FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, October 29, 2025

வாய் பேசமுடியாத காது கேளாத ரசிகரிடம் அஜித் செய்த செயல்



28.10.2025
நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். திரைத்துறையை பொறுத்தவரை குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித் சமீபத்தில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் கேரளா, பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அஜித், பகவதி அம்மனை டாட்டூவாக நெஞ்சில் போட்டிருந்தர். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தல தல... என கூச்சலிட்டனர். அவர்களை சைகை மூலம் இது கோயில்.. அமைதியாக இருங்கள் என அமைதியாக்கினார். பின்பு அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க செல்போனை அஜித் முகம் முன்பு நீட்ட அவரை பார்த்த அஜித் அவரிடம் ஏதோ கேட்க அதற்கு அந்த ரசிகர் தன்னால் வாய் பேசவும் காது கேளவும் இயலாது என சொன்னதும் அவரின் போனை வாங்கிய அஜித் அவருடன் செல்ஃபி எடுத்து கொடுத்தார். இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.




Friday, October 24, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியம் இம்பிளாண்ட் சிகிச்சை



20.10.2025 
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளாண்ட அறுவை சிகிச்சை மூலமாக காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவா் கீதாஞ்சலி கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் பிறவியிலேயே காது கேட்காத 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பிறவி காதுகேளாத குழந்தைகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவி பொருத்தக் கூடிய காக்ளியா் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தத் துறை தொடங்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சுமாா் 12 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதுகேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நிகழாண்டில் 22 குழந்தைகளுக்கு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், செவிவழி பேச்சுப் பயிற்சி மற்றும் தொடா் சிகிச்சைகள் முலமாக குணப்படுத்த முடியும் என்றாா்.


Missing Deaf-Mute Hindu Minor Girl Surfaces In Pak, Married To Older Man


20.10.2025
The girl from Korwah town in Badin district had gone missing around nine days ago. Her parents had lodged an abduction complaint with the local police

A 15-year-old Hindu girl, born deaf and mute, who was missing for over a week, has surfaced before the media in Pakistan's Sindh province, holding a certificate of conversion to Islam after allegedly marrying a much older Muslim man.

The girl from Korwah town in Badin district had gone missing around nine days ago. Her parents had lodged an abduction complaint with the local police.

On Saturday, she appeared before the media at Badin Press Club alongside her alleged husband, where photographs of her holding the conversion certificate were taken.

Her father questioned how a deaf and mute minor could have agreed to marry a man who is a drug dealer and already has seven daughters.

Shiva Kachhi, who heads the Darawar Ittehad Pakistan, an organisation working for the welfare and rights of Hindus and minorities, said the girl had been abducted, but the police failed to take any action despite the family's complaint.

"We have spoken to our lawyers to pursue the case as we don't believe the girl could have done this willingly," Kachhi said, adding that he had also written to senior police officials demanding an independent inquiry into the incident.



Friday, October 17, 2025

அரசு பணிகளில் ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கு வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்



16.10.2025 
மதுரை: மதுரையில் வெண்கோல் (ஊன்றுகோல்) தினத்தையொட்டி பார்வை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில உதவித்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட தலைவர் மதிபாரதி, துணைச்செயலாளர் குமரவேல் ஆகியோர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர்.

அதில் தெரிவித்திருப்பதாவது: நுாறு சதவீதம் பார்வை திறனற்றோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மொத்த அரசு பணியிடங்களில் ஒரு சதவீதம் பார்வையற்றோர் இருக்கும் வகையில் வங்கி, கல்வி பணிகளில் கூடுதலாக இடம் ஒதுக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில அரசு அறிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிரப்பப்படாத பின்னடைவு பணிகளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதோடு லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும். பஸ்களில் பஸ்ஸ்டாப் குறித்து ஒலிக்க செய்ய வேண்டும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் ஒலிஅறிவிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.


58-year-old sentenced to life for raping hearing and speech impaired girl in India’s Odisha

15.10.2025
On 29 July 2022, the accused trespassed into the victim’s house and committed rape in the absence of her parents. The victim’s younger sister was a witness to the crime.


BHUBANESHWAR – A court in Odisha’s Bargarh district on Tuesday convicted a 58-year-old man and sentenced him to undergo life imprisonment after finding him guilty of committing rape of an 18-year-old hearing and speech impaired girl three years back.

The Additional District and Sessions Judge, Padampur, awarded the sentence against the convict Tiharu Bhue (58) under Section 376(2)(l) of the Indian Penal Code. The Court further imposed fines totaling Rs 35,000, with additional imprisonment in default of payment.

On 29 July 2022, the accused trespassed into the victim’s house and committed rape in the absence of her parents. The victim’s younger sister was a witness to the crime. As the rape survivor’s sibling raised an alarm, she was physically assaulted and threatened by the accused, who later fled the crime scene, according to the case record.

The accused was promptly arrested by local police a day after the crime. Both the victim and the accused were medically examined, and the biological exhibits were sent to the State Forensic Science Laboratory for forensic analysis.

The Court also directed the District Legal Services Authority (DLSA), Bargarh, to initiate the process for victim compensation under relevant legal provisions. This case stands as an example of effective police-prosecution coordination, timely forensic support, and committed judicial oversight in delivering timely justice to a vulnerable victim, said Bargarh Superintendent of Police, Prahlad Sahai Meena.

The case ended in conviction due to timely identification for fast-tracking, prompt police supervision for ensuring procedural efficiency, swift forensic examination by SFSL, timely submission of charge sheet, close coordination between police and public prosecutor, consistent witness production, dedicated prosecution by the counsel to make it a watertight case, SP Meena concluded.



