FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, November 16, 2025

காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 15 பேருக்கு விலையில்லா கைப்பேசிகள்



காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ.217 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியா மு.பிரதாப வழங்கினார்.

குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ. 2.17 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுப் பிரச்னைகளைத் தீர்க்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனர்.

இதில், நிலம் சம்பந்தமாக 112, சமூகப் பாதுகாப்பு திட்டம்-55, வேலைவாய்ப்பு வேண்டி-41. பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 46, இதர துறைகள் சார்பாக- 188 மனுக்கள் என மொத்தம் 442 கோரிக்கை மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், பார்வையற்ற மற்றும் காதுகேளாத கல்லூரியில் பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா கைப்பேசிகளையும் அவர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்)கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment