FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, March 4, 2022

இன்ஸ்டாகிராமில் இணைந்த வாய் பேச முடியாத ஜோடிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்!


ஆன்லைன் யுகத்தில் தினமும் ஆயிரம் காதல் கதைகள் சோசியல் மீடியா மூலமாக முளைக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் துளிர்விடும் முகம் தெரியாத காதல்கள் அனைத்தும் மணவறையை சென்று அடைவது கிடையாது. ஆனால் வாய்பேச முடியாத ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது. மனதை உருக வைக்கும் இன்ஸ்டாகிராம் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி, ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி வந்துள்ளனர். ஆரம்பத்தில் நண்பர்களாக பரஸ்பரம் பழக ஒருவரைப் பற்றி, ஒருவருக்கு நன்றாக புரிதல் வந்துள்ளது. புரிதலின் அடுத்தகட்டம் என்ன காதல் தான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த சிறிது காலத்திற்குள்ளாகவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு, இன்ஸ்டாகிராமில் ஆதரவு குவிந்தது. இதனையடுத்து அத்ரம் லதா, அருண் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க ஜாகிடியலில் உள்ள சமூக சேவகர்கள் குழு முன்வந்தது.

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தி செய்து, பாரம்பரிய முறைப்படி விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கி வாழ்த்தினர்.

முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகியோரது சமூக சேவைக்குழு, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பலருக்கும் உதவி புரிந்துள்ளது. "கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரை ஒருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் இதேபோல் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணத்தில் கூட வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் விருந்தினர்களாக அதிக அளவில் பங்கேற்றது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொண்ட சைகை மொழி நிபுணர் ரஜனி பானர்ஜி, தம்பதிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் திருமண மந்திரங்களை சைகை மொழியில் விளக்கியிருந்தார்.

காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018 இல் 3,000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. இதுபோன்ற முதல் அகராதி, 6,000 சொற்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் மார்ச் 2019 இல் புதுப்பிக்கப்பட்டது.



No comments:

Post a Comment