." The 46-year-old woman has been booked under Bharatiya Nyaya Sanhita Section 103(1) for murder.