FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Wednesday, April 7, 2021

ஓவியத்தில் திருக்குறளை விளக்கும் புதுவை பேராசிரியை...!! நாளொன்றுக்கு ஒரு ஓவியத்தை தீட்டி அசத்தல்!! திருக்குறளை காதுகேளாத மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன


புதுச்சேரி: அறிஞர்களை போல உரை எழுதியும், கலைஞரை போல கதை சொல்லியும் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றன புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் சௌமியா. அதாவது ஓவியங்கள் வழியே குரலை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அறம், பொருள், இன்பம் என வாழ்வியலை பகுத்து நீதி சொல்லும் உன்னத படைப்பு திருக்குறள். உலக பொதுமறையாம் திருக்குறளை, ஓவியத்தில் விளக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் புதுச்சேரியில் வசித்து வரும் பேராசிரியை சௌமியா.
குழந்தையுடன் தனியாக வசித்து வரும் சௌமியா, தமிழின் மீதான காதலால் தனது பெயரை 'இயல்' என மாற்றிக்கொண்டார். ஆங்கில இலக்கியங்களை ஓவியமாக்குவதை பார்த்து, திருக்குறளை ஓவியமாக்கும் எண்ணம் இவருக்கு வந்துள்ளது. பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவர்களை பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என சொல்லும், 'பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது'. என்ற குரலை தற்போது ஓவியமாக்கி வருகிறார். இதனையடுத்து வள்ளுவர் ஈரடியில் உலகை அளந்தார் என்றால், அந்த ஈரடியை 15க்கு 15 அடி சென்டி மீட்டர் அளவுள்ள சட்டத்திற்குள் ஓவியமாக வரைந்து விடுகிறார் பேராசிரியை சௌமியா.

இதனையடுத்து சௌமியாவின் இந்த முயற்சிக்கு அவரது தாயார் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சௌமியாவின் இந்த புதிய முயற்சியின் மூலம் திருக்குறளை காதுகேளாத மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இவர் ஒரு ஓவியம் தீட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இதனால் ஒரு நாளைக்கு ஒரு ஓவியம் தீட்டுகிறார். ஜனவரி 1ம் தேதி முதல் ஓவியம் வரைய தொடங்கிய இவர் 2023 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு 1330 குரலையும் ஓவியமாக வரைந்து விடுவதையே இலக்காக கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு அறத்தை சொல்லித்தர திருக்குறள்தான் சிறந்த வழியென்று சொல்லும் இயல் பெற்றோர்கள் திருக்குறை கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




No comments:

Post a Comment