FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, November 16, 2025

காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15 பேருக்கு விலையில்லா கைப்பேசிகள்



காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ.217 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியா மு.பிரதாப வழங்கினார்.

குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ. 2.17 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுப் பிரச்னைகளைத் தீர்க்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனர்.

இதில், நிலம் சம்பந்தமாக 112, சமூகப் பாதுகாப்பு திட்டம்-55, வேலைவாய்ப்பு வேண்டி-41. பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 46, இதர துறைகள் சார்பாக- 188 மனுக்கள் என மொத்தம் 442 கோரிக்கை மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், பார்வையற்ற மற்றும் காதுகேளாத கல்லூரியில் பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா கைப்பேசிகளையும் அவர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்)கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment