
காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ.217 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியா மு.பிரதாப வழங்கினார்.
குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ. 2.17 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுப் பிரச்னைகளைத் தீர்க்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனர்.
இதில், நிலம் சம்பந்தமாக 112, சமூகப் பாதுகாப்பு திட்டம்-55, வேலைவாய்ப்பு வேண்டி-41. பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 46, இதர துறைகள் சார்பாக- 188 மனுக்கள் என மொத்தம் 442 கோரிக்கை மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், பார்வையற்ற மற்றும் காதுகேளாத கல்லூரியில் பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா கைப்பேசிகளையும் அவர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்)கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment