FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, April 7, 2021

ஓவியத்தில் திருக்குறளை விளக்கும் புதுவை பேராசிரியை...!! நாளொன்றுக்கு ஒரு ஓவியத்தை தீட்டி அசத்தல்!! திருக்குறளை காதுகேளாத மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன


புதுச்சேரி: அறிஞர்களை போல உரை எழுதியும், கலைஞரை போல கதை சொல்லியும் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றன புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் சௌமியா. அதாவது ஓவியங்கள் வழியே குரலை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அறம், பொருள், இன்பம் என வாழ்வியலை பகுத்து நீதி சொல்லும் உன்னத படைப்பு திருக்குறள். உலக பொதுமறையாம் திருக்குறளை, ஓவியத்தில் விளக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் புதுச்சேரியில் வசித்து வரும் பேராசிரியை சௌமியா.
குழந்தையுடன் தனியாக வசித்து வரும் சௌமியா, தமிழின் மீதான காதலால் தனது பெயரை 'இயல்' என மாற்றிக்கொண்டார். ஆங்கில இலக்கியங்களை ஓவியமாக்குவதை பார்த்து, திருக்குறளை ஓவியமாக்கும் எண்ணம் இவருக்கு வந்துள்ளது. பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவர்களை பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என சொல்லும், 'பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது'. என்ற குரலை தற்போது ஓவியமாக்கி வருகிறார். இதனையடுத்து வள்ளுவர் ஈரடியில் உலகை அளந்தார் என்றால், அந்த ஈரடியை 15க்கு 15 அடி சென்டி மீட்டர் அளவுள்ள சட்டத்திற்குள் ஓவியமாக வரைந்து விடுகிறார் பேராசிரியை சௌமியா.

இதனையடுத்து சௌமியாவின் இந்த முயற்சிக்கு அவரது தாயார் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சௌமியாவின் இந்த புதிய முயற்சியின் மூலம் திருக்குறளை காதுகேளாத மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இவர் ஒரு ஓவியம் தீட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. இதனால் ஒரு நாளைக்கு ஒரு ஓவியம் தீட்டுகிறார். ஜனவரி 1ம் தேதி முதல் ஓவியம் வரைய தொடங்கிய இவர் 2023 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு 1330 குரலையும் ஓவியமாக வரைந்து விடுவதையே இலக்காக கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு அறத்தை சொல்லித்தர திருக்குறள்தான் சிறந்த வழியென்று சொல்லும் இயல் பெற்றோர்கள் திருக்குறை கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




No comments:

Post a Comment