Mr Deaf India 2025 meets Manipur Governor, bats for school for hearing impaired


15.10.2025
Veihriilo Lanah, winner of the Mr. Deaf India 2025 title, called on Manipur Governor Ajay Kumar Bhalla at Raj Bhavan, Imphal, on Tuesday, October 14.

During the meeting, Lanah sought the Governor’s support to participate in the upcoming Mr. Deaf International Contest to be held in Genoa, Italy, from November 28 to December 8, 2025, where he will represent India.

Governor Bhalla congratulated Lanah on his remarkable achievement and praised his efforts toward promoting inclusivity and empowering persons with disabilities. He expressed confidence that Lanah’s participation in the international pageant would bring pride and recognition not only to Manipur but to the entire nation.

Lanah, hailing from Manipur, was crowned Mr. Deaf India 2025 at the 12th edition of the national pageant held in Punjab on August 30–31, 2025.


Thursday, October 16, 2025

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி



15.10.2052 
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.

எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Sunday, October 12, 2025

காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தையா? நான் படிச்சி படிச்சி சொன்னேனே! வீடியோ காலில் கதறிய விஜய்



10.10.2025 
சென்னை: படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டீங்களா என கரூர் மக்களிடம் வீடியோ காலில் பேசிய போது தவெக தலைவர் விஜய் அழுது கொண்டே பேசினாராம். கரூர் சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி வருகிறார்.

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். இதுவரை 41 குடும்பங்களில் 33 குடும்பங்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.

அவர் தங்களிடம் என்ன பேசினார் என்பதை அந்த மக்கள் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவரின மனைவி சங்கவியிடம், விஜய், "என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன். உங்களை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். அது கிடைத்ததும் வந்து சந்திக்கிறேன்" என்றாராம்.

வாய் பேச முடியாத குழந்தை

அது போல் சம்பவத்தில் பலியான காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தையின் தாய், ஊடகங்களிடம் கூறுகையில், "என் பாப்பாவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது என நான் சொல்லும் போதே விஜய் அழுதுவிட்டார். ஏன் சார் எங்களை பார்க்க வரவில்லை? என கேட்ட போது "அவர் கூடிய சீக்கிரம் வருவதாக" தெரிவித்தார். மேலும் எங்களுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தினேனேம்மா

மேலும் விஜய் எங்களிடம் பேசுகையில், "நான்தான் கூட்ட நெரிசலில் குழந்தைகளை தூக்கிட்டு வராதீங்கன்னு சொன்னேனே, நீங்க எங்கம்மா அதை கேட்டீங்க" என ஆதங்கப்பட்டார். அதற்கு நான், "இப்படி நடக்கும் என யாருக்கு சார் தெரியும். எப்படி சார் உங்களை பார்க்காமல் இருக்க முடியும். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாம் உங்களுக்கு ரசிகர்கள்" என சொன்னேன். இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.

20 நிமிடங்கள்

விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளாராம். எத்தனை ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புகளை என்னால் மீட்டு கொண்டு வர முடியாது என்றும் பலரிடம் அழுதிருக்கிறாராம்.
41 பேர் பலி

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழாக வெற்றி கழகத்தின் பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 27 அன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

வீடியோ காலில் விஜய்

இந்தச் சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குப் பிறகு, பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, த.வெ.க தலைவர் விஜய் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் வீடியோ கால்கள் மூலம் பேசத் தொடங்கினார்.

அண்ணனாக இருப்பேன்

வீடியோ காலில் விஜய், நடந்த சம்பவத்திற்காக தனது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்தார். இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம், "நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களுக்குத் துணையாக நிற்பேன்" என்று உறுதியளித்தார். ஒரு குடும்பத்தில், இறந்தவரின் சகோதரியிடம், "நான் உங்களுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்" என்று ஆறுதல் கூறினார். இன்னொரு குடும்பப் பெண்ணிடம் "நான் உங்கள் மகன் போல" என்றும் ஆறுதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேரில் வரேன்

சட்டச் சிக்கல்கள் மற்றும் "சில சிரமங்கள்" காரணமாக தற்போதைக்கு நேரில் வர முடியவில்லை என்றும், விரைவில் அனுமதி பெற்று வந்து குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ரெக்கார்டு செய்ய வேண்டாம்

அரசியல் காரணங்களுக்காக இந்த உரையாடல்களில் எந்தவிதமான புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் விஜயின் குழுவினர் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமே வீடியோவை பதிவு செய்துள்ளார்.


மாற்றுத் திறனாளிகள் வாங்கும் காருக்கான ஜிஎஸ்டி சலுகை ரத்து - அன்புமணி கண்டனம்


12.10.2025 
சென்னை: மாற்றுத் திறனாளிகள் கார் வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வலைதள பதிவில்: "உணவுப் பொருள்கள் தொடங்கி வாகனங்கள் வரை பெரும்பான்மையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்திற்கு முன்பாக அனைத்து மகிழுந்துகளுக்கும் 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்கும் போது அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு, 18% மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சிறிய மகிழுந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய மகிழுந்துகளுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு மாற்றுத் திறனாளிகள் வாங்கும் சிறிய மகிழுந்துகளுக்கான 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருமே சிறிய மகிழுந்துகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. பொதுவாகவே மகிழுந்துகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச் சலுகையை ரத்து செய்வது அநீதியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த இந்த வரிச் சலுகை தான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும் மகிழுந்து வாங்குவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இந்த சலுகை நிறுத்தப்பட்டால் அவர்கள் மகிழுந்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தடைபட்டு போய்விடும்.

எனவே, மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு 8% ஜிஎஸ்டி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